Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆயுதங்கள் என்னென்ன? எங்கிருந்து கிடைக்கின்றன? ராணுவம் அஞ்சியது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆயுதங்கள் என்னென்ன? எங்கிருந்து கிடைக்கின்றன? ராணுவம் அஞ்சியது ஏன்?

18 ஆகஸ்ட் 2021, 02:16 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்
ஆப்கன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆப்கானிஸ்தானிலேயே அதிக வலிமை கொண்ட தரப்பு எது என்று கேட்டால் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை, அதன் பிறகு ஆப்கானிஸ்தானிய ராணுவம், கடைசியில் தாலிபன்கள் என்றுதான் வரிசைப்படுத்த முடியும்.

எண்ணிக்கையிலும் அளவிலும் ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகள்தான் மிகப் பெரியவை. தாலிபன்கள் என்ற ஓர் ஆயுதக் குழுவிடம் அவர்கள் இவ்வளவு எளிதாக வீழ்ந்திருக்கக்கூடாது என்பதுதான் ஒரு சராசரியான கணிப்பாக இருக்கும்.

ஆனால் மிக எளிதாக நாட்டின் அதிகாரத்தை தாலிபன்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். சில இடங்களில் ஒரு குண்டு கூட சுடப்படாமலேயே ஆப்கானிஸ்தானிய ராணுவம் தாலிபன்களிடம் பணிந்து சென்றிருக்கிறது.

தலைமை, நம்பிக்கை, ஊழல், போர்க்கள அறிவு என பல வகையான அம்சங்களைக் கொண்டுதான் இந்தப் படைகளை ஒப்பிட வேண்டியிருக்கிறது.

 

ஆப்கானிஸ்தானின் அனைத்து வகையான படைகளையும் சேர்த்து 3 லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் இருக்கிறார்கள். இது ஆவணங்களில் உள்ள எண்ணிக்கை. உண்மையில் இந்த எண்ணிக்கை குறையலாம். ராணுவம், விமானப்படை, காவல்துறை ஆகிய பிரிவுகளும் இதில் அடங்குகின்றன.

ஆனால் ராணுவத்திலும் காவல்துறையிலும் சேருவதற்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. இளைஞர்கள் அஞ்சுகிறார்கள். தேவையான ஆள்கள் கிடைக்காமல் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகள் தவித்திருக்கின்றன.

இதற்குக் காரணம் தாலிபன் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களைக் கண்டு அச்சம்தான். ஆப்கானிஸ்தானிய ராணுவமும் காவல்துறையும் போர்களில் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்திருக்கின்றன. பெரும்பாலான மனிதவெடிகுண்டுத் தாக்குதல்கள் பாதுகாப்புப் படைகளைக் குறிவைத்தே நடத்தப்பட்டிருக்கின்றன.

தாலிபன் ஆப்கானிஸ்தான்

இதுமட்டுமல்ல பாதுகாப்புப் படைகளில் "கறுப்பு ஆடுகள்" பிரச்னையும் இருக்கிறது. சீருடைக்குள் இருந்து கொண்டே ராணுவத்தினருக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்திய பல சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் நடந்திருக்கின்றன.

ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளும் ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் உண்டு. இல்லாத வீரர்களின் பெயர்களில் தளபதிகள் சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளவதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. அதனால் ஆவணத்தில் இருப்போரின் எண்ணிக்கையும், உண்ணையில் சண்டைக்குச் செல்லும் வீரர்களின் எண்ணிக்கையும் பெருமளவு வேறுபடுகிறது.

ஆப்கன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சில இடங்களில் ஒரு குண்டு கூட சுடப்படாமலேயே ஆப்கானிஸ்தானிய ராணுவம் தாலிபன்களிடம் பணிந்து சென்றிருக்கிறது

அதனால் ஏட்டளவில்தான் ஆப்கானிஸ்தானிய பாதுகாப்புப் படையினர் வலிமையானவர்கள் என்று அமெரிக்காவின் ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஆப்கானிஸ்தானின் ராணுவத்தில் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது என்பதுதான் உண்மை என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

தொடர்பே இல்லாத பகுதிகளுக்கு பாதுகாப்புப் பணிக்காக அனுப்பப்படுவதால், மன உறுதி தளர்ந்து, சண்டையிடாமல் அப்படியே விட்டுச் செல்லும் போக்கு ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் பரவலாக இருப்பதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தாலிபன்களின் பலம் என்ன?

