Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயணிகள் விமானங்களுக்கான கட்டுப்பாடு நீக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயணிகள் விமானங்களுக்கான கட்டுப்பாடு நீக்கம்

July 31, 2021

spacer.png

முழுமையாக தடுப்பூசிகள் பெற்ற விமானப் பயணிகளை இலங்கைக்குள் அழைத்து செல்லும் பொழுது, இதுவரையிலும் நடைமுறையிலிருந்த, விமானமொன்றிற்கான ஆகக் கூடுதலாக 75 பயணிகள் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.

விமானங்களில் செல்லும் பயணிகள் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருப்பதற்கான எழுத்து மூலமான ஆதாரம் முன்வைக்கப்பட வேண்டும் எனவும் இரண்டு டோஸ்களையும் பெற்று 14 நாட்கள் நிறைவடைந்த பயணிகளை, அதிகபட்ச பயணிகளைக் கொண்ட விமானத்தில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான சேவை அதிகார சபை அறிவித்துள்ளது.

அதேவேளை, தடுப்பூசியின் முதலாவது டோஸ் அல்லது எந்தவொரு தடுப்பூசியும் வழங்கப்படாத பயணிகளை ஒரே விமானத்தில் 75 பேரை மட்டுமே அழைத்துவர முடியும் என்பதுடன் அந்தப் பயணிகள் இலங்கைக்கு சென்றதன் பின்னர் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

https://globaltamilnews.net/2021/164067

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம் திறந்து விடுகினம் இன்னொரு பக்கம் சைனாவில் உருமாறிய கொரனோ தனது ஆட்டத்தை தொடங்கி உள்ளது இம்முறையும் அரசுகள் அந்த கொரனோ  நாடுகளுக்குள் சைனீஸ் மக்கள் மூலம் வந்து பரவியதன் பின்தான் தடை போடுவினம் ஆக்கும் .

சைனாவில் கொரனோ ஆட்டத்தை ஆரம்பிக்கும் போதே பல ஊடகங்கள் கரடியாக கத்தினவை சைனீஸ் புத்தாண்டு கொண்டாடட்டத்துக்கு போனவர்கள் திரும்பி வரும்போது நோயுடன் வந்து பரப்ப போகினம்  என்று ஒருத்தரும் கண்டுகொள்ளவில்லை. இனி உள்ளே வந்தபின்தான் நித்திரையால் அரசுகள் விழிப்பினம்  போல் உள்ளது ...

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பெருமாள் said:

ஒரு பக்கம் திறந்து விடுகினம் இன்னொரு பக்கம் சைனாவில் உருமாறிய கொரனோ தனது ஆட்டத்தை தொடங்கி உள்ளது இம்முறையும் அரசுகள் அந்த கொரனோ  நாடுகளுக்குள் சைனீஸ் மக்கள் மூலம் வந்து பரவியதன் பின்தான் தடை போடுவினம் ஆக்கும் .

சைனாவில் கொரனோ ஆட்டத்தை ஆரம்பிக்கும் போதே பல ஊடகங்கள் கரடியாக கத்தினவை சைனீஸ் புத்தாண்டு கொண்டாடட்டத்துக்கு போனவர்கள் திரும்பி வரும்போது நோயுடன் வந்து பரப்ப போகினம்  என்று ஒருத்தரும் கண்டுகொள்ளவில்லை. இனி உள்ளே வந்தபின்தான் நித்திரையால் அரசுகள் விழிப்பினம்  போல் உள்ளது ...

அபிவிருத்திக்கு சீனா வேணும் 
கடலட்டை வியாபாரத்துக்கும் சீனா வேணும்

அவனின்ட கோரானா வேண்டாம் என்பது என்ன நியாயம் ?....நியாயத்தை கதைக்க வேண்டும் ...
மக்கள் கொரானா தடுப்பூசியை போட்டு அபிவிருத்தியை தொடர விரும்புகிறார்கள் ..என்று  நான் சொன்னா நீங்கள் நம்பவா போறீங்கள் 😀..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.