Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா Vs அமெரிக்கா: அடுத்த தலைமுறை போர் விமானங்களில் யாருடையது ஆதிக்கம் செலுத்தும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனா Vs அமெரிக்கா: அடுத்த தலைமுறை போர் விமானங்களில் யாருடையது ஆதிக்கம் செலுத்தும்?

  • உமர் ஃபாரூக்
  • பாதுகாப்பு ஆய்வாளர்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
ஃபைட்டர் ஜெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சண்டை விமானம்.

விமானப்படைக்கு ஆறாவது தலைமுறை 'ஸ்டெல்த்' போர் விமானத்தை தயாரிப்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஒரு புதிய ஆயுதப் போட்டி தொடங்கியிருக்கிறதா?

கிடைக்கும் சமிக்ஞைகளைப் பார்த்தால் இந்த கேள்விக்கான பதில் 'ஆம்' என்றே தோன்றுகிறது.

'ஆறாவது தலைமுறை' போர் விமானங்கள் மூலம் 'அடுத்த தலைமுறை வான்வெளி ஆதிக்கம்' (NGAD) என்ற திட்டம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று அமெரிக்க விமானப்படை 2021 ஜூன் மாதம் அறிவித்தது.

புதிய, அதிநவீன போர் விமானங்கள், எஃப் -22 ராப்டரின் இடத்தில் கொண்டுவரப்படும் என்றும் அவை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யும் திறன் பெற்றவை என்றும் அமெரிக்க விமானப்படையின் (யுஎஸ்ஏஎஃப்) தலைமை அதிகாரி ஜெனரல் சார்லஸ் க்விண்டன் பிரவுன் ஜூனியர், அமெரிக்க நாடாளுமன்ற ராணுவ கமிட்டியிடம் தெரிவித்தார்.

 

இந்த போர் விமானத்தின் முக்கிய நோக்கம் வான்வெளியில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதாக இருக்கும் என்று 2022 நிதியாண்டுக்கான பட்ஜெட் யோசனை தொடர்பாக பேசிய விமானப்படைத் தலைவர் குறிப்பிட்டார். ஆனால் அதே நேரத்தில், இந்த போர் விமானங்கள் தரை இலக்குகளை குறிவைக்கும் திறன் கொண்டவை என்றும் அவர் தெரிவித்தார்.

"ஆறாவது தலைமுறை போர் விமானம் " வானத்திலிருந்து தரை இலக்குகளை தாக்கும் திறனைக் கொண்டுள்ளது. தனது பாதுகாப்பை முதன்மையாக கொண்டுள்ள இது, நமது விமானப்படை தளபதிகளுக்கும் கூட்டுப் படைகளுக்கும் விருப்பத்தேர்வுகளை வழங்குவதாகவும் இருக்கும்," என்றார் அவர்.

"என்ஜிஏடி போர் விமானம், எஃப் -22 இன் செயல்பாட்டு வரம்பையும் விரிவுபடுத்தியுள்ளது. இது அதிக அளவு ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளை எடுத்துச் செல்லும் திறனைக் கொண்டுள்ளது, இது இந்தோ-பசிபிக் (இந்தியப் பெருங்கடல், ஆசியா முதல் ஆஸ்திரேலியா மற்றும் கிழக்கு அமெரிக்க) பிராந்தியம் முழுவதும் பயணித்து குறிவைக்கும் திறனைக் கொண்டுள்ளது,"என்று பிரவுன் மேலும் கூறினார்.

NGADகள் எப்பொழுதும் " ஃபேமிலி சிஸ்டம்" என்றே அழைக்கப்படுகின்றன. எதிரிகளின் பைலட் இல்லாத விமான தாக்குதல் திறன்களை அழிக்க, மின்னணு தாக்குதல் போன்ற பணிகளைச் செய்ய, மற்றும் கூடுதல் ஆயுதங்களைக் கொண்ட ஒரு இயந்திரமாக இவற்றைப் பயன்படுத்தமுடியும். ஆனால் அதன் அடிப்படை அமைப்பு விமானம்தான் என்று அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

சீனாவில் இருந்து அச்சுறுத்தல்

ஃபைட்டர் ஜெட்

பட மூலாதாரம்,US AIRFORCE

 
படக்குறிப்பு,

சண்டை விமானம்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீன விமானப்படை, தரையிலிருந்து தரை இலக்கை தாக்கவல்ல ஏவுகணைப் படை ஆகியவற்றின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்த ஆயுத அமைப்பை அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

நவீன சீன விமானங்கள், நீண்ட தூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணைகளின் அடுத்த தலைமுறை சவால் அருகாமையில் இருக்கிறது என்று செயல்திட்டம், ஒருங்கிணைப்பு மற்றும் தேவைகளுக்கான தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் எஸ். கிளின்டன் ஹை நோட், கூறினார்.

