Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆனந்த சங்கரிக்கு தீப்பொறி கூறும் அறிவுரை.- சங்கரிக்கு இது இறுதி எச்சரிக்கை

Featured Replies

ஒரு காலத்தில் தமிழீழம் தனிநாடு கிடைத்துவிடும் என்று தமிழ் இளைஞர்களுக்கு வாக்குறுதி வழங்கி, நாட்டுப் பிரிவினை நெருப்பை எரியவிட்டார் ஒருவர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் புறந்தள்ளப்பட்ட மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான அவரோ - விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்பு ஊடகங்கள் சில வற்றில் மறுபடியும் முக்கியத்துவம் பெற்றுக்கொண்டு வருகிறார். இவர் வேறு யாரும் இல்லை. தற்பொழுது செயலிழந்த நிலைக்குப் போய்விட்ட ஓர் அரசியல் கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் என்று தொடர்ந்து உரிமை கொண்டாகின்றவரும் கிளிநொச்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்களே! இலங்கை நீதி மன்றம் ஒன்றின் தீர்ப்பின் வாய்ப்பை ஒட்டித் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் என்று இவர் தம்மைத் தாமே அழைத்துக் கொள்ள முடிகிறது. நீதி மன்றம் மட்டும் குறுக்கிடமால் போயிருந்தால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் பதவியிலிருந்து இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே தூக்கியெறியப்பட்டு இருப்பார். எத்தனையோ ஆண்டுகளாக இந்நாள் வரை ஒருபோதும் கூட்டங்களே நடத்தாத ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என்று தம்மைத் தாமே அழைத்துக்கொள்வதற்கு அவர் வெட்கப்படவேண்டும். குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் கைகள், வீசி எறிகின்றவற்றையே கடித்துத் தின்கின்றவரே அவர்! அந்த மகிந்தாவால் அமர்ததப்பட்ட இலங்கை இராணுவம் அல்லது தனி அதிரடிப் படைவீரர்கள் பாசறையைச் சோந்த ஏறத்தாழ 60 பேர்களால் அவர் பாதுகாக்கப்படுகிறார். இப்பொழுது, இந்தச் சிங்களப் பாதுகாப்புப் படை அணியினரால்தான் அவர் கழட்டப்பட்டு இருக்கிறார். கருணா இப்போது பனாகொடை இராணுவமுகாமுக்குள் எப்படி இருக்கிறாரோ அதே போன்றுதான் இவரும் இருக்கிறார். நீங்கள் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வீர்கள் என்றால், தமிழ் வார்த்தைகளையோ ஆங்கில வார்த்தைகளையோ நீங்கள் கேட்கமாட்டீர்கள்! ?கவுத கதாகரண்ணே? என்றும் சிங்கள சொற்களையே கேட்பீர்கள். அவர் அண்மைக்காலக் கடைசித் துண்டு அறிக்கை என்ன தெரியுமா? தன் மீது உள்ளன்பு மிக்க இலங்கையின் நாட்டுப் பற்றுள்ள குடிமக்களுக்கும் அமைதி விரும்பிகளுக்கும் அவர் எழுதியுள்ள நீண்ட கடிதம்தான்! அப்படிப்பட்ட கடிதங்களில் எதையாவது, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் தமது பரபரப்பான அரசியல் நடவடிக்கை நாள்களில், தம்முடைய சிங்கள உடன் பிறப்புகளுக்கு அவர் எழுதியது உண்டா? இல்லை! அதற்கு மாறாக, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சிங்களவருக்கு எதிரான வெறுப்பு உணர்ச்சியையே தமிழ் மக்கள் இடையே அவர் பரப்பிக்கொண்டு இருந்தார் 2004வரை. அடக்குமுறைக் கொடுமைகள் கொண்ட சிங்கள ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்து போராடுவதற்குத் தமிழ்மக்களைத் தூண்டி விட்டவர்களில் இவரும் ஒருவர்.