தாலிபன் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதையே கணிக்க இயலாது எனும்போது, தாலிபன் இயக்கத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கணிப்பது சாத்தியமே இல்லாதது.

இருப்பினும் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு தாலிபன் இயக்கத்தில் மட்டும் சுமார் 60 ஆயிரம் வீரர்கள் இருப்பதாக கணித்தது. கூடவே பிற பழங்குடி ஆயுதக் குழுக்களையும் சேர்த்தால் மொத்தம் 2 லட்சம் பேர் வரலாம் எனக் கூறப்படுகிறது.

ஆனால் தாலிபன்களை ஒரே குழுவாக வரையறுப்பது ஆபத்தானது என்று பிரிட்டிஷ் முன்னாள் ராணுவ அதிகாரி மைக் மார்ட்டின் கூறுகிறார். இவர் பாஷ்தோ மொழி பேசக் கூடியவர். ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடந்த சண்டைகள் குறித்து நெருக்கமாகக் கவனித்தவர்.

ஆங்காங்கே இருக்கும் ஓரளவு தொடர்புடைய குழுக்களை தற்காலிகமாக ஒன்று சேர்க்கும் அமைப்பு என்று வேண்டுமானால் தாலிபன்களைக் குறிப்பிடலாம் என்கிறார் அவர்.

அரசுப் படைகளில் இருப்போர் மாத்திமல்ல, ஆயுதக் குழுக்களில் இருப்போரும் தங்களுடைய பிழைப்புக்காக அவ்வப்போது எதிரணிக்குப் போய்விடுவது உண்டு என்பது இங்கு நடக்கும் சண்டையின் மிக முக்கியமான அம்சம்.

இந்த விவரங்களை எல்லாம் ஆய்வு செய்து பார்த்தாலும் கூட ஆப்கானிஸ்தான் ராணுவம்தான் வலிமையில் முந்தி நிற்க வேண்டும். நிதி, தொழில்நுட்பம், அதிகாரம், ஆயுதம் என அனைத்தும் அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது.

காபூல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க வீரர்

ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினரின் சம்பளத்துக்காகவும், ஆயுதங்களுக்காகவும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக அமெரிக்காவின் ஓர் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

தாலிபன்களுக்கு விமானப் படை எதுவும் கிடையாது. ஆனால் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு 200க்கும் மேற்பட்ட விமானங்கள் இருக்கின்றன. இவை ராணுவத்துக்கு முன்னிலையைத் தந்திருக்க வேண்டும்.

ஆனால் தாலிபன்கள் விமானிகளைக் குறிவைத்து அதிகமான தாக்குதல்களை நடத்தினார்கள். அதனால் விமானிகள் கிடைக்காமல் ஆப்கானிஸ்தான் விமானப்படை திண்டாடியது.

ஆகவேதான் தாலிபன்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் சில பகுதிகளில் அமெரிக்க விமானப் படை சென்று உதவி செய்ய நேரிட்டது.

தாலிபன்களிடம் இருக்கும் ஆயுதங்கள் என்னென்ன?

தலிபான்கள் பெரும்பாலும் போதைப்பொருள் வர்த்தகத்தில் இருந்து வருவாயை நம்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் இருந்து ஆதரவு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

ஆயினும் தாலிபன்களிடம் இருக்கும் பெரும்பாலான ஆயுதங்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கப் படைகளிடம் இருந்து பறிக்கப்பட்டவைதான். தற்போது தாலிபன்களிடம் இருக்கும் ஹம்வீ எனப்படும் ராணுவ வாகனம் இப்படிக் கிடைத்ததுதான்.

