Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் விமானம் திருகோணமலைக்கு மேல் பறந்தது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான விமானம் திருகோணமலை கடற்பிரதேச பகுதியில் பறந்ததாக ராடார் உறுதிப்படுத்தியதோடு இலங்கை கடற்படையினரும் உறுதி செய்துள்ளனர். பல பொதுமக்களும் இதனை கண்டுள்ளனர்.

Tiger aircraft flies over Trincomalee!

http://www.lankatruth.com/full_story/2007/...20070714_01.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருகோணமலையில் மர்ம விமானம் நோட்டம்.

திருகோணமலை மாவட்டத்தில் இனந்தெரியாத விமானம் ஒன்று வட்டமிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு பிரதேசத்தில் இருந்தே மேற்படி விமானம் வந்துள்ளதாகவும்,

திருகோணமலை புல்மோட்டை பிரதேசத்திற்கு மேலால் இந்த விமானம் பறந்து சென்றதை பிரதேசிய வாசிகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை திருகோணமலை கடற்படை பிரதான தளத்தில் உள்ள றாடர் இயந்திரத்திலும் விமானம் வந்ததன் தடங்கள் விழுந்தள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்தள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கடற்படையினார் பெரும்பாலும் இது விடுதலைப்புலிகளின் விமானமாகவே இருக்கலாம். அவர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கான உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்துள்ளோம்.

* சங்கதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமலை கடற்பரப்பில் பறந்த புலிகளின் வானூர்தி: கொழும்பு ஆங்கில ஊடகம்

[ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2007, 05:05 ஈழம்] [ப.தயாளினி]

தமிழீழ விடுதலைப்புலிகளின் வான்படை வானூர்தி ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பு மேலாக பறப்பில் ஈடுபட்டதை சிறிலங்கா கடற்படையின் சுற்றுக்காவல் அணி அவதானித்துள்ளது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகத்தில் இது தொடர்பில் வெளியான செய்தி விபரம்:

அதன் பின்னர் அது தரையில் உள்ள இராணுவத்தினராலும் உறுதிப்படுத்தப்பட்டது.

இது மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் பெரும் எச்சரிக்கை உசார் நிலைகளை ஏற்படுத்தியிருந்தது.

பின்னர் அந்த வானூர்தி வன்னியில் தரையிறங்கியதை இராணுவத்தினர் அறிந்து கொண்டனர்.

வான் அல்லது தரை தாக்குதல்கள் கொழும்பில் நிகழலாம் என்பதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

திருகோணமலையில் புலிகளின் வான் தாக்குதல் நடைபெறக் கூடும்: கொழும்பு ஆங்கில ஊடகங்கள்.

திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று கொழும்பு ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழான த நேசனில் வெளியாகியுள்ள செய்தி:

சிறிலங்காவின் இராணுவ மற்றும் பொருளாதார நிலைகளைத் தாக்கப் போவதாக விடுதலைப் புலிகள் கடந்த வியாழக்கிழமையன்று பகிரங்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து கொழும்பு மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் பாதுகாப்பு சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குடும்பிமலையில் புதன்கிழமையன்று விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருகோணமலை அல்லது கொழும்பு மீது தமிழீழ விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதான தகவலறிந்த வட்டாரங்கள் நேற்று சனிக்கிழமையன்று "நேசனுக்கு" தெரிவித்தன.

"எதுவித சந்தப்பர்ங்களும் வழங்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் உச்ச உசார் நிலையில் உள்ளனர்" என்று உயர் வட்டாரங்கள் எமக்குத் தெரிவித்தன.

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை மாலையன்று திருகோணமலையில் ராடாரில் அடையாளம் காணப்பட முடியாத பொருள் ஒன்று அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடற்படையினரால் வான்படையினர் உசார் படுத்தப்பட்டனர்.

அடையாளம் காணப்பட முடியாத அப்பொருளை கடற்படையினரும் பொதுமக்களும் கூட அவதானித்ததுடன் தொடர்ச்சியான சப்தம் எழும்பியதையும் கேட்டுள்ளனர். பல நிமிடங்களுக்குப் பின்னர் ராடாரிலிருந்து அந்தப் பொருள் மறைந்து சென்றதுடன் சப்தமும் நின்றுள்ளது. இந்த சம்பவம் வெள்ளிக்கிழமையன்று இரவு 7 மணியளவில் நடந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகமான சண்டே ரைம்ஸ்லில் இது தொடர்பில் எழுதப்பட்டுள்ளதாவது:

விடுதலைப்புலிகளின் வானூர்தி ஒன்று கடந்த வெள்ளிக்கிழமையன்று புல்மோட்டை கடலுக்கு மேலால் பறப்பில் ஈடுபட்டதை கடற்படையின் சுற்றுக் காவல் அணி அவதானித்துள்ளது.

அதன் பின்னர் அது தரையில் உள்ள இராணுவத்தினராலும் உறுதிப்படுத்தப்பட்டது.

இது மட்டக்களப்பிலும், திருமலையிலும் பெரும் எச்சரிக்கை உசார் நிலைகளை ஏற்படுத்தியிருந்தது.

பின்னர் அந்த வானூர்தி வன்னியில் தரையிறங்கியதை இராணுவத்தினர் அறிந்து கொண்டனர்.

வான் அல்லது தரை தாக்குதல்கள் கொழும்பில் நிகழலாம் என்பதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Puthinam-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.