Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தேசபிதா அண்ணல் காந்தி அடிகளின் 153 ஆவது பிறந்தநாள் இன்று..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசபிதா அண்ணல் காந்தி அடிகளின் 153 ஆவது பிறந்தநாள் இன்று..!

உலகுக்கு அகிம்சையை போதித்த இந்தியாவின் தேசபிதா என அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 153வது ஜனனதினம் இன்றாகும்.

அதனை முன்னிட்டு இன்றையதினம் இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் நிகழ்வுகள் நடைபெற்றன.

அந்தவகையில் மகாத்மா காந்தியின் 153 வது ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வவுனியார், மன்னார் மற்றும் மலையகத்தில் இடம்பெற்றன.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவு தூபியில் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாநகர முதல்வர், மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்த காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன்  மலர் மாலை அணிவித்து மலரஞ்ஞலி செலுத்தினர்.

இந்நிகழ்வானது தற்போதைய கொவிட் சூழ்நிலையை கருத்திற்கொண்டு ஐந்து பேரிற்கு மேற்படாதோரின் பங்குபற்றுதலுடன்  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 இதேவேளை இந்திய தலைநகர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இந்திய பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 அத்தோடு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். 

மேலும் சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தியின் உருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

இதனையொட்டி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் மகாத்மா காந்தியடிகளின் திருவுருவ புகைப்படத்திற்கு ஆளுநர் ஆர். என். ரவி, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் சர்வோதயா சங்கத்தினர் தேசபக்தி பாடல்களை பாடினர்.

காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க .ஸ்டாலின் தெரிவிக்கையில், 

''அஹிம்சை - சகோதரத்துவம் என மானுட சமுதாயத்திற்கு இன்றியமையாத பண்புகளை வாழ்வின் நெறியாகக் கொண்டு வாழ்ந்து நமக்கு கற்பித்த மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள்.

தேசத்தந்தை காட்டிய நல்வழியில் நாமும் நாடும் நடைபெறுவதே இன்றைக்கும் என்றைக்கும் தேவையாகும். சகோதரத்துவத்தை வளர்ப்போம்! ''என பதிவிட்டிருக்கிறார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன், தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.

மகாத்மா காந்தி குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் என்ற ஊரில் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் திகதி பிறந்தார்.

ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்தவராவார்.

மதக் கலவரங்களை நிறுத்தி இந்து -முஸ்லீம் ஒற்றுமைக்காக தண்டி யாத்திரை மேற்கொண்டார். நாடு விடுதலை பெறும் வரை ஓயாமல் முழு மூச்சாக தேசத் தொண்டாற்றினார்.

அகிம்சை, எளிமை, ஆன்மீகம், தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு போன்ற அவரது கொள்கைகள் எதிர்கால இந்தியா மாத்திரமன்று உலக மக்களின் தொலைதூர கலங்கரை விளக்குகளாக திகழ்ந்தன.

சுதேசி இயக்கம், கதர் போன்ற கிராமியப் பொருள்கள் விற்பனை காந்தியால் ஊக்கம் பெற்றன.

காந்தி உள்ளிட்ட தலைவர்களின் தன்னலமற்ற தொண்டால், பல தசாப்தங்களாக ஆண்ட வெள்ளையர்களிடமிருந்து இந்திய நாடு சுதந்திரம் பெற்றது.

வாழ்நாள் முழுவதும் அகிம்சையை நேசித்து, சத்தியத்தைக் கடைப்பிடித்ததால், கடல்கடந்து, காலம் கடந்து, இனம், மொழி, மதம் என எல்லாவற்றையும் கடந்து உலகின் வழிகாட்டியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அண்ணல் காந்தி என்றால் அது மிகையாகாது. 
 

https://www.virakesari.lk/article/114472

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.