Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சிறிலங்காவில் நடைபெற்று வரும் போரில் 22,000 படையினர் அங்கவீனர்கள்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"சிறிலங்காவில் நடைபெற்று வரும் போரில் 22,000 படையினர் அங்கவீனர்கள்"

[சனிக்கிழமை, 14 யூலை 2007, 06:14 ஈழம்] [அ.அருணாசலம்]

சிறிலங்காவில் நடைபெற்று வரும் போரில் 1983 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை 22,000 படையினர் அங்கவீனராகியுள்ளனர் என்றும், அவர்களை பராமரிப்பது பெரும் சவாலாக உள்ளது என்றும் IRIN என்ற செய்தி நிறுவனம் தனது ஆய்வுச்செய்தியில் தெரிவித்துள்ளது.

அச்செய்தி விபரம்:

சட்டையின் ஒரு கை தொங்கிய வண்ணம் இருக்க முன்னாள் படைச்சிப்பாயும் மனித உரிமை செயற்பாட்டாளருமான அசோக தயாரட்ன தனது இடது கையினால் ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்டுக் கொண்டிருந்தார். அதனை முடித்த பின்னர் "முக்கியமான தேவைகளை விட நான் வழமையன தேவைகளுக்கு செயற்கை கையைப் பயன்படுத்துவதில்லை" என அவர் தெரிவித்தார்.

தயாரட்ன முன்னாள் கொமொண்டோ படைச் சிப்பாய் ஆவார். 1985 ஆம் ஆண்டு வடமேற்குப் பகுதியில் உள்ள வில்பத்துப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற மோதலின் போது தனது வலது கையை இழந்திருந்தார்.

இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட அவரது செயற்கைக் கை மிகவும் நுண்ணிய அசைவுகளையும் செய்யக்கூடியது. எனினும் அவர் தனது இடது கையினால்தான் எழுத வேண்டும். எனவே அவர் சிந்திக்கின்றார். இந்த செயற்கைக் கையினை தொடர்ச்சியாக பயன்படுத்த நான் அச்சமடைகின்றேன். ஏனெனில் அது பழுதடைந்து விட்டால் அதனை இங்கு திருத்துவதற்கு என்னால் முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

வலது குறைந்த முன்னாள் படையினரின் அமைப்பின் தலைவரான தயாரட்னவின் தற்போதைய நடவடிக்கை செயற்கையான அவையவங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை உள்ளூரில் அமைப்பது தான். அங்கு உற்பத்தியாகும் அவையவங்களை இலவசமாக அல்லது குறைந்த விலைகளில் காயமடைந்த படையினருக்கு வழங்குவதே அவரது திட்டம்.

சிறிலங்காவில் 15,000 - 20,000 வரையிலான அவையவங்களை இழந்த அரச படையினர் உள்ளனர். அவர்கள் செயற்கையான கை மற்றும் கால்களை பயன்படுத்தி வருகின்றனர் என தயாரட்ன தெரிவித்தார். அவையவங்களை இழந்த 8,000 படையினர் மற்றும் காவல்துறை உறுப்பினர்கள் உள்ளதாக அவரது அமைப்பின் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தினால் செயற்கை அவையவங்கள் வழங்கப்பட்டவுடன் அதனைப் பராமரிப்பதற்கு அல்லது அதனை மாற்றுவதற்கு அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். அரசினால் வழங்கப்படும் செயற்கை அவையவங்கள் இலகுவில் உடையக்கூடியவை. தரமான செயற்கை அவையவங்கள் தனியார் நிறுவனங்களினால் தயாரிக்கப்படுகின்றன. இவை 25,000 ரூபாய்களில் (227 டொலர்) இருந்து 75,000 ரூபாய்கள் (680 டொலர்) வரையான பெறுமதியுள்ளவை. வேலையற்று உள்ள அல்லது வாழ்க்கைக்கு தேவையான வசதியை மட்டும் கொண்டுள்ள வலது குறைந்த படையினருக்கு இதனை பெறுவது மிகவும் செலவானது.

