Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமரசத்தைக் கைவிட்டு சம்ஹாரத்தை நாடுவோர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-07-14

சமரசத்தைக் கைவிட்டு சம்ஹாரத்தை நாடுவோர்

"பேச்சென்ற பேச்சு, பேச்சோடு போச்சு' என்றாகிவிட்டது.

தொப்பிகலவைக் கைப்பற்றி, முழுக் கிழக்கு மாகா ணத்தையும் மீட்டு, வெற்றியின் உச்சிக்கட்டத்தில் நிற் கும் அரசுக்கு தற்போது புலிகளுடன் அமைதிப் பேச்சில் ஈடுபடுவதற்கு ஆர்வம் இல்லை என்பதை வீறாப்பாகக் கோடி காட்டியிருக்கின்றார் அரசுப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா.

மறுபுறத்தில்

போர்த் தீவிரத்தில் வெறிகொண்டு, யுத்த முனைப் புடன் செயற்படும் மஹிந்த ராஜபக்ஷவின் இந்த அரசு டன் அமைதிப் பேச்சு சாத்தியப்படாது, சமாதான முயற்சி களுக்கும் வாய்ப்பு இல்லை என்று விசனம் தெரிவித்திருக் கின்றார் விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன்.

வெற்றி மமதையை அரசியல் லாபமாக்கும் நோக்குடன் அரசுத் தரப்பில் அமைச்சர்கள் சிலர் "நிபந்தனையற்ற பேச்சு' என்ற கயிற்றை அவிழ்த்து விட்டாலும்

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் அமைதிப் பேச்சு மூலமான தீர்வோ, சமாதான முயற்சிகள் ஊடான இணக்கமோ இப்போதைக்குச் சாத்தியப்படவே போவ தில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர் யாப்பா, தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரினதும் கருத்துகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.

இராணுவ ரீதியில் வெற்றிமேல் வெற்றி குவிந்து வரு கின்றது. இந்தச் சமயத்தில் ஏன் சமரசம்? ஒரேயடியாகத் தமிழர் தரப்பை சம்ஹாரம் செய்துவிட்டு மறு வேலை யைப் பார்க்கலாமே என்ற சிந்தனையே தென்னிலங்கை அரசியல் தலைமைத்துவத்தின் மத்தியில் மேலோங்கி நிற் கின்றது. அதைத்தான் அரசுப் பேச்சாளரான ஊடக அமைச்ச ரின் வீறாப்புப் பேச்சு பிரதிபலித்து நிற்கின்றது.

அரசின் நிலைப்பாடு அமைதி வழித் தீர்வல்ல, போர் வெறி அடக்குமுறையே என்பதை இப்பத்தியில் பல தடவைகள் துல்லியமாகத் தெரிவித்து வந்திருக்கின் றோம்.

""பயங்கரவாதிகளான புலிகளை கிழக்கிலிருந்து விரட்டி யடித்தமைபோல வடக்கிலிருந்தும் விரட்டியடிக்க அரசு திடசங்கற்பம் பூண்டிருக்கின்றது.'' என்று அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பிரகடனம் செய்தமை யும் அந்தப் பின்னணியில் அமைந்ததுதான்.

அந்த நோக்கையும் போக்கையும் மீள ஒரு தடவை உறு திப்படுத்தியிருக்கின்றார் ஊடக அமைச்சர் பிரியதர்சன யாப்பா. அவ்வளவே.

ஆனால், தற்போதைய இராணுவ நடவடிக்கைகளும், போர்வெறிப் போக்கும் அமைதி முயற்சிகள் என்ற தடத் துக்கு மீள முடியாத ஒரு வழிப்பாதை திசையில் இந்தத் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தை இழுத்துச் செல் கின்றன என்பதே யதார்த்தமாகும்.

