Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கில் தேர்தல்களை நடத்தினால் வன்முறை வெடிக்கும்: மட்டக்களப்பு ஆயர்.

Featured Replies

கிழக்கில் தேர்தல்களை நடத்தினால் வன்முறை வெடிக்கும்: மட்டக்களப்பு ஆயர்.

கிழக்கில் தேர்தல்களை சிறிலங்கா அரசாங்கம் நடத்தினால் வன்முறை வெடிக்கும் நிலைமை ஏற்படும் என்று மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்ட ஆயர் கிங்க்ஸ்லி சுவாமிபிள்ளை எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் பி.பி.சி.யின் சிங்கள சேவையான "சந்தேசிய"வுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:

கிழக்கில் நிலைமை சற்றுப் பரவாயில்லை. ஆனால் பிரச்சினைகள் இன்னமும் உள்ளன. கிழக்கின் பெரும்பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் மட்டக்களப்பின் மேற்குப் பகுதியில் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோதல் நடைபெற்று வருகிறது.

தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளால் நியாயமான நீதியான தேர்தல் நடைபெறாது என்பதே எமது கருத்து. தேர்தல் நடத்தினாலும் வன்முறைகள் நிகழாது எனக்கூற முடியாது. தேர்தல் நடத்துவது என்பது புத்திப்பூர்வமானதல்ல.

வடக்கு - கிழக்கில் எமது தேவாலயம் இயங்குவதால் தொடக்கத்திலிருந்தே விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று எம்மைக் கூறி வருகின்றனர். அரசியல்வாதிகள் மீது வடக்கு - கிழக்கு மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். வாக்குறுதிகளையும் ஒப்பந்தகளையும் தூக்கி எறிகின்றவர்களாக அரசியல்வாதிகள் உள்ளனர்.

வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மீதான இனப்பாகுபாடு என்பது ஒழிக்கப்பட வேண்டும்.

மகிந்த அரசாங்கம் அமைத்திருக்கும் அனைத்துக் கட்சிக் குழுவினால் கூட இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களினது அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும். அதற்காக நான் பிரிவினைவாதம் பேசுவதாகக் கருதக்கூடாது.

ஆட்கடத்தல் சம்பவங்கள் என்பவை பணத்துக்காக மேற்கொள்ளப்படுகின்றன. இதில் ஆயுதம் தாங்கிய குழுக்களுக்குத் தொடர்பு உள்ளன. மக்களை உளவியல் ரீதியாக சித்திரவதை செய்கிற நோக்கத்துடனும் இத்தகைய கடத்தல் சம்பவங்கள் நிகழ்த்தப்படுகின்றன. சுதந்திரமாக நடக்கவோ பேசவோ பணி செய்யவோ முடியாத ஒருவித கொடூர நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.

ஆயுதம் தாங்கிய குழு யாராக இருந்தாலும் அவர்களை அழிக்காமல் அமைதி குறித்து பேசவும் முடியாது. அமைதியை உருவாக்கவும் முடியாது. பயங்கரவாதத்தின் ஆணிவேர் குறித்து அரசாங்கம் ஆராய வேண்டியது அவசியமாகும் என்றார் அவர்.

-Puthinam-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.