சிறிலங்கா அரசானது கடந்த மூன்று தசாப்தங்களாக விடுதலைப் புலிகளுடன் போரிட்டு வருகின்றது. இந்தப் போரில் 65,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மோதல்கள் ஆரம்பமாகியதில் இருந்து பொதுமக்கள், இராணுவத்தினர், விடுதலைப் புலிகள் என 5,219 பேர் பலியாகியுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் தற்போதைய மோதல்களில் 1,525 படையினர் காயமடைந்துள்ளனர்.

2006 ஆம் ஆண்டு இறுதிப்பகுதி வரையிலும் 11,154 படையினரும், அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலர் நிரந்தரமாக அங்கவீனராகி உள்ளனர். அவர்கள் போரில் ஈடுபட முடியாது என இராணுவத்தின் புனர்வாழ்வு பணியகம் தெரிவித்துள்ளது.

அவையவங்களை இழந்த படையினர் 9,340 செயற்கை அவையவங்களை பயன்படுத்துவதாக அரச தரப்பு தகவல் தெரிவிக்கின்றது. இந்த அவையவங்கள் 2005 ஆம் ஆண்டு இறுதி வரையிலான காலப்பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்டவை. நலவாழ்வு மற்றும் புனர்நிர்மான நிலையங்களான ரணவிரு செவனா, அரச சார்பற்ற நிறுவனங்கள், ஜெய்ப்பூர் காலணித் திட்டம் என்பனவற்றில் இவை உற்பத்தி செய்யப்பட்டிருந்தன.

எனினும் 1983 ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் போரில் 22,000 அரச படையினர் அங்கவீனமாகி உள்ளதாக கணிக்கப்படுவதாக தயாரட்ன தெரிவித்துள்ளார். செயற்கை அவையவங்களை தயாரிப்பதற்கும் அதனைப் பராமரிப்பதற்கும் நான்கு அல்லது ஐந்து தொழில்நுட்பவியலாளர்களை மலேசியாவில் அல்லது தாய்வானில் பயிற்றுவிற்பதற்காக எமது அமைப்பு நிதியை எதிர்பார்க்கின்றது. இதன் மூலம் அவர்கள் இங்கு வர்த்தக நிறுவனத்தை ஆரம்பித்து நாட்டின் தேவையை நிறைவேற்ற முடியும்.

அங்கவீனரான ஜி.ஜெயதிலக்க தனது செயற்கை அவையவத்தை அணிவதற்கு முன்னர் அணியும் சிறப்பு காலுறையை வாங்குவதற்குக் கூட பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார். கொழும்பில் உள்ள இராணுவ வேலைப் பட்டறையில் எனது செயற்கை அவையவத்தை திருத்த வேலைக்காக நான் கொடுத்தால் அது எப்போது திரும்ப கிடைக்கும் என்பது எனக்கு தெரியாது. அங்கு மிக நீண்ட காத்திருக்கும் பட்டியல் உள்ளது. ஏனெனில் புதிதாக அங்கவீனர்களாகும் படையினருக்கு செயற்கை அவையவங்களை பொருத்துவதில் தான் அவர்கள் தற்போது முக்கிய கவனம் செலுத்தி வருகின்றனர் என ஜெயதிலக்க தெரிவித்தார்.

வலது குறைந்த முன்னாள் படையினரின் அமைப்பே போரினால் பாதிக்கப்பட்ட ஆண், பெண் படையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு தனியார் அமைப்பாகும். அது வலது குறைந்த படையினரின் நிலைமைகளை வெளிக்கொண்டு வரும் விழிப்புணர்வு நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றது. முக்கியமாக அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க அது முயற்சித்து வருகின்றது.

