Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜம்மு – காஷ்மீரின் புதிய மாற்றங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு – காஷ்மீரின் புதிய மாற்றங்கள்

அரசிலமைப்பின் 370 ஆவது பிரிவு இரத்து செய்யப்பட்டதன் பின்னர் ஜம்மு – காஷ்மீரில் அரசியல், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி உட்பட ஏனைய ஜனநாயக உரிமைகள் என்பவற்றில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 

108,621 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் அனைத்து துறைசார் அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பள்ளிக் கல்வி சீரமைப்பு, தொழிற்கல்வி ஊக்குவித்தல், ஜம்மு - காஷ்மீர் முழுவதும் உள்ள பள்ளிகளில் 607 தொழிற்பயிற்சி கூடங்களை அமைத்தல் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் லெப்டினன்ட் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

01.jpg

அரசியல் முன்முயற்சிகள்

ஜம்மு – காஷ்மீரில் அரசியல் ஸ்தீரதன்மையை ஏற்படுத்துவதற்கும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்குமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அங்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்கள் முக்கியமானதாகின்றது. அக்டோபர் 2019 இல் நடைபெற்ற முதல் தொகுதி மேம்பாட்டு கவுன்சில் தேர்தல்.

அதே போன்று 2020 ஆம் ஆண்டின் இறுதியில் ஜம்மு – காஷ்மீரில் யூனியன் பிரதேசத்தின் 20 மாவட்டங்களில் மாவட்ட அபிவிருத்தி கவுன்சில் தேர்தல் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் இந்த தேர்தல்கள்  அனைத்து துறைசார் வளர்ச்சிக்கு வித்திட்டது.

மேலும் அனைத்து கட்சிகள் கூட்டத்தை கடந்த ஜூன்  மாதம் 24 திகதி  பிரதமர் நரேந்தி மோடியால் நடத்தப்பட்டது. ஜம்மு – காஷ்மீரின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். 

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜனநாயக அரசியல் செயல்முறைகளை மீண்டும் நிலைநாட்ட உறுதிப்பூண்டனர். எல்லை நிர்ணய ஆணையம்  கடந்த ஜூலை 06  ஆம் திகதி ஜம்மு – காஷ்மீரில அரசியல் கட்சிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்தியது. 

இதன்போது  அனைத்து துணை ஆணையர்களிடமிருந்தும் அறிக்கைகளைக் பெற்றுக்கொள்ளப்பட்டது. இதனூடாக யூனியன் பிரதேசத்தில் காணப்பட கூடிய எல்லை பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொள்வதாகும்.  

Modi-JK-Meeting.jpg

பாதுகாப்பு

அரசிலமைப்பின் 370 ஆவது பிரிவு இரத்து செய்யப்படுவதற்கு முன்பு  அதாவது 2018  ஜூன் 29 ஆம் திகதி முதல் 2019 ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை ஜம்மு -காஷ்மீரில் 455 பயங்கரவாத சம்பவங்கள் நடந்தன.

2019 ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல்  2020  செப்டம்பர்  9ஆம் திகதி யூனியன் பிரதேசத்தில் 211 பயங்கரவாத சம்பவங்கள் நடந்தன. இந்த ஆதாரங்கள் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்றத்தின் தன்மை வெளிப்படுத்துகின்றன.

பயங்கரவாத அமைப்புகளில் உள்ளூர் இளைஞர்களின் ஈடுபாடு  40வீதமாக குறைந்துள்ளது. அத்துடன் 2019 ஆகஸ்ட் 5 க்கு பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறை சம்பவங்கள் கணிசமாக குறைந்துள்ளது. 

குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் 188 பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் 2019 ஜனவரி 1 முதல்  ஜூலை 15 வரை பதிவாகியது. இந்த எண்ணிக்கை 2020 இல் 120 ஆகக் குறைக்கப்பட்டது.

காஷ்மீரில் 2019 ஜனவரி 1 முதல் ஜூலை 15 வரை 126 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 2020 இல் 136 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர். காஷ்மீரில் 2019 ஜனவரி 1 முதல் ஜூலை 15 வரை 51 கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடைப்பெற்றுள்ளன. 

அதேநேரத்தில் 2020 இல் இந்த எண்ணிக்கை 21 ஆக குறைந்தது. இவ்வாறு பல கட்டமாக அந்த பகுதியில் அமைதியை நிலை நாட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன் பாதுகாப்பு படையினர் 22 பயங்கரவாத மறைவிடங்களை முறியடித்து துப்பாக்கிகள் உட்பட 190 ஆயுதங்களை மீட்டனர். 

இன்று யூனியன் பகுதியில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் பலனை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் சமூகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் இடஒதுக்கீடு சலுகைகளைப் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் உரித்துடையவர்கலாக உள்ளனர். 

பெண்களின் உரிமைகள் முழு அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.  ஜம்மு -காஷ்மீருக்கு வெளியே திருமணம் செய்யும் பெண்களின் மற்ற அனைத்து உரிமைகளும் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றன.

2.jpg

அபிவிருத்திகள்

ஜம்மு - காஷ்மீரின் 1,08,621 கோடி பட்ஜெட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 39,817 கோடி  மூலதனச் செலவிற்காகவும், ரூ. 68,804 கோடி வருவாய் செலவினங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.  37வீதம் ஒதுக்கீடு அபிவிருத்தி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீநகரில் 500 படுக்கைகள் கொண்ட கொவிட் -19 தடுப்பு சிகிச்சை நிலையத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைத்துள்ளது.  ஜம்மு - காஷ்மீரில் மின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பொருட்டு, ஆளுநர் லெப்டினன்ட் மனோஜ் சின்ஹா ரூ .118.91 கோடி மதிப்பிலான 17 மின் திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.

மேலும் பள்ளிக் கல்வியை சீரமைப்பதற்கும், தொழிற்கல்வி படிப்புகளை ஊக்குவிப்பதற்கும், ஜம்மு - காஷ்மீர் முழுவதும் உள்ள பள்ளிகளில் 607 தொழிற்பயிற்சி கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
 

https://www.virakesari.lk/article/110713

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.