Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கில் போர் உத்திகள் மாற்றப்பட்டுள்ளன இனி என்னவென்பதை பொறுத்திருந்து பாருங்கள் - இளந்திரையன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் போர் உத்திகள் மாற்றப்பட்டுள்ளன இனி என்னவென்பதை பொறுத்திருந்து பாருங்கள் - இளந்திரையன்

கிழக்கில் பல வாரங்களுக்கு முன்னரே கொரில்லா போர்முறைக்கு எங்களுடைய போர் உத்தியை மாற்றிவிட்டோம் எனவே, எதிர்காலத்தில் எங்களுக்கும் அவர்களுக்கும் என்ன நடக்கப்போகின்றது என் பதைப் பொறுத்திருந்துபாருங்கள்.

இவ்வாறு விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். கிழக்கில் அரச படையினர் தொப்பிகலவை கைப் பற்றியது தொடர்பாக நேற்றுப்பி.பி.ஸிக்கு கருத்துக் கூறும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அரசு, கிழக்கில் நடத்துகின்ற போர் முடிவுக்கு வந்துவிட்டது எனக் கூறுகின்றது. ஆனால், அது உண்மை அல்ல ஏன் என்றால் எங்களுக்கு 24 வருட கால அனுபவம் இருக்கிறது. கெரில்லாப் போர் அனுபவம் இருக்கின்றது.

இந்தப் பகுதியில் நாங்கள் பல வாரங்களுக்கு முன்னரே கெரில்லாப் போர் முறைக்கு எங்களுடைய போர் உத்தியை மாற்றிவிட்டோம். கிழக்கைப் பொறுத்தவரை நிலப்பரப்பைப் பிடிப்பது என்பது எங்களுக்கு முக்கியமானது அல்ல.

நிச்சயமாக இலங்கைப் படையினர் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். பெரும் நிலப்பரப்பை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

பெரும் விஸ்தீரணமான நிலப்பரப்பில் துருப்புக்களை நிலை நிறுத்துவது என்பதும் அதில் ஏதும் ஒரு சம்பவமும் நடைபெறாமல் பார்துக்கொள்வது என்பதும் இரு வேறுபட்ட விடயங்கள்.

எனவே, எதிர்காலத்தில் எங்களுக்கும் அவர்களுக்கும் என்ன நடக்கப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

எமது மக்களை இந்த அடக்குமுறை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க முடியவில்லை என்றவகையில் இது ஒரு பின்னடைவுதான் தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசுகள் இதனை முயற்சி செய்தன. ஆனால், அனைவரும் இதில் தோல்வி அடைந்துவிட்டனர்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன முதல் சந்திரிகா பண்டாரநாயக்கா வரை அனைவரும் இதில் தோற்றுப் போய்விட்டார்கள்.

தற்போது இது ராஜபக்ஷவின் தருணம். அவர் தனது முயற்சியை செய்கின்றார். இதுவொரு இராணுவ ரீதியான முன்னேற்றகரமான நிலை என்று நான் கருதவில்லை. ஏன் என்றால், நீங்கள் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டைப் பெறவேண்டும் என்றால் நீங்கள் அடுத்த பகுதியின் கட்டுப்பாட்டை இழக்கவேண்டி நேரிடும்

ஆகவே, அவர்கள் ஒருவகையில் செயல்பட முயற்சிக்கின்றபோது அதற்கு ஏற்ப நாங்கள் எங்களது பாணியை அதாவது யுத்தியை மாற்றுவோம்.

எங்களுடைய யுத்தியை மாற்றும் பாணி என்று கூறுவது ஒரு பிராந்தியத்தைப் பொறுத்தவரை நாங்கள் எதிரியை மரபு ரீதியாகவோ அல்லது மரபு சாராத முறையிலோ எதிர்கொள்வதேயாகும். என்றார் இளந்திரையன்.

சூரியன்.கொம்

பொறுத்திருப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், மகிந்தவுக்கும், அவர்களது குழுவுக்கும் ஒரு பாடம் கற்பிக்கவேண்டும். நியாயம் வெல்லும் என்று இந்த உலகிற்கு காட்ட வேண்டும்.

இதை எல்லாம் நாம் பெரிது படுத்த கூடாது

புலிகளை பொறுத்த மட்டில் அவர்கள் எங்கு சண்டை பிடிக்க வேண்டும் எங்கு பிடிக்க கூடாது என்று சிங்கள அரசோ இல்லை மக்களின்( எங்களின் ) எதிர்ப்பர்ப்புக்களோ முடிவு செய்வது இல்லை ஆகவே காத்திருப்பு மாதங்கள் ஆகலாம் வருடங்கள் ஆகலாம் எனவே நம்பிக்கையுடன் காத்திருப்போம்..........................

