Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

October 8, 2021

spacer.png

இந்திய இழுவைப் படகு எல்லை தாண்டி வருவதை தடுக்ககோரி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நீரியல் வளத்துறை திணைக்களத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்திய இழுவைப்படகுகள் இலங்கை எல்லைக்குள் எல்லை தாண்டி வந்து வடக்கு மீனவர்களின் வலைகளை அறுத்து எறிவதோடு படகுகளை சேதமாக்கி உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் நிலையில் அவற்றை  தடுக்க கோரி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குருநகர் மீனவர்கள் கற்கட தீவுக்கு அருகில் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது , இந்திய இழுவைப்படகு ஒன்று குருநகர் மீனவர்களின் படகினை மோதி சேதப்படுத்தியதுடன் , இழுவைப்படகில் வந்த இந்திய மீனவர்கள் , குருநகர் மீனவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு அவர்களை கடலில் வீசவும் முயற்சித்திருந்தனர். 

இழுவைப்படகு மோதி கடும் சேதங்களுக்கு உள்ளான தமது படகில் குருநகர் மீனவர்கள் கரை திரும்பி இருந்தனர். 

இந்நிலையிலே வடக்கு கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்குமாறு கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதேவேளை இந்திய இழுவை படகுகளால் கடந்த 5 வருட காலத்தில் வடக்கு மீனவர்களின்  சுமார் 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான உடமைகளை சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ச் ஸ்ரீ வர்தன் ஷ்ரிங்கலாவுடனான சந்திப்பின் போது கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

 

 

https://globaltamilnews.net/2021/166954

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில்  மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

(எம்.நியூட்டன்)

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை  காலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

IMG-20211008-WA0003.jpg

கடந்த 5ம் திகதி இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவை படகு, குருநகர் பகுதி மீனவர்களின் படகினை நேராக மோதி சேதப்படுத்தியதோடு படகில் இருந்த குருநகர் மீனவர்களை தாக்க இந்திய மீனவர்கள் முயன்ற நிலையில், இன்று அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டே மீனவர் சங்கங்களின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெற்றது.

IMG-20211008-WA0004.jpg

எமது கடல் வளங்களை அழிக்காதே, இலங்கை அரசே இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்து, எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி வெளிநாட்டு மீனவர்களை அனுமதிக்காதே, இலங்கை அரசே உரிய சட்டங்களை நடைமுறைப்படுத்து, கடல் வளத்தை சுரண்டி எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே போன்ற பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டன.

IMG-20211008-WA0005.jpg

போராட்டத்திற்கு பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளரிடம்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களால் கொடுக்கப்பட்டது.

அதேவேளை கடற்றொழில் அமைச்சருக்கும்,யாழ் மாவட்ட செயலகத்திற்கும், யாழில் உள்ள இந்திய துணைத்தூதரகத்திற்கும் இதன் மகஜர் கையளிக்கப்பட்டது.

IMG-20211008-WA0002.jpg

 
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

இலங்கை அரசே இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்து

கேட்பதற்கு நாதியற்றவன் தமிழன், எல்லோரும் சேர்ந்து அடிக்கிறார்கள். இலங்கைத்தமிழனுக்கு சார்பான குரல் எழுந்து விடக்கூடாதே என்பதற்காகவே இலங்கையரசு வேடிக்கை பார்ப்பதோடு தூண்டியும் விடும். தானே அழித்துக்கொண்டு, அதே வேலையை செய்து தன் நோக்கத்தை இலகுவாக்கும்  இன்னொருவரை தடுப்பாரோ? தன்னை அழித்துக்கொண்டிருப்பவனிடமே நீதி கேட்கும் அவல நிலை தமிழனுக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.