இதே போல இயந்திரத் துப்பாக்கிகள், இருளில் காணப் பயன்படும் உபகரணங்கள், பீரங்கிகள், எறிகணைகள் என பல வகையான ஆயுதங்களை ராணுவத்திடம் இருந்தே தாலிபன்கள் பெற்றிருக்கிறார்கள்.

கடைசி சில வாரங்களில் ஏராளமான ஆயுதங்களையும் உபகரணங்களையும் போட்டுவிட்டு ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் ஓடிவிட்டார்கள். சண்டைபோடுகிறீர்களா சரணடைகிறீர்களா என்று கேட்டபோது, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைவதையே ஆப்கானிஸ்தானிய வீரர்கள் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்.

அப்படிக் கிடைத்த ஆயுதங்கள் அனைத்தும் இப்போது தாலிபன்களிடம் இருக்கின்றன. அவர்களுக்கு விமானங்கள் கிடைத்திருப்பதாகவும் கருதப்படுகிறது.

தாலிபன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தாலிபன்களிடம் இருக்கும் பெரும்பாலான ஆயுதங்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கப் படைகளிடம் இருந்து பறிக்கப்பட்டவை

மிக விரைவாக அவர்களுக்கு ஆயுதங்களும் உபகரணங்களும் கிடைத்ததால்தான் அவர்களால் எதிர்பாராத வேகத்தில் காபூலைக் கைப்பற்ற முடிந்தது என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் ராணுவத்தைக் கட்டமைக்கவும், மேம்படுத்தவும் அமெரிக்கா செலவு செய்த பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயும் உண்மையில் இப்போது தாலிபன்களுக்கு பயன்படுகிறது.

மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்தும் அவர்களது உத்தி அஞ்சத்தக்கது. காடு, மலை, பள்ளத்தாக்கு என அனைத்து வகையான பரப்புகளையும் தாலிபன்கள் அறிந்து வைத்திருப்பது ராணுவத்துக்கு இல்லாத கூடுதல் பலம்.

https://www.bbc.com/tamil/global-58240480

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

அமெரிக்கப் படைகளிடம் இருந்து பறிக்கப்பட்டவை

நம்பிட்டோம்.....கந்தக பூமியாகும் மாறும் காலம் வெகு விரைவில் இல்லை....ஆயுதங்களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் ....11 குழுக்கள் இருக்காம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கன் தாலிபனின் வெற்றிக்கு உதவிய ராணுவ முறைகேடுகளும் உளவியல் சிக்கல்களும்

  • ராகவேந்திர ராவ்
  • பிபிசி செய்தியாளர்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
தாலிபன்

பட மூலாதாரம்,SCOTT OLSON/GETTY IMAGES

 
படக்குறிப்பு,

காந்தஹாரில் நடந்த சண்டையில் பங்கேற்ற ஆப்கன் ராணுவ வீரர்

தேதி: ஜூலை 8, 2021. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் ஒரு பத்திரிகையாளருக்கும் இடையிலான உரையாடலைக் கவனமாகப் பாருங்கள்

கேள்வி: ஆஃப்கானிஸ்தானில் தாலிபன் ஆக்கிரமிப்பு இப்போது உறுதியாக உள்ளதா?

பதில்: இல்லை, அது அவ்வாறு இல்லை.

கேள்வி: ஏன் அப்படி?

 

பதில்: ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மூன்று லட்சம் பேர் கொண்ட ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட ராணுவத்தைக் கொண்டிருக்கிறது. ஒரு விமானப்படை உள்ளது. அதே நேரத்தில் தாலிபான்களின் எண்ணிக்கை சுமார் 75 ஆயிரம் தான். ஆக்கிரமிப்பு சாத்தியமில்லை.

அதே பத்திரிகையாளர் சந்திப்பில், பைடன் தாலிபன்களை நம்புகிறாரா என்று கேட்கப்பட்டது. இது ஒரு முக்கியமான கேள்வியா என்று அவர் கேட்டார். ஆம் என்று நிருபர் கூறியதற்கு அவர், "இல்லை, நான் நம்பவில்லை." என்றார்.