நீண்ட தூர போர் விமானங்களை அறிமுகப்படுத்துவது "வெளிப்படைத்தன்மை" பிரசாரத்தின் ஒரு பகுதியாகும். சீனாவினால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து காங்கிரசை எச்சரிப்பது, இதை எதிர்த்து சமாளிக்க ஆற்றல்மிக்க ஒரு முறைமையை கொண்டுவருவதும் இதன் நோக்கமாகும்.

"ஜே -20 போன்ற அதிநவீன ஏவுகணைகள் அமெரிக்க விமானப்படைக்கு அச்சுறுத்தலாக மாறும் நேரம் நிச்சயமாக நெருங்குகிறது," என்று ஹை நோட் குறிப்பிட்டார்.

ஜே -20 என்பது சீனாவின் முதல் ஸ்டெல்த் (ரேடார் மற்றும் மேம்பட்ட உபகரணங்கள் மூலம் கண்டுபிடிக்க முடியாதது) போர் விமானமாகும். தற்போது இது பயன்பாட்டில் உள்ளது.

"இது (சீன விமானம்) ஒரு அச்சுறுத்தலாக உள்ளது. நாம் அதை எதிர்த்து சமாளித்தாக வேண்டும்."என்றார் ஹை நோட்.

சீன விமானப்படைக்கும் அமெரிக்க விமானப்படைக்கும் இடையே பரஸ்பர குற்றம்சாட்டல் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

சீன போர் விமானம்

பட மூலாதாரம்,XINHUA

 
படக்குறிப்பு,

சீன வான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் போர் விமான தயாரிப்பு மாதிரி

கடந்த ஆண்டு சீனாவின் முன்னணி ஆங்கில செய்தித்தாள் குளோபல் டைம்ஸில் வெளியிடப்பட்ட கட்டுரையில், "ஆறாவது தலைமுறை போர் விமானங்களுக்கான உலகளாவிய பந்தயத்தில் சீனா பின்தங்கியிருக்காது, அடுத்த தலைமுறை போர் விமானங்களை 2035 க்குள் சீனா உருவாக்கும்."என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஆறாவது தலைமுறை போர் விமானங்கள் 2035 இல் அறிமுகப்படுத்தப்படும் என்று முன்னணி சீன போர் விமான நிபுணர் வாங் ஹெஃபெங் கூறினார்.

வாங் ஹெஃபெங், செங்டு விமான ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர் ஆவார். இவர் J-20 மற்றும் J-10 போர்விமானங்களின் கட்டுமானத்திலும் பங்கேற்றுள்ளார்.

ஜோ-சியானில் இருக்கும் தேசிய பாதுகாப்புத் கழகம், தொழில்- அறிவியல் தொழில்நுட்ப அறிக்கையை ஜனவரி மாதம் வெளியிட்டது.

ஆறாவது தலைமுறை போர் விமானத்தில் புதிய தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது என்று இந்த அறிக்கை கூறுகிறது. இதில் கமாண்டிங் ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் ஏரோடைனமிக் (காற்று எதிர்ப்பைக் குறைப்பதன் மூலம் வேகமாக பறக்கும் திறன்) வடிவமைப்பு மூலம் உயர்தர ஸ்டெல்த் திறன் உட்பட. பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று இந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

ஃபைட்டர் ஜெட்

பட மூலாதாரம்,CONTRINUTOR

 
படக்குறிப்பு,

இந்த வானம் யார் வசம்?

சீனா இந்த அம்சங்களில் சிலவற்றை தேர்வுசெய்து, தேவைகளுக்கு ஏற்ப அவற்றை விமானத்தில் இணைக்கும்.

பாகிஸ்தான் நிபுணர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?

இஸ்லாமாபாதில் வசிக்கும் பாதுகாப்பு ஆய்வாளர் ஷாஹித் ராசா,"சீனா ஐந்தாவது தலைமுறை ஜே -20 தொடரை சமீபத்தில் உருவாக்கியதைத் தொடர்ந்து அமெரிக்க விமானப்படை, குறிப்பிட்ட நோக்கத்துடனும் குறிக்கோளுடனும் இந்த விமானத்தை உருவாக்குகிறது,"என்று பிபிசியிடம் கூறினார்..

