Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை சமாதான முயற்சிகளில் மத்தியஸ்தத்தை மீண்டும் ஆரம்பிப்பதில் நோர்வே மெத்தனப்போக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சமாதான முயற்சிகளில் மத்தியஸ்தத்தை மீண்டும் ஆரம்பிப்பதில் நோர்வே மெத்தனப்போக்கு

[09 - July - 2007]

-அமந்த பெரேரா-

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேசியவாத அரசாங்கத்திற்கும் தமிழினக் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மத்தியஸ்த நாடு என்ற முக்கிய பாத்திரத்தை நோர்வே மீண்டும பொறுப்பேற்பதனால் அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள இவ்வேளையில், ஸ்கண்டினேவிய நாடான நோர்வேயின் அதிகாரிகள் இவ்விடயத்தில் மெத்தன போக்கை கடைபிடிக்கும் அறிகுறிகள் காணப்படுகின்றன.

ஏற்கனவே செய்திகள் வெளியானது போன்று, விசேட சமாதானத் தூதுவர் ஜொஹான் ஹன்ஸன் பவர் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் வடக்கு, கிழக்கு பிராந்தியத்திற்கு செல்வதற்கானத் திட்டங்கள் எதுவும் இல்லை என்று நோர்வேத் தூதரகப் பேச்சாளர் எறிக் நுரென்பேர்க் ஜ.எஸ்.ஸிடம் தெரிவித்தார். வெறும் ஊகங்களிலேயே இந்த செய்திகள் வெளியிடப்பட்டன என்றும் தூதரக பேச்சாளர் தெரிவித்தார்.

கள நிலைமைகளில் முன்னேற்றம் காணப்பட்டால் எதிர்வரும் மாதங்களில் இத்தகைய விஜயம் ஒன்று சாத்தியமாகலாம் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்த போதிலும் முதலில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் முயற்சிகள் அரசாங்க தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட வேண்டுமென தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளார்கள். பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கு முன்னர் வடக்கு, கிழக்கு மக்களின் நம்பிக்கையை அரசாங்கம் வென்றெடுக்க வேண்டும் என்று புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கூறுகிறார்.

கிளிநொச்சியிலுள்ள புலிகளின் அரசியல் பிரிவுத் தலைமைக் காரியாலயத்திற்குச் செல்ல நோர்வேயின் இலங்கைத் தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார் அண்மையில் திட்டமிட்ட இரு விஜயங்கள், அரசாங்க பாதுகாப்பு உத்தரவாதம் கொடுக்க தவறியதால் கைவிடப்பட்ட நிலையில் சமாதான பேச்சுகளை புதுப்பிப்பதற்கு ஜப்பான் மற்றும் நோர்வே நாடுகளின் அதிகாரிகளினாலும் ஏனையோராலும் மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.

கடந்த பல மாதங்களாக நூற்றுக்கணக்கானோரை பலிகொடுத்து நடத்தப்பட்ட யுத்தத்தினால் இன யுத்தம் மீண்டும் மிக மோசமான நிலையை அடைந்ததையடுத்து அரசாங்கம் மீண்டும் நோர்வேயின் பங்களிப்பை நாடியுள்ளது.

ஆயுதம் தாங்கிய படையினர் முக்கிய நகரங்களில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் அதேவேளை, தலைநகர் கொழும்புக்கான நுழைவாயில்கள் அனைத்திலும் சோதனை நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தில் புலிகளின் விமானத் தாக்குதல்கள் காரணமாக இரண்டு மாதங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்த இரவுநேர சேவைகள் ஜூலை மாத தொடக்கத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து வன்முறைகள் அதிகரித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மதிப்பீட்டின்படி 30 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 500,000 பேர் சொந்த வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளார்கள். 4,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்கள். 1980 களிலிருந்து இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்றுவந்த பிரிவினை யுத்தத்தில் 65,000 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நோர்வேயின் மத்தியஸ்தகத்தில் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட யுத்த நிறுத்தம் பெரிதும் சீர்குலைந்துள்ளது. 2003 ஆம் ஆண்டிலிருந்து இருதரப்பினருமே எதுவித பேச்சுவார்த்தைகளையும் நடத்தவில்லை. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஜெனீவாவில் மகாநாட்டு மண்டபத்தினுள் இருதரப்பினரும் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னரே முறிவடைந்தன.