தாலிபன்களிடம் நாட்டை ஒப்படைப்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்று பத்திரிகையாளர் கேட்டபோது, பைடன், "இல்லை, நான் தாலிபன்களை நம்பவில்லை." என்று பதிலளித்தார்.

வேறு சில கேள்விகளுக்குப் பதிலளித்த பைடன், 2001 முதல் தாலிபன்கள் ராணுவ ரீதியாக வலுவான நிலையில் இருப்பதை ஒப்புக் கொண்டார், ஆனால் உலகெங்கும் ஆதிக்கம் செலுத்தி, நாட்டையே தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது சாத்தியமில்லை என்றும் கூறினார்.

சுமார் ஒரு மாதத்திற்குள் ஆஃப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தாலிபன்கள் கைப்பற்றியதைப் பார்க்கும் போது, , தாலிபன்களின் பலம் மற்றும் ஆப்கானியப் படைகளின் பலவீனம் பற்றி அமெரிக்காவுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

இப்போது பைடன் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள தலைவர்கள், ஏன் தாலிபன்களே கூட, இவ்வளவு எளிதாக நாட்டைக் கைப்பற்ற முடியும் என்று கற்பனை செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

சமீபத்தில் கசிந்த அமெரிக்க உளவுத்துறை அறிக்கை, சில வாரங்களுக்குள் காபூல் தாக்கப்படலாம் என்றும் 90 நாட்களுக்குள் அரசாங்கம் வீழ்த்தப்படும் என்றும் கணித்துள்ளது. வரும் சில மாதங்களில், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றலாம் என்ற அதே ஊகம் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் உருவாக்கப்பட்டது.

ஆனால் கடந்த சில நாட்களில் ஆஃப்கானிஸ்தானில் காணப்பட்ட வேகமான நகர்வுகள், இவை அனைத்தும் மிக விரைவாகவும் எளிதாகவும் நடக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

தாலிபன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜூலை 9 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான தாலிபன்களின் பயணம்

ஜூலை 9 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான காலகட்டத்தை உற்று நோக்கினால் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் எவ்வளவு விரைவாகப் பல பகுதிகளைக் கைப்பற்றினார்கள் என்பதை உணரலாம்.

ஜூலை 9 நிலவரப்படி, ஆஃப்கானிஸ்தானில் உள்ள மொத்த 398 மாவட்டங்களில், தாலிபன் கட்டுப்பாட்டில் 90 மாவட்டங்களே இருந்தன. மீதமுள்ள மாவட்டங்களில், 141 ஆஃப்கான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன, ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கும் தாலிபான்களுக்கும் இடையிலான சண்டை 167 மாவட்டங்களில் தொடர்ந்து வந்தது.

தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்தது என்றால், நிர்வாக மையங்கள், காவல்துறை தலைமையகம் மற்றும் மற்ற அனைத்து அரசு நிறுவனங்களும் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் வந்தன என்று பொருள்.

ஜூலை 9 அன்று, வடக்கு ஆப்கானிஸ்தான் முழுவதும் நடத்தப்பட்ட ஒரு பெரிய தாக்குதலில் ஈரான் மற்றும் துர்க்மெனிஸ்தானுடனான முக்கிய எல்லைப் பகுதிகளைத் தாலிபான்கள் கைப்பற்றினர். ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள இஸ்லாம்கலன் மற்றும் துர்க்மெனிஸ்தானின் எல்லைக்கு அருகிலுள்ள தொர்குண்டி ஆகிய எல்லைக் கடப்புகள் அவர்களின் கட்டுப்பாட்டில் வந்தன.

ஜூலை 29 க்குள், தாலிபான்கள் 105 மாவட்டங்களைக் கையகப்படுத்தினர். 135 மாவட்டங்கள் மட்டுமே ஆப்கன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. இருவருக்கும் இடையிலான போராட்டம் இன்னும் 158 மாவட்டங்களில் நடந்து கொண்டிருந்தது.