இந்த விமானத்தில் அமெரிக்கா, ஆறாவது தலைமுறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் நோக்கம் , சீனா போன்ற தனது பாரம்பரிய போட்டியாளரிடமிருந்து வான் ஆதிக்கத்தை கைப்பற்றுவதாகும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

"இந்த விமானங்கள் பெரும்பாலும் அமெரிக்காவுக்குள் நிறுத்தப்படும், ஆனால் பதற்றம் அதிகரிக்கும் போது, சீனாவுடனான அதிகார சமநிலையை சீர்குலைக்க, ஆறாவது தலைமுறை போர் விமானங்களை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலைநிறுத்த முடியும். இதன் விளைவாக, சீனா ஆறாவது தலைமுறை தளத்தை தயாரிக்கத் தொடங்கக்கூடும்,"என்று ஷாஹித் ராசா குறிப்பிட்டார்.

இந்த புதிய தொழில்நுட்பம், தெற்காசிய பிராந்தியத்தையோ, பாகிஸ்தானையோ அதிகம் பாதிக்காது என்று அவர் கூறினார்.

"அமெரிக்க அரசு, தனது நெருங்கிய நட்பு நாடுகளுக்கு F 22 ராப்டர் விமானங்கள் ஏற்றுமதியை அனுமதிக்காதது போலவே, தொழில்நுட்பக் கவலைகள் காரணமாக இந்தியா உட்பட அதன் கூட்டாளி நாடுகளுடன் 6 வது தலைமுறை தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளாது என்றே நான் நினைக்கிறேன்," என்றார் ஷாஹித் ராசா.

"இந்த விமானத்துக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த சிறப்பு உறவும் இல்லை. எதிர்காலத்தில் விமானத் திறனுக்கு ஒரு புதிய முன்னுதாரணமாக அது இருக்கும்,"என்று அவர் கூறினார்

ஆறாவது தலைமுறை F-22 உடன், வேகமான மற்றும் மெதுவான வேகங்களின் இணைப்பு (அதாவது 'F-15, E' உடன் F-16 ஐ இணைந்து பறப்பதைப்போல) முக்கிய பாத்திரத்தை வகிக்கும் என்று மற்றொரு பாகிஸ்தான் நிபுணரும் முன்னாள் பாகிஸ்தான் விமானப்படை பைலட்டுமான கைசர் துஃபைல் பிபிசியிடம் கூறினார்.

அமெரிக்க விமானப்படையின் அதிநவீன முன்னணி விமானம் என்பதால், இது நேட்டோ நாடுகளுக்கு (இந்தியாவுக்கு அல்ல) எளிதாக ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே, இப்பகுதியில் ஒரு பெரிய புவிசார் அரசியல் மாற்றம் ஏற்படாதவரை, தெற்காசியாவுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இருக்காது என்று தெரிகிறது.

பங்கு

ஃபைட்டர் ஜெட்

பட மூலாதாரம்,US AIRFORCE

 
படக்குறிப்பு,

சண்டை விமானம்.

அமெரிக்க விமானப்படையின் தலைவர்கள் 2022 நிதியாண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவை சமர்ப்பிக்கும் போது இந்த போர் விமானத்தின் முக்கிய பங்கு , வான்வெளி ஆதிக்கம் அல்லது இறையாண்மையை நிலைநிறுத்துவதாகும் என்று கூறினர். ஆனால் அது தரை இலக்குகளை தாக்கும் திறனையும் கொண்டிருக்கும் .

அமெரிக்க விமானப்படை தனது போர் விமானப்பிரிவை, F-35, F-15EX, F-16 மற்றும் NGAD உட்பட நான்கு வகையான விமானங்களுடன் மட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரவுன் கூறினார்.

"என்ஜிஏடி' போர் விமானம் எஃப் -35 உடன் இணைந்து பறக்கும் என்று அவர் குறிப்பிட்டார். ஆரம்பத்தில் முக்கிய விமானமான எஃப் -15 எக்ஸ், பின்னர் எஃப் -16 விமானமும் நம்மிடம் இருக்கும்" என்றார் பிரவுன்..

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கோரிக்கைகளை வெளியிட்டது. NGAD க்கு தேவையான நிதி அதில் கோரப்பட்டுள்ளது.