இந்த இடைக்கால வெற்றிகளை எண்ணி தென்னி லங்கை துள்ளிக்குதிக்கின்றது. இந்த அத்திவாரத்தில் வெற்றிக்கோட்டை என்ற நிரந்தர ஜெய மாளிகையை அமைத்து விடலாம் என அது கனவு காண்கின்றது. அதனால் அமை தித் தீர்வுக்கான கடைசி வாய்ப்புகளையும் அது உதாசீனம் செய்து உதறித்தள்ளி வீறாப்புப் பேசுகின்றது.

தென்னிலங்கையின் இத்தகைய போக்குப் புதியதல்ல. இவ்விவகாரத்தில் முன்னைய தென்னிலங்கைத் தலைமை களும் இதே போக்கில் செயற்பட்டுத்தான் வாங்கிக் கட் டிக் கொண்டன என்பதும் நமக்குத் தெரிந்ததே.

1994 மத்தியில் பிரதமராகி, 1994 இறுதியில் ஜனா திபதியான சந்திரிகா குமாரதுங்கவும் 1995 நடுப்பகுதி யிலிருந்து இதே போக்கைத்தான் பின்பற்றினார்.

இப்போது மஹிந்தரின் அரசு தொப்பிகல உட்பட்ட கிழக் குப் பிரதேசத்தைக் கைப்பற்றியதும், அமைதி முயற்சி களை நிரந்தரமாக உதறித்தள்ளி, கொக்கரிப்பது போலவே, அச்சமயம் யாழ். குடாநாட்டை மீட்டு,"ஜெயசிகுறு' நடவ டிக்கையை வீராவேசத்தோடு முன்னெடுத்து சந்திரிகா அரசும் மார்தட்டியது.

ஆனால் கடைசியாக என்ன நடந்தது? பொறுத்தவர்கள் பொங்கிய போது நிலைமை மாறித் தலைகீழானது.

அமைதி வழித் தீர்வே சாத்தியப்படக்கூடியது என்ப தைக் காலம் கடந்த ஞானமாக சந்திரிகா அரசு உணர்ந்த சமயத்தில்தான், அந்த வாய்ப்பையும் தமது போர்வெறித் தீவிரத்தால் தான் கோட்டை விட்டு விட்டமையை அந்த அரசு புரிந்துகொள்ளும் துர்ப்பாக்கியம் அதற்கு ஏற்பட்டது.

தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையை பேச்சு மூலம் சமாதான நடவடிக்கைகள் வாயிலாக தீர்ப்பதற்குத் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை 1995 முற்பகுதியில் தான் பின்பற்றிய போர்வெறித் தீவிரத்தினால் கோட்டை விட்ட சந்திரிகாவின் தலைமை, பத்து ஆண்டுகள் கழித்து 2005 நவம்பரில் ஆட்சியை விட்டுத் தான் அகலும் வரை அந்த வாய்ப்பை மீளப் பெற்றுப் பயன்படுத்தத் துடித் தும் கூட அந்த வாய்ப்புக் கடைசிவரை அத்தலைமைக் குப் பிறகு கிட்டாமலேயே போய்விட்டது.

அதேபோலவே, மஹிந்தரின் தற்போதைய அரசும் ஆரம்ப இராணுவ வெற்றிகள் தந்த அரசியல் போதை காரணமாக மென்மேலும் போர்வெறித் தீவிரத்துக்குள் மூழ்குகின் றது.

இந்த இராணுவ வெ(ற்)றிப் போதை கலைந்து, உண்மை யும் யதார்த்தமும் தெளியும்போது தெரியும்போது அரு மையான வாய்ப்பைக் கோட்டை விட்ட கேடும் புரியத் தொடங்கும்.

அச்சமயத்தில் அமைதி முயற்சிகளுக்குத் துடிப்பது, குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடும் எத்தனமாகவே இருக்கும்.

அதைத் தென்னிலங்கை பட்டறியும்வரை பார்த்திருப் பதே இன்று தமிழர் தரப்பு செய்யக்கூடியது.

நன்றி - உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.