ஆகஸ்ட் 10 வரை, நிலைமையில் பெரிய மாற்றம் இல்லை-தாலிபன் கட்டுப்பாட்டில் 109 மாவட்டங்கள், ஆப்கானிஸ்தான் அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் 127 மாவட்டங்கள் மற்றும் இருவருக்கும் இடையே மோதலில் 162 மாவட்டங்கள் இருந்தன. ஆனால், டோலோகன், குண்டுஸ் மற்றும் ஷெபர்கான் போன்ற நகரங்களை தாலிபான்கள் கைப்பற்றியிருந்தனர் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.

ஆனால் ஆகஸ்ட் 11 முதல் தாலிபன்களின் அணுகுமுறை தீவிரமடைந்தது. தாலிபன்கள் ஃபைசாபாத் மற்றும் புல்-இ-கும்ரியைக் கைப்பற்றி மொத்தம் 117 மாவட்டங்களில் தங்கள் சிறகுகளை விரித்தனர். ஆகஸ்ட் 11 நிலவரப்படி, 122 மாவட்டங்கள் மட்டுமே ஆஃப்கானிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. மேலும் 159 மாவட்டங்களில் இருவருக்கும் இடையே மோதல் இன்னும் நடந்து கொண்டிருந்தது.

ஆகஸ்ட் 12 அன்று, தாலிபன்கள் கஜ்னி மற்றும் ஹெராத்தை கைப்பற்றினர், ஆகஸ்ட் 13 க்குள், கந்தஹார் மற்றும் லஷ்கர் காஹ்வும் அவர்கள் கட்டுப்பாட்டில் வந்தன.

தாலிபன்

பட மூலாதாரம்,WAKIL KOHSAR/GETTY IMAGES

ஆகஸ்ட் 13 அன்று, தாலிபான்களின் கட்டுப்பாட்டில் 132 மாவட்டங்களும், ஆஃப்கானிஸ்தான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் 114 மாவட்டங்களும், இருவருக்குமிடையே மோதலில் 152 மாவட்டங்களும் இருந்தன.

ஆகஸ்ட் 15 அன்று, தாலிபான்கள் மொத்தமுள்ள 398 மாவட்டங்களில் 345 ஐ கைப்பற்றியபோது நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறியது. தாலிபான்கள் மசார்-இ-ஷெரீப் மற்றும் ஜலாலாபாத்தையும் கைப்பற்றிய நாள் இது.

அன்றைய தினத்தில், 12 மாவட்டங்கள் மட்டுமே ஆஃப்கானிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன மற்றும் 41 மாவட்டங்கள் தாலிபான்களுக்கும் ஆஃப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையே மோதல் நடந்து கொண்டிருந்தது.

ஆப்கன் ராணுவத்தின் நம்பகத்தன்மை குறித்த ஐயம்

அஜ்மல் அஹ்மதி ஆஃப்கானிஸ்தான் வங்கியின் ஆளுநராகவும், ஆஃப்கானிஸ்தான் ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

ஆகஸ்ட் 16 மாலை, அவர் வெளியிட்ட தொடர் ட்வீட்கள், காபூலில் இருந்து அவர் தப்பித்ததை உறுதிப்படுத்தியதுடன் ஆஃப்கன் பாதுகாப்புப் படைகளின் விசுவாசத்தையும் கேள்விக்குள்ளாக்கின.

"கடந்த வாரம் ஆஃப்கானிஸ்தான் அரசின் வீழ்ச்சி புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு விரைவாக இருந்தது." என்று அவர் ட்வீட் செய்திருந்தார்.

கடந்த சில மாதங்களில் பெரும்பாலான கிராமப்புறங்கள் தாலிபன்களால் கைப்பற்றப்பட்டிருந்தாலும், முதல் மாகாண தலைநகரம் ஒன்று, கடந்த பத்து நாட்களுக்கு முன் தான் அவர்கள் கட்டுப்பாட்டில் வந்தது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆகஸ்ட் 6 வெள்ளிக்கிழமை ஜராஞ்ச் பகுதி தாலிபன்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததாகவும், அடுத்த ஆறு நாட்களில் பல மாகாணங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிட்டன என்றும் அவர் ட்வீட்டில் தெரிவித்திருந்தார்.

