Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொர்க்க பூமியாக இருக்கவேண்டிய எமது நாட்டை சூறையாடும் இந்த அரசியல் கலாச்சாரம் மாறவேண்டும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1633855979546.jpg

 

நிரூபமா ராஜபக்‌ஷ மற்றும் அவரது கணவர் நடேசனின் வெளிப்படுத்தப்படாத

 செல்வம் பெண்டோரா பத்திரிகையில் இருந்ததால் இலங்கையில் உள்ள மக்கள் ஏன் இவ்வளவு ஆச்சரியப்படுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.
 
இந்த வெளிப்பாடுகளில் எமது நாட்டைச் சேர்ந்த நிரூபமா ராஜபக்‌ஷ மற்றும் நடேசனின் பெயர்கள் மட்டும் தானா இருந்தது வேறு  பெயர்கள் இல்லையா அல்லது பெண்டோரா பத்திரைகைக்கும் புலப்படாத விதத்தில் ஏனையோர் கலவாடிய செல்வங்களை அவர்கள் மறைத்து வைத்துள்ளனரா என்பதுதான் எனக்கு இதில் உள்ள ஆச்சரியமான கேள்வி? இலங்கையைச் சேர்ந்த 93 பேர் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரும் இந்த பெண்டொரா பத்திரிகையில் உள்ளனர் என்பதும் வெளியிடப்பட்டுள்ளது.
 
 நிரூபமா ராஜபக்ஷவும், நடேசனும் வெளிப்படுத்தாத அளவுக்கு செல்வத்தை மறைத்து வைத்திருந்தால், இங்கு பெயர் குறிப்பிடப்படாத மற்றவர்கள் எவ்வளவு செல்வத்தை மறைத்து வைத்திருப்பார்கள் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.
 
 பல எமது நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடன் நெருக்கமாகப் பழகும் தொழிலதிபர்கள் எவ்வளவு சொத்துகளை மறைத்து வைத்துள்ளார்கள் என்பதை யாராலும் சொல்ல முடியாது.  ஒருவேளை அந்த மொத்த சொத்துக்கள் இலங்கையின் தேசிய வருமானத்தை விட பலமடங்கு அதிகமாகவும் இருக்கலாம்.  அரசியல்வாதிகளும் அவர்களின் அனுசரணையுள்ள தொழிலதிபர்களும் இத்தகைய சொத்துக்களை திருடி, கண்டுபிடிக்க முடியாத இடங்களில் மறைத்து வைத்திருப்பதால், இலங்கை போன்ற சிறந்த எமது நாடு மிகவும் ஏழ்மையாகிவிட்டது, மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
 
 பல அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் ஒருவருக்கொருவர் விசுவாசமாக, கட்சி வேறுபாடின்றி ஒன்றாக திருடுகிறார்கள்.  திருடப்பட்ட செல்வத்தை ஒன்றாக பதுக்கின்றனர்.  எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் ஒரே தொழிலதிபர்கள் தான் பணம் கொடுக்கிறார்கள்.  எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் ஒப்பந்தம் செய்துகொண்டு இவர்கள் வியாபாரம் செய்கிறார்கள்.  இந்த தொழிலதிபர்களுடனான நட்பு வட்டம் தான் அரசியலையும் கையாளுகிறது, அரசாங்கங்களை உருவாக்குகிறது, அவர்களை இல்லாமலும் செய்கிறது, மீண்டும் எதிக்கட்சியுடன் சேர்ந்து அரசங்கத்தை உருவாக்க முயற்சிப்பது என்று தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரம் நாம் கண்ட சாக்கடை அரசியலை விடவும் மோஷமான அரசியல் கலாச்சாரம் இன்று எமது நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு எமது நாட்டில் இயங்கும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் சில இந்த அரசாங்கத்தை உருவாக்க நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி மக்களை குழப்பி இன்று அரசில் பணம் சம்பாதிக்கும் கும்பலாகவும், மரணதண்டனை கைதியான தனது சகோதரனையும் விடுவித்ததை சொல்லலாம்.
 