தம்மைப் பற்றிய அறிமுகத்தில் - தற்போது எழுதியுள்ள நீண்ட கடிதத்தில் - எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை மற்றும் வன்கொடுமையற்ற அமைதிவழி ஆகியவற்றை மேம்படுத்தியமைக்காக, ஐக்கிய நாடுகள் மன்ற கல்வி, அறிவியல் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ ?வின்) ?மதன் சீத் சிங் பரிசு? 2006ஆம் ஆண்டுக்கு உரியதைப் பெற்றுவிட்ட வெற்றியாளராகப் பெருமிதச் செருக்கோடு அவர் கூறியுள்ளார். ஆனால், மகிந்தா ராஜபக்சே அரசினால் நியமிக்கப்பட்ட ஒரு இலங்கைக் குழுவினால்தான், இந்தப் பரிசுக்கு உரிய முதல் தொடக்கப்பரிந்துரை செய்யப்பட்டது என்னும் உண்மையை அவரால் எப்படி மறைக்க முடியும்? என்ன இருந்தாலும் கேவலம், அவருடைய நன்றி பக்தியுள்ள ஊழியங்களுக்காக அவரின் தலைவர் (எசமானர்) மகிந்தா ராஜபக்சேவால் கொடுக்கப்பட்ட மறைமுக அன்பளிப்புத் தானே அந்த யுனெஸ்கோ பரிசு? அந்தப் பரிசினுடைய அத்தகைய ஒரு செருக்கான பெருமைக் குறிப்பை ? இவர் போன்ற ஒரு மனிதரால் மட்டுமே கூறமுடியும்! தன்னைத்தானே புகழ் மிக்கவராக உயர்த்திக் கொள்ள சாதாரணமாக ஓராயிரம் உயிர்களையும் பலிகொடுப்பதற்குத் தயங்காத ஒரு மனிதர்தான் என்று ?விடுதலைப் புலிகள்? இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனைத் தமது திறந்த மடலில் சங்கரி குற்றம் சாட்டி உள்ளார். ஆனால், மறுபுறத்திலே, எல்லாச் சமூக மக்களும், மதக்குழுக்களும் ஒருங்கிணைந்து இனிய உறவோடு வாழக் கூடிய அமைதியைக் கொண்டு வந்து, தேசிய நெருக்கடிச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்காகத் தம்மால் முடிந்தவற்றையெல்லாம் செய்கின்ற ஒருவர் என்று குடியரசுத் தலைவர் மகிந்தா ராஜபக்சேயை மகாநாயகே புத்த பிக்குகளின் வார்த்தைகளைக் கடன் வாங்கிக்கொண்டு புகழ்கிறார் ஆனந்த சங்கரி.

தற்போதைய பிரச்சினை (சிக்கல்) பிரபாகரனால் உருவாக்கப்பட்டது மட்டுமே அல்ல என்பதை அவர் உணர்ந்து பார்க்க வில்லையா? ஓர் இணை ? குற்றவாளியாக மகிந்த ராஜபக்சேயை நோக்கியும் அனைத்துலகச் சமூதாயம் குற்றம் சாட்டி கை விரலை நீட்டுவதை இவர் உணரவில்லையா? உலகத்திலேயே மனித உரிமைகள் மீறலைப் பொறுத்து ஒரு கொடுமையான சாதனையைப் படைத்துள்ள, மிக உச்சக்கட்ட நெருக்கடிகளில் சிக்கியுள்ள மூன்று நாடுகளில். சூடான் மற்றும் சோமாலியாவோடு சேரக்கூடியதாக இலங்கை நாட்டை ஆண்டு வருவதுதான் ராஜபக்சேயின் குடும்பம் என்று ஐக்கிய நாடுகள் மன்றப் பாதுகாப்புக் குழுவே வகுத்துக்காட்டியிருப்பதையு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.