Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்கள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்கள்..!

இந்தியாவில் இன்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் சுதந்திர தின விழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.  

01.jpg

விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலையில் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, முதலில் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார். 

02.jpg

பின்னர் விழா நடைபெறும் செங்கோட்டைக்கு வந்துள்ள அவரை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதி அமைச்சர் அஜய் பட், பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். அதன்பின்னர் பிரதமருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டதன் பின்னர், பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

03.jpg

 அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தேசியக் கொடி ஏற்றும் போது முதல் முறையாக இரு விமான படை விமானங்கள் மூலம் மலர்கள் துவப்பட்டன. விழாவில் மத்திய அமைச்சர்கள், முப்படைகளின் தலைவர்கள், உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் பங்கேற்று விழாவை சிறப்பித்திருந்தனர். 

04.jpg

வழக்கமாக செங்கோட்டையில் ஒவ்வொரு முறையும் சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொள்வர். ஆனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. 

05.jpg

இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் வென்ற வீரர்கள், இந்திய விளையாட்டு ஆணையத்தை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் மட்டும் இன்றைய சுதந்திர தின நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்கள் பங்கேற்றனர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கென தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. 

06.jpg

சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டையை சுற்றி பாதுகாப்புக்காக 350 கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 5 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

07.jpg

இதேபோல், உலகெங்கிலும் உள்ள இந்தியத் தூதரகங்கள் சார்பிலும் 75-வது சுதந்திர தின விழா நடைபெறுகின்றன. பல்வேறு நாடுகளில் உள்ள கட்டிடங்கள், சுற்றுலா தலங்கள் மூவர்ணத்தில் ஒளிர வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடதக்கது. 

1628958452305.jpg
202108150737352531_1_modi1.jpg
E8zVjfhVUAQ3wcD.jpg
E8zVviSVEAUnSpk.jpg
Independence-Day-jpg.jpg
Red-Fort-jpg.jpg
 

 

https://www.virakesari.lk/article/111329

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.