கடந்த இரு வாரங்களில் யுத்தம் தணிந்துள்ள போதிலும், திடீரென மீண்டும் உக்கிரமடையாது என்பதற்கு உத்தரவாதம் எதுவும் கிடையாது. தற்போதைக்கு பேச்சுவார்த்தைகளுக்கான சூழல் நிலவவில்லை என்று இளந்திரையன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு ஆகிய இரு பகுதிகளிலுமே பதற்றம் நிலவுகிறது என்று ஸ்கன்டினேவிய உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் இலங்கை யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. வாரம் முழுவதிலும் பூநகரி பகுதியை நோக்கி தினமும் பீரங்கித் தாக்குதல்கள் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது என்று கண்காணிப்புக் குழு கடைசியாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத நடுப் பகுதியில் யாழ்ப்பாண கடற்பிரதேசத்தில் இடம்பெற்ற கடற் சமரில் 40 விடுதலைப்புலி உறுப்பினர்களை அரச படைகள் கொன்றுவிட்டதாகவும் கடற்புலிகளின் பாரிய கப்பல் ஒன்றை கைப்பற்றியதாகவும் அரசாங்கம் தெரிவித்திருந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் அரசாங்க படைகளும் விடுதலைப் புலிகளும் பாதுகாப்பு முன்னிலைகளில் மோதல்களை ஆரம்பித்ததிலிருந்து வன் முறைகள் அதிகரித்துள்ளன. ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதியிலிருந்து ஏ-9 வீதி மூடப்பட்டதால் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான தரைவழிப் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையில், விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமைக் காரியாலயத்திற்கு விஜயம் செய்யுமாறு நோர்வே அதிகாரிகளுக்கு அரசாங்கம் விடுத்த அழைப்பு பொருத்தமற்றதாக இருப்பதாக அவதானிகள் பலர் கருதுகிறார்கள். இரு தரப்பினரிதும் மனப்போக்கில் மாற்றம் எதையும் காணவில்லை என்று கொழும்பில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள சுயாதீன சமாதான அமைப்பான தேசிய சமாதான சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா தெரிவித்தார். தள நிலைமையில் மாற்றம் எதுவும் இல்லை. எல்லாம் வாய்ப் பேச்சு மாத்திரமே என்று அவர் கூறினார்.

பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணப்பட வேண்டுமாயின் ஆயுத மோதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென ஏனையோர் கருதுகின்றனர். கள நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட பகைமை தவிர்ப்பு அவசியம் என்று யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ரொபினூர் ஒமர்சன் தெரிவித்தார். செய்வதிலும் பார்க்க சொல்வது சுலபமே என்று தெரிவித்த அவர், உண்மை நிலை வேறாக இருக்கிறது என்றும் இன்னமும் நம்பிக்கை அற்றுப் போகவில்லை என்றும் கூறினார்.

சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவே அரசாங்கம் தற்போது மனதை மாற்றிக் கொண்டுள்ளதாக தாங்கள் நம்புவதாக விடுதலைப் புலிகள் கூறுகிறார்கள். கடந்த வாரம் ஒஸ்லோவில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே ஆகியன கலந்து கொண்ட உதவி வழங்கும் துணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் நோர்வே மத்தியஸ்தர்கள் கிளிநொச்சிக்குச் சென்று புலிகளைச் சந்திக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இலங்கையில் ஆயுத மோதல்களின் போது சிவிலியன்களின் பாதுகாப்பு குறித்து அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்தப்பட்டது. பாதுகாப்புச் சபை மேலும் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று பல பிரதிநிதிகள் வலியுறுத்தினார்கள். தர்பூர், ஆப்கானிஸ்தான், வட உகண்டா, லெபனான், சோமாலியா, இலங்கை ஆகியவற்றிலும் வேறு பல பிரதேசங்களிலும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோர் வேண்டுமென்றே தொடர்ந்தும் யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினரினதும் பயங்கரவாத அமைப்புகளினதும் இலக்குக்கு ஆளாகிறார்கள் என்றும் சுட்டிக் காட்டப்பட்டது.

இலங்கையின் மிக மோசமான மனித உரிமை பேணல் விடயம் சம்பந்தமற்றது, ஆக்கபூர்வமற்றது, மந்தகதியானது என்று தெரிவித்த பிரஸெல்ஸ் சர்வதேச ஆய்வு நிறுவனம் சர்வதேச சமூகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டது.

அரசாங்கம் உண்மையில் வன்செயல்களை முடிவுக்கு கொண்டுவரும் நிலைக்கு அதன் மீது அழுத்தம் கொடுக்க வேண்டுமென விடுதலைப் புலிகள் கோருகிறார்கள். சர்வதேச சமூகம் கொடுக்கும் அழுத்தம் காரணமாக பேச்சுவார்த்தைக்கு தான் தயாராக இருப்பதாக அரசாங்கம் கூறுகிறதே அல்லாமல் சுயவிருப்பத்தின் பேரில் இதனைக் கூறவில்லை என்று தெரிவிக்கும் இளந்திரையன் கடந்த தடவை இரு தரப்பினரும் ஜெனீவாவில் கூடியபோது அரசாங்கம் என்ன செய்தது என்பது அனைவருக்குமே தெரியும் என்று கூறினார்.

முட்டுக்கட்டை நிலையை தவிர்ப்பதற்கு வார்த்தைகள் மட்டும் போதாது. மாற்றத்தை கொண்டுவரும் பொறுப்பு அரசாங்கத்தையே சாரும் என்று தேசிய சமாதான சபையைச் சேர்ந்த பெரேரா தெரிவித்தார். தற்போது இருந்துவரும் சகலவிதமான பகைமை நடவடிக்கைகளும் நிறுத்தப்படுவது அவசியம். தற்போது பின்பற்றக்கூடியதாக இருக்கும் அதிகாரப் பரவலாக்கல் குறித்து அரசாங்கம் புதிய யோசனைகளை முன்வைக்க வேண்டும். இன்றைய நிலையில் அனைத்துமே வாய்ஜாலமாக இருக்கிறது. ஆனால், விரைவில் அனைத்தும் மாறிவிடுமென தாம் நம்புவதாகவும் அவர் கூறினார். - ஐ.பி.எஸ்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.