"சண்டையிட வேண்டாம் என்று மேலிட உத்தரவுகள் வந்துள்ளதாகப் பல வதந்திகள் வெளிவந்தன. இதை அத்தா நூர் மற்றும் இஸ்மாயில் கான் ஆகியோரும் வலியுறுத்தியுள்ளனர்." என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அத்தா நூர் பல்க் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர். அவர் மஜார்-இ-ஷெரீப், தாலிபன்களால் கைப்பற்றப்பட்டபோது பிராந்திய ராணுவத்தின் தலைவராக இருந்தார். "எங்கள் வலுவான எதிர்ப்பு இருந்தபோதிலும், ஒரு பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் கோழைத்தனமான சதியின் விளைவாக, அரசாங்கமும் அரசு இயந்திரமும் முழுவதுமாகத் தாலிபனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன." என்று நூர் ட்வீட் செய்தார்.

தாலிபன்

பட மூலாதாரம்,MAJID SAEEDI/GETTY IMAGES

'ஹெராத்தின் சிங்கம்' என்று அழைக்கப்படும் உள்ளூர் தளபதி இஸ்மாயில் கான், ஹெராத்தில் தாலிபன்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் ராணுவத்தை வழிநடத்திக்கொண்டிருந்தார், அப்போது தாலிபன்கள் ஹெராத்தை கைப்பற்றினர்.

"நம்பவே முடியவில்லை. ஆனால் ஆப்கன் படைகள் ஏன் பின்வாங்கின என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது சந்தேகத்தை எழுப்புகிறது" என்று அஹ்மதி ட்வீட் செய்தார்.

இந்த வேகம் எப்படிச் சாத்தியமாயிற்று?

சில பகுதிகளை தாலிபான்கள் பலத்தால் கைப்பற்றினாலும், சில பகுதிகளில் ஆப்கானிஸ்தான் தேசிய இராணுவம் எதிர்த் தாக்குதல் செய்யாமல் பின்வாங்கியது. ஆகஸ்ட் 6 அன்று, தாலிபான்கள் பிராந்திய தலைநகர் ஜராஞ்சின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர். அடுத்த 10 நாட்களில் அது நாடு முழுவதும் வேகமாக விரிவடைந்தது.

ஜூலை மாதத்தில் பெரும்பாலான அமெரிக்க துருப்புக்கள் வெளியேறினாலும், பல ஆயிரம் அமெரிக்க வீரர்கள் தலைநகரிலிருந்து தங்கள் குடிமக்களை வெளியேற்ற உதவ காபூலுக்குத் திரும்பினர். ஆப்கானிஸ்தானுக்கு வெளியே இருக்கும் அமெரிக்கப் படைகள் சமீபத்தில் தாலிபான் நிலைகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, ஆனால் அவர்களின் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது.

தாலிபான்கள் அனைத்து முக்கிய எல்லைக் கடப்புகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதால், நாட்டை விட்டு வெளியேறும் ஒரே வழி காபூல் விமான நிலையம் தான் என்ற நிலை ஏற்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிபிசியின் பாதுகாப்பு விவகாரங்கள் நிருபர் ஜொனாதன் பீல், அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கும், அவர்களை மன உறுதியடையச் செய்யவும் கடந்த 20 ஆண்டுகளில் பெரும் பகுதியைச் செலவிட்டனர் என்று கூறுகிறார்.

எண்ணற்ற அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தளபதிகள் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் திறமையான ஆப்கான் இராணுவத்தை உருவாக்குவதாக உறுதி கூறியிருந்தனர். ஆனால் இன்று அந்த வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளாகத் தோன்றுகின்றன என்கிறார் அவர்.

ஆப்கன் அரசாங்கம் தனது கொள்கையில் உறுதியாக இருந்திருக்க வேண்டும். காரணம், அவர்களின் படைகள் மூன்று லட்சம் பேருக்கும் அதிகமானவர்களைக் கொண்டதாகக் கூறப்பட்டது.