 இந்த அரசியல்வாதிகளுக்குப் பிறகு அவர்களில் பலரின் குழந்தைகள் அரசியலுக்கு வருகிறார்கள்.  அந்தந்த அரசியவாதிகளின் பிள்ளைகள்  பாடசாலை, விளையாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைகழகங்களில், நைட் கிளப், பார்ட்டிக்கு ஒன்றாக செல்கின்றனர்.  இவ்வாறு ஒன்றாக சென்று விளையாடும் அவர்களின் பிள்ளைகள்  இரண்டு பிரிவுகளாக பிரிந்து மக்களிடம் வாக்கு கேட்பார்கள்.  ஒரு ரிலே போல,  தள்ளாத கிழட்டு வயதில் அதிகாரத்திலிருக்கும் தாத்தாவிலிருந்து, பின் தந்தைக்கு, தந்தையிலிருந்து மகன், மகள்,மருமக்கள் அல்லது பேரப்பிள்ளைகளுக்கு  மாறுகிறது.  இந்த மகள்கள், மகன்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மாமாக்கள், அத்தைகள் அல்லது அவர்களிடம் வேலைசெய்த பணியாளர்கள்   அனைவரும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.  இப்படித்தான் தலைமுறைகளாக இலங்கையில் தற்போது அரசியலும், வணிகமும் நடைபெறுகிறது. அதனால் தான் இன்று பாராளுமன்றத்தில் பல உறுப்பினர்கள் மிகவும் கீழ்த்தரமாக வார்த்தை பிரயோகங்களை பாவிப்பதுடன் எந்தவிதமான சிறப்பான ஆதாரமுமற்ற விவாதங்களுடன் இனவாதத்தையும் கலந்து பேசிக் கொண்டிருப்பதனை காண்கிறோம்.
 
 யார் எதை வெளிப்படுத்தினாலும், இவர்கள் யாரும் விசாரிக்கப்படமாட்டார்கள்  என்பது தெளிவாகிறது.  யாரும் யாரையும் காட்டிகொடுக்காது கமிட்டிகளை நியமித்து, கமிஷன்களை நியமித்து, காவல்துறைக்கும்,நீதித்துறைக்கும் இடையில் பந்தாடி பின் வாக்களிக்கும் மக்கள் இதையெல்லாம் மறக்கும் வரைக்கும் நேரத்தை வீணடிக்கிறார்கள்.  பின்னர், தேர்தல் வந்ததும் அவர்கள் ஏற்கனவே செய்தவற்றை திரும்பவும் மக்களிடம் கூறி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள்.  தேர்தல் முடிந்ததும் பிறகு, வாக்களித்த மக்களும் இதையெல்லாம் மீண்டும் மறந்து விடுகிறார்கள். அதுதான் அவர்கள் மீண்டும் மீண்டும் இவ்வாறு செய்ய தூண்டுகிறது.
 
மக்கள் எப்போதும் பரிதாபமானவர்கள் ஏனென்றால் எப்போதும் எதிர்பார்ப்புகளை நம்பி, நம்பி ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர்.
 
 இந்தக் கும்பல் திருடுவது மக்களுக்கும் தெரியும்.  அவர்கள் தங்கள் செல்வத்தை திருடுகிறார்கள் என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள்.  அவர்களும் தங்கள் குழந்தைகளும் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளுக்கு இந்த கும்பல் தான் காரணம் என்பதையும் அறிவார்கள்.  ஆனால் அவர்கள் அந்த நேரத்தில் ஒரு சிறிய நன்மைக்காக, ஒரு குறுகிய கால நன்மைக்காக அதை ஒரு பிச்சைக்காரனின் புண் போல அதனை பராமரிக்கிறார்கள்.  பிச்சைக்காரன் காயத்தைத் தக்கவைக்க வேண்டியது போலவே, இந்த நாட்டு மக்களும் மீண்டும் மீண்டும் ஏமந்துபோகிறார்கள் என்பது தான் கவலைக்குரிய விடயம்.
 
