Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிஷாத்தின் பிணை கோரிக்கை : 14 ஆம் திகதியன்று வாதங்கள், சட்ட மா அதிபரும் இணக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாத்தின் பிணை கோரிக்கை : 14 ஆம் திகதியன்று வாதங்கள், சட்ட மா அதிபரும் இணக்கம்

எம்.எப்.எம்.பஸீர்

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள பிணைக் கோரிக்கை தொடர்பிலான வாதங்களை  எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

நேற்று இது தொடர்பிலான வழக்கு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் ரிஷாத் தரப்பின் சட்டத்தரணிகளின் இணக்கத்துடன் இந்த திகதி குறிக்கப்பட்டுள்ளது.

  நேற்றைய தினம்  ரிஷாத் பதியுதீன் சார்பில் பிணை கோரி வாதங்களை முன் வைக்க ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தலைமையில்  சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழுவினர் தயாராக  ஆஜராகினர்.  

Rishad.jpg

இந்நிலையில் கடந்த மூன்று முறை மன்றில் ஆஜராகாத சட்ட மா அதிபர்  சார்பான பிரதிநித்துவத்துக்கான குறை நேற்று காணப்படவில்லை. சட்ட மா அதிபர் சார்பில் நேற்று பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன்  மன்றில்  ஆஜரானார்.

 இந்நிலையில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன், எதிர்வரும் 13 ஆம் திகதி உயர் நீதிமன்றில் ரிஷாத் பதியுதீன் விவகார  அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு வரும் நிலையில்,கால அவகாசத்தை தருமாறு கோரினார்.

 அதன்படி ரிஷாத்துக்கு பிணைக் கோரும் வாதங்களை முன் வைக்கும் திகதி எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணையின் கீழ் உள்ள, கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் குறித்த வழக்குக் கோவை நேற்று, கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில்  மீள விசாரணைக்கு வந்தது.

அதில் 7 சந்தேக நபர்கள் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக ஏற்கனவே வேறு குற்றச்சாட்டில் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

 இந் நிலையில் நேற்றைய தினம் 7 ஆவது சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன ஆஜரானார்.
 

https://www.virakesari.lk/article/114962

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயிலில் வசதி குறைவு என்று கத்திறவர்....எப்படி குழு குழுவென்று இப்படி இருக்கமுடியும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வழக்கின்றி வைக்கப்ட்டு இருக்கும் ரிஷாட்டும், ராஜபக்சக்களும்! சபாநாயகருக்கு கடிதம்.

October 10, 2021

rishad-bathiudeen-New.jpg?resize=910%2C5

 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தொடர்பான குற்றச்சாட்டுகளை உடனடியாக பாராளுமன்றத்துக்கு தெரிவிக்குமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் கைச்சாத்திட்ட கடிதம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அவர் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அவர் மீது வழக்குத் தொடர வேண்டும் அல்லது உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரகுமான் தெரிவித்தார்.

இதேவேளை, ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால், உடனடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியின் தலைமைச் செயலாளர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 

https://globaltamilnews.net/2021/167063

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.