"ஆனால் உண்மையில் எப்போதுமே தனது நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய அந்நாடு போராடியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு ஒரு ஊழல் வரலாறு உள்ளது. சில நேர்மையற்ற தளபதிகள் உண்மையில் இல்லாத வீரர்களுக்கான சம்பளத்தை வசூலித்தனர்," என்று அவர் கூறுகிறார்.

தாலிபன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஃப்கானிஸ்தான் புனரமைப்புக்கான சிறப்புக் கண்காணிப்பாளர் (SIGAR) "ஊழலின் மோசமான விளைவுகள் மற்றும் படையின் உண்மையான எண்ணிக்கை குறித்த சந்தேகங்கள்" குறித்து தீவிர கவலைகளை வெளிப்படுத்தியிருந்தார் என்று பீல் தெரிவிக்கிறார்.

தாலிபான்கள் முன்னேறியது எப்படி?

கடந்த பல வருடங்களாக ஆஃப்கானிஸ்தான் அரசாங்கம் பெற்ற நிதி உதவியைக் கணக்கில் கொண்டு பார்த்தால், பணம் மற்றும் ஆயுதங்களின் அடிப்படையில் அது முன்னிலை பெற்றிருக்க வேண்டும். மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, ஆஃப்கானிஸ்தானுக்கு வீரர்களின் சம்பளம் மற்றும் உபகரணங்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை வழங்கியுள்ளது.

ஜூலை 2021 அறிக்கையில், SIGAR ஆஃப்கானிஸ்தானின் பாதுகாப்பிற்காக 88 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாகக் கூறியது.

தாலிபான்களுக்கு எதிரான போரில் ஆஃப்கானிஸ்தான் விமானப்படை குறிப்பிடத்தக்க முன்னிலை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஃப்கானிஸ்தான் விமானப்படை தனது 211 விமானங்களையும் பணியாளர்களையும் பராமரிக்கத் தொடர்ந்து போராடி வருகிறது.

ஆஃப்கானிஸ்தான் விமானப்படை தளத்தில் உள்ள தளபதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு இதுவே காரணம். ஆஃப்கன் விமானிகளைக் குறிவைத்துத் தாலிபான்கள் தாக்கியது நிலைமையை மேலும் மோசமடையச் செய்தது.

மறுபுறம், ஆஃப்கானிஸ்தான் இராணுவம் கடந்த பல ஆண்டுகளாகவே, போதிய பயிற்சி இல்லாமை, ஊழல், மோசமான தலைமை ஆகியவற்றின் காரணமாக மன உறுதியிழந்த நிலையிலேயே இருந்துள்ளது.

பல இடங்களில், ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் தாலிபான்களுக்கு முன்னால் சரணடைந்து தங்கள் உயிரைக் காத்துக்கொள்வது புத்திசாலித்தனம் என்று நினைத்ததற்கும் இந்த மன உறுதியின்மையே காரணம்.

தாலிபன்கள் உளவியல் ரீதியான போரில் ஈடுபட்டனர். சரணடைந்தாலோ தங்களுடன் ஒத்துழைத்தாலோ உயிர் பிழைக்கலாம் என்ற செய்தியை அவர்கள் அனுப்பினர்.

ஆப்கானிஸ்தான் வீரர்கள் பல இடங்களில் சண்டையிடாமல், தாலிபன்களுக்குப் பாதுகாப்பான வழியை வகுத்துக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

https://www.bbc.com/tamil/global-58254301

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, putthan said:

நம்பிட்டோம்.....கந்தக பூமியாகும் மாறும் காலம் வெகு விரைவில் இல்லை....ஆயுதங்களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் ....11 குழுக்கள் இருக்காம்....

புதிய வகை ஆயுதங்களை பரிசோதனை செய்ய வருவினம் என்று சொல்லுறியள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

புதிய வகை ஆயுதங்களை பரிசோதனை செய்ய வருவினம் என்று சொல்லுறியள்.

இந்த தடவை அவையள் வர மாட்டினம் ,பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு கொடுத்து ஆட பார்ப்பினம் 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, putthan said:

இந்த தடவை அவையள் வர மாட்டினம் ,பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு கொடுத்து ஆட பார்ப்பினம் 

ஹசரா இனகுழு பெரிதும் தாலிபானில் இல்லை. தாலிபானில் இருப்பவர்கள் பெரிதும் பஹ்தோ இன மக்களே.