இந்த திட்டத்திற்கு உலக வங்கி 500,000 ரூபாய்களை (4,545 டொலர்கள்) வழங்கியுள்ளது. அதற்கான நிதி அந்த அமைப்பிடம் அண்மையில் வழங்கப்பட்டிருந்தது. பொது இடங்களில் தரமான உபசரிப்புக்களையும், போக்குவரத்து வசதிகளையும், போரினால் கணவரை இழந்த பெண்களுக்கான முன்னேற்றமான செயற்பாடுகளையும், காப்பகங்களையும் ஏற்படுத்த இந்த அமைப்பு முயற்சித்து வருகின்றது.

கொடையாளிகளின் உதவிகளைப் பயன்படுத்தி போரில் ஈடுபட்ட படையினர் சிறப்பாக அமைக்கப்பட்ட ரணவிரு (போர் வீரர்) கிராமங்களில் வாழ்வதற்கு தயாரட்ன உதவி வருகின்றார். இந்த கிராமம் அயல் கிராமங்களுடன் இணைந்ததாக உள்ளது. அவர் விடுதலைப் புலிகளில் உள்ள அங்கவீனர்களையும் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகின்றார்.

முன்னாள் படையினர் தமது 55 ஆவது வயதை அடையும் போது அவர்கள் ஓய்வூதியம் பெறும் தகமையை அடைவதனால் தற்போது வழங்கப்படும் ஊதியங்களில் பெரும் வீழ்ச்சி ஏற்படும் என்பது அவர்களின் கவலை.

1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் நடைபெற்ற சமரின் போது விடுதலைப் புலிகளின் மோட்டார் தாக்குதலில் தனது இரு கால்களையும் இழந்த எஸ்.எச்.யூ. ஜெயதிஸ்ஸ மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் இராணுவ ஊதியத்தில் வாழ்ந்து வருகின்றார். தற்போது நான் எந்த தொழிலிலும் ஈடுபடவில்லை, ஊதியம் வருவது நிறுத்தப்படும் போது எனது எதிர்காலம் தொடர்பாக நான் கவலை அடைந்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.

அப்பியாசப் புத்தகங்கள் மற்றும் மெழுகுவர்த்திகள் தயாரித்தல் போன்றவற்றிற்கான பயிற்சிகளை வலது குறைந்த முன்னாள் படையினரின் அமைப்பு வழங்கி வருவதுடன் முச்சக்கர ஓட்டோ வாகனங்களை வாங்குவதற்கு அது குறைந்த வட்டி வீதத்திலான கடன்களையும் வழங்கி வருகின்றது.

இருந்த போதும் அதில் வெற்றி பெறுவது சவலானது, நாங்கள் எமது இல்லத்தில் சிறிய மெழுகுவர்த்தி செய்யும் வர்த்தகத்தை நடத்தி வருகின்றோம். எமது 3 பிள்ளைகள் உட்பட நாம் எல்லோரும் அதில் ஈடுபட்டு வருகின்றோம். ஆனால் எமது முக்கிய பிரச்சினை தொடர்ச்சியான கொள்முதலாளர்களே. எமது பொருட்களை விற்பனை செய்வதற்கு நாம் கடை, கடையாக ஏறி- இறங்க வேண்டியுள்ளது என கண்ணிவெடியில் தனது கண்பார்வையை இழந்த முன்னாள் படைச் சிப்பாயின் மனைவியான கே.திலகா பிரியங்கானி தெரிவித்தார்.

போரில் பாதிக்கப்பட்ட படையினருக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதிலும் தயாரட்ன அக்கறை செலுத்தி வருகின்றார். வலது குறைந்த படையினர் தமது எஞ்சிய வாழ்க்கைக்காலத்தை நிம்மதியாக பதற்றம் இன்றி கழிப்பதற்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் வழங்குவதற்கும் உதவிக்கு தேவைப்படும் செலவுகளே எமக்குள்ள பெரிய சவால்கள் என அவர் தெரிவித்தார்.

போரினால் அவர்களின் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்புக்களே குற்றங்கள் மற்றும் வன்முறைகள் அதிகரிப்பதற்கும் அதில் முன்னாள் படையினர் ஈடுபடுவதற்குமான காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.