யாரோ ஒருவர் தமிழ்நாதத்தில் எழுதிய கட்டுரை( சபேசன்?) ஒன்றில்

மகிந்த ஒரு அரசியல்வாதி தலைவர் போராளி .........

ஆகாவே தற்காலிக வெற்றி முக்கியம் இல்லை எமக்கு.......................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி கிழக்கை பிடிக்கும்போது அங்கு இருந்த விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் எல்லாம் எப்படி மறைந்துவிட்டன? இது தான் புலிகளின் தந்திரமான இராணுவ நகர்வு :huh:

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளை தோற்கடித்து இராணுவத்தினர் பெற்ற வெற்றிகள் தொடரும்: கோத்தபாய.

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளை "தோற்கடித்து" சிறிலங்கா இராணுவத்தினர் பெற்ற வெற்றிகள் இனிமேலும் தொடரும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஐபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள கோத்தபாய குடும்பிமலை ஆக்கிரமிப்பு குறித்து வெளியிட்ட அறிக்கை:

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் இறுதிக்கோட்டையான குடும்பிமலையை மீட்டமை பாதுகாப்புப் படையினருக்கு மட்டுமின்றி அப்பகுதியிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் என மூவின மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

மாவிலாறு அணை மூடப்பட்டதன் பின்னர் அந்த அணையை திறப்பதற்காக இராணுவத்தினரால் தொடங்கப்பட்ட நடவடிக்கை சம்பூர், வாகரை, கொக்கட்டிச்சோலை ஊடாக குடும்பிமலை வரை நீண்டப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது. இந்த நடவடிக்ககையில் விடுதலைப் புலிகளை தோற்கடித்து அவர்களின் முக்கிய கோட்டையான குடும்பிமலையை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

தற்போதைய அரச தலைவர் பதவிக்கு வந்ததும் முப்படைத்தளபதிகளும் காவல்துறை மா அதிபரும் பெற்றுக்கொடுத்த சரியான தலைமைத்துவமே இந்த வெற்றிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

குடும்பிமலையை மீட்டமை அரசியல் தலையீடுகள் இன்றி இராணுவத்தினர் பெற்றுக்கொண்ட மாபெரும் வெற்றியாகும். மகிந்தவின் சரியான வழிநடத்தலின் கீழ் தன்னம்பிக்கையின் அடிப்படையில் படையினர் முன்நோக்கிச் செல்வதற்கு வழி நடத்தப்பட்டனர்.

இந்த நடவடிக்கையை மேற்கொண்ட இராணுவத்தினருக்கு நான் தலை வணங்குகிறேன். அரசியல்வாதிகள் இந்த வெற்றி குறித்து விமர்சனங்களை முன்வைத்தாலும் இராணுவத்தினரின் நடவடிக்கை தொடரும்.

நாட்டில் புலிகளை தோற்கடித்து மீண்டும் சமாதானம் மலரும் வரை இத்தகைய பயணங்கள் தொடரும் என்று கோத்தபாய அதில் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் தந்தோராபாய உத்தியாக விடுதலைப் புலிகள் தங்களது படைநிலைகளை குடும்பிமலையிலிருந்து விலக்கிக்கொண்ட நிலையில் "போர்" நடத்தி புலிகளை "தோல்வியடைய"ச் செய்தது போல் கோத்தபாய அறிக்கை வெளியிட்டிருப்பது நகைப்புக்குரியது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

-Puthinam-

இனி தொப்பிக்கலவில் கொல்லப்படும் இராணுவத்தினரும் காணாமல் போகும் பட்டியலில் இடம் பெறுவர். கிழக்கின் முழுவதுமான கொரிலாப் போர்முறை இராணுவத்தைத் திக்குமுக்காடச் சொய்யும். இளந்திரையன் ஒத்துக் கொண்ட மக்களையும் பிரதேசத்தையும் பாதுகாக்க முடியாதது பின்னடைவுதான் என்ற விடயம் மிக முக்கியமானது. அதற்கான எதிர்விளைவுகளை புலிகள் செய்தேயாக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

"கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளை "தோற்கடித்து" சிறிலங்கா இராணுவத்தினர் பெற்ற வெற்றிகள் இனிமேலும் தொடரும்....................."

ஆகவே புலிகள் இன்னமும் தோற்கடிக்கப்படாமல் கிழக்கில் இ க்கின்றார்கள் என்கிறீர்களா????

ஆனால் புலிகளை முற்று முழுதாக தோற்கடித்துவிட்டோம் என்று நேற்று சொன்னீர்களே?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.