NGAD திட்டத்தை முன்னெடுத்துச்செல்ல அமெரிக்க விமானப்படை ,1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை கோருகிறது. இது முந்தைய ஆண்டை விட சுமார் 623 மில்லியன் டாலர்கள் அதிகமாகும்.

தலைமைத் தளபதி ஜெனரல் சார்லஸ் க்விண்டன் பிரவுன் ஜூனியர் "நாம் மாற்றத்தின் ஒரு கட்டத்தில் இருக்கிறோம்."என்றார்.

"விமானப்படை தனது தற்போதைய பலத்தை ஓரளவு குறைத்து (சில விமானக்களை நீக்கி) அதன் மூலம் சேமிக்க முடியும் என்றும் இதைக்கொண்டு புதிய விமானங்களை உருவாக்கமுடியும். அதாவது சீனா போன்ற ஒரு முக்கிய போட்டியாளரை தோற்கடித்து மிரட்டும் திறன் கொண்ட விமானங்கள்," என்று அவர் தெரிவித்தார்.

இன்று நாம் இந்த நடவடிக்கையை எடுக்கத் தவறினால், எதிர்காலத்தில் வான் யுத்தத்தில் சீனா அமெரிக்காவை தோற்கடிக்க வாய்ப்புள்ளது என்று அவர் எச்சரித்தார்.

அடுத்த தலைமுறை விமான மேலாதிக்க அமைப்புகள் (புதிய தலைமுறை அதிநவீன போர் விமானங்கள்) விமானப்படையின் போர் விமானங்களில் 'வைல்ட் கார்ட்' (எதிர்பாராமல் அல்லது திடீரென்று) முறையில் சேர்க்கப்படும். இதற்கென பட்ஜெட் 2022 இல், 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் கோரப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த திட்டத்தின் பெரும்பகுதி ரகசியமானது. இருப்பினும் சில விவரங்கள் வெளிவந்துள்ளன.

முதல் என்ஜிஏடி 2020 ல் பறக்க விடப்பட்டது என்று முன்னாள் விமானப்படை அதிகாரியான வில் ரூபர் கடந்த செப்டம்பரில் கூறினார். மிக அதிக உயரத்தில் பறக்கும் சாதனை அப்போது படைக்கப்பட்டது, இதைக்காட்டிலும் அதிக உயரத்தில் பறக்கும் திறன் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

என்ஜிஏடி, தரை இலக்கு மீது தாக்குதல் நடத்துவது மட்டுமல்லாமல், வானில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட பலநோக்கு விமானமாக இருக்கும் என்று தான் எதிர்பார்த்ததாக பிரவுன் கூறினார்.

"இந்த விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய தரை இலக்கை தாக்கும் திறன் தேவையாக இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.

போர் விமானங்கள் முழுமையான ஸ்டெல்த் திறன் கொண்டிருக்கவேண்டும்.

ஃபைட்டர் ஜெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சண்டை விமான உருவாக்கத்தில் போட்டி

இத்தகைய வடிவமைப்புகளை விரைவாக உருவாக்கி, 'டிஜிட்டல் த்ரெட்' (நவீன தகவல் தொடர்பு அமைப்பு) மூலம், தளத்தில் தற்போதுள்ள விமானங்களை, அதாவது 50 முதல் 100 வரையிலான வரையறுக்கப்பட்ட அளவுகளில் அவற்றை பயன்படுத்துவது என்ஜிஏடியின் நோக்கம் என்றும் ரூபர் கூறினார்.

தொழில்நுட்பத்தை நவீன மற்றும் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க ஏதுவாக, புதிய போட்டி வடிவமைப்பு (விமானம்) ஐந்து முதல் பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் விமானப்படையில் இருக்கும். பழைய மாடல்கள் நீக்கப்படும்.

NGAD யில் இரண்டு மாதிரிகள் அதாவது இரு வகை விமானங்கள் இருக்கவேண்டும் என்று அமெரிக்க விமானப்படை உயர் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். அதாவது ஒன்று ஐரோப்பிய பகுதிக்கு சென்று தாக்கவல்ல, குறைந்த தூரம் பயணம் செய்யக்கூடியது. இரண்டாவது பிசிபிக் பகுதியை அடையக்கூடிய நீண்ட வரம்பைக் கொண்டது.

NGAD களத்தில் நுழைய குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும் என்று ஹை நோட் கருதுகிறார்.

https://www.bbc.com/tamil/global-58100804

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.