ஹசராக்கள் ஷியாக்கள். பஹ்தோக்கள் சன்னிகள்.

இன்று தலிபான் ஒரு ஹசரா ஷியா போராளியின் சிலையை உடைத்துள்ளனர்.

ஈரானிகள் ஷியா. ஏற்கனே சன்னி கட்டார், சவுதி, யூஏஈ எல்லாம் ஈரானின் எதிரிகள் (அமெரிக்காவின் தூண்டலால்).

இந்த கூட்டணியில் சன்னி தலிபானும் இணைந்து - தலிபான் v ஈரான் சண்டையும் உருவாகலாம்.

அதே போல் அஹ்மட் ஷா மசூதின் மகனுடன், பதவியிழந்த துணை ஜனாதிபதி சேர்ந்து கொண்டு தான் தான் காபாந்து ஜனாதிபதி என்கிறார். இவர்கள் உள்ள பஞ்சீர் பள்ளத்தாக்கில் தலிபான் இல்லை. 1996-2001 இல் கூட இருந்தது இல்லை. இவர்களுக்கு இந்திய உதவி இருப்பதாக படுகிறது.

#போர் இன்னும் ஓயவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தலிபானின் ஹக்கானி நெட்வோர்க் குழுவின் கமாண்டர்கள் முன்னால் ஜனாதிபதி ஹமீட் கார்சாய், முன்னாள் வெளிவிவகார அமைச்சர்/ சி ஈ ஓ - டாக்டர் அப்துல்லா அப்துல்லா ஆகியோரை சந்தித்துள்ளதாக செய்திகள் வருகிறது.

நாட்டை விட்டு ஓடாமல் நின்ற இவர்களின் தைரியம் மெச்சுதலுக்கு உரியது.

தலிபான்- அமெரிக்கா- ஆப்கானிஸ்தான் பேச்சுகளில் ஆப்கான் அரசுசார்பாக பங்கெடுத்தவர்கள் இவ்விருவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

Taliban சொல்வதில் உத்தரவாதம் இல்லை'' "Malala"

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

Taliban Spokesman Interview: பெண்கள் இனி வேலைக்கு செல்லலாமா? கல்வி கற்க முடியுமா? சட்டங்கள் எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

ஹசரா இனகுழு பெரிதும் தாலிபானில் இல்லை. தாலிபானில் இருப்பவர்கள் பெரிதும் பஹ்தோ இன மக்களே.

ஹசராக்கள் ஷியாக்கள். பஹ்தோக்கள் சன்னிகள்.

இன்று தலிபான் ஒரு ஹசரா ஷியா போராளியின் சிலையை உடைத்துள்ளனர்.

ஈரானிகள் ஷியா. ஏற்கனே சன்னி கட்டார், சவுதி, யூஏஈ எல்லாம் ஈரானின் எதிரிகள் (அமெரிக்காவின் தூண்டலால்).

இந்த கூட்டணியில் சன்னி தலிபானும் இணைந்து - தலிபான் v ஈரான் சண்டையும் உருவாகலாம்.

அதே போல் அஹ்மட் ஷா மசூதின் மகனுடன், பதவியிழந்த துணை ஜனாதிபதி சேர்ந்து கொண்டு தான் தான் காபாந்து ஜனாதிபதி என்கிறார். இவர்கள் உள்ள பஞ்சீர் பள்ளத்தாக்கில் தலிபான் இல்லை. 1996-2001 இல் கூட இருந்தது இல்லை. இவர்களுக்கு இந்திய உதவி இருப்பதாக படுகிறது.

#போர் இன்னும் ஓயவில்லை.

இந்தியா நீங்கள் கூறிய அமைப்புடன் தொடர்பிலிருந்து பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீருக்கு சில தொல்லைகளை கொடுக்கலாம் ...இவர்கள் பாகிஸ்தானுடன் நல்ல உறவில் இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.