 தேர்தலின் பின்னர் இலங்கையில் பெரும்பாலான கருப்புப் பணம் வெள்ளையாக்கப்படுகிறது, அதற்கான புதிய சட்டங்களும் அதே அரசாங்கத்தினால் இயற்றப்பட்டு பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்படுகிறது அதற்கும் தேவையென்றால் வரப்பிரசாதங்களை கொடுத்து 2/3 பெரும்பான்மையும் பெற்று பின்னர் மக்களுக்கு புதிய கதைகளை கூறுவார்கள்.  அவ்வாறுதான் தற்போது  ராஜபக்‌ஷ குடும்பத்தை சேர்ந்த அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ கூறினார்  தனது உறவினர் நிரூபமா ராஜபக்‌ஷ முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவுக்கு ஆதரவளித்தாராம் அவருடைய 3500 கோடி செல்வம் முன்னாள் ஜானாதிபதிகளான ஆர் பிரேமதாச மற்றும் சந்திரிகா அம்மையார் போன்றோரின் காலத்தில் நடந்தவையென்றும் அவரது திருமனத்தின் போது கிடைத்த செல்வங்கள் என்று புதியகதை கூறுகிறார். பெண்டோரா பத்திரிகையின் வெளிப்பாடுகளின் கால எல்லை இன்னும் வெளியாகவுமில்லை.
 
 இலங்கையில் இருக்கும் அரசியல் தலைமைகளினது பொதுவான கனவு, இலங்கையை சொர்க்கபூமியாக மாற்றுவதை விட பொருளாதார ரீதியாக படு பாதாளத்துக்கு எடுத்துச் செல்வது போன்றுதான் இருக்கிறது அப்போதுதான் அவர்களுக்கு ஊழல் செய்வதும் நாட்டை சூரையாடுவதும் மிகவும் இலேசாக இருக்கும் ஒருவேளை 33 வருட கால யுத்தத்தை முடித்ததும் தற்போது ஒரு சிலருக்கு கவலையாகவும் இருக்கலாம் அதனால்தானோ மீண்டும் இனவாதம் மதவாதம் தலை தூக்குமளவுக்கு ஏஜெண்டுகளும், மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் பேச்சுக்களும் இருக்கிறது இதற்கு இன்னொருவகையில் மீண்டும் மக்களின் எண்ணப்பாடுகளை திசை திருப்பி மீண்டும் மீண்டும் நாட்டின் சொத்துக்களை இலங்கை மக்கள் எல்லோரும் நித்திரை கொண்டிருக்கும் நேரத்தில் ஏலம் போட்டு விற்பனை செய்யவும்  அது துணையாக அமையலாம் என்று நினைக்கின்றார்களோ தெரியவில்லை.
 
நாடுமுடக்கம் நீக்கப்பட்டதும் கடவுச்சீட்டு பெற்றுகொள்வதற்காக மக்கள் நீண்டவரிசையில் நிற்கிறார்கள் நாட்டை விட்டு சென்றுவிட வேண்டும் என்று ஆனால் நாட்டை விட்டு வெளியேறுவது இதற்கு தீர்வல்ல.
 
 நம் அனைவரும் ஏறக்குறைய ஒரே மாதிரியான இந்த நயவஞ்சகர்களை அடையாளம் கண்டு அவர்களை மீண்டும் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற வைக்காமல் தகுந்த பாடம் புகட்ட ஒன்றுசேர வேண்டும். 
 
எமது நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை - 225 அதில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் 69 பேர், சாதாரண தரம்(O/L) சித்தியடைந்தவர்கள் - 95 பேர், உயர்தரம்(A/L) சித்தியடைந்தோர் - 126 பேர், இவர்களில் மதுபான கடைக்கு அனுமதிப் பத்திரம் வைத்திருப்போர் - 110 பேர், இவர்களைத் மீண்டும் மீண்டும் தெரிவு செய்த இலங்கை மக்களின் கல்வி அறிவு 80%க்கு மேல்!
 
சிந்திப்போம்…. நாட்டை பாதுகாக்க மக்களாக ஒன்றுபடுவோம்.
 
#ஹிதாயத்_சத்தார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.