Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புன்னகை தொலைத்தவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் அவர்கள் இசைந்தும் அசைந்தபடியும் தான் இருக்கின்றனர்.

பெருங்குரலெடுத்து அழமுடியாத அவலம் கொண்டவர்கள்

தினமும் மகிழ்வாய்க் கண்மூடித் தூங்கி அறியாதவர்கள்  

சிலநாட்களேனும் பாரங்களின்றிப் பசியாற முடியாதவர்கள்

 

பசிக்கும் வயிறைப் பானைத் தண்ணீரில் நிரப்பியபடி பிள்ளைகள்

வயிற்றை நிரப்பத் துடிப்பவர்கள்

கோடை வெயில் கொடுமழை கண்டும்

கால்கடுக்கத் தினம் கனவு நெய்பவர்கள்

 

கணவனின் அணைப்பின்றி மனது தகிக்கையில்

கண்டவர் பார்வையில் கசங்கித் துடிப்பவர்கள்

அடிமுடி தேடியும் அகப்படா அன்பின் அகலமும் நீளமும்

ஆழமும் அறியாத எரிதளலின் எச்சமாய் இருப்பவர்கள்

 

இடர்கள் கடந்தும் கடக்காததுவாய் தொடரும் துயரில்

துவண்டிடாது துச்சமாய் துயரைக் கடப்பவர்கள்

எச்சங்கள் பல எஞ்சி இருப்பினும் எள்ளளவேணும்

எதிர்வினையற்று எல்லாம் கடந்தும் வாழ்பவர்கள்

 

எரிகின்ற நெருப்பாய் மனம் இருந்தும்

ஏகாந்த வெளிகளை எல்லைக்களற்றுத் கடக்கும் மனதினர்

புகை படர்ந்த வாழ்வின் தூசிகளை துயருடன் கடந்தாலும்

காலங்களை வசவுடன் கடக்காதவர்

 

எதிர்கால இருளின் முன்னே ஏதுமறியாது ஏங்கித் தவித்தபடி

எங்கோ இருக்கும் வெளிச்சம் வரக் கனவுகளே அற்றுக் காத்திருக்கின்றனர்

காலத்தின் முன்னே கலைந்த வாழ்வை துவைத்துப்போட்டபடி

புன்னகை தொலைத்த ஏதிலிகளான எம் பெண்கள்   

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்னும் அவர்கள் இசைந்தும் அசைந்தபடியும் தான் இருக்கின்றனர்.

 

பெருங்குரலெடுத்து அழமுடியாத அவலம் கொண்டவர்கள்

 

தினமும் மகிழ்வாய்க் கண்மூடித் தூங்கி அறியாதவர்கள்  

 

சிலநாட்களேனும் பாரங்களின்றிப் பசியாற முடியாதவர்கள்

 

 

பசிக்கும் வயிறைப் பானைத் தண்ணீரில் நிரப்பியபடி பிள்ளைகள்

 

வயிற்றை நிரப்பத் துடிப்பவர்கள்

 

கோடை வெயில் கொடுமழை கண்டும்

கால்கடுக்கத் தினம் கனவு நெய்பவர்கள்

 

 

கணவனின் அணைப்பின்றி மனது தகிக்கையில்

கண்டவர் பார்வையில் கசங்கித் துடிப்பவர்கள்

 

அடிமுடி தேடியும் அகப்படா அன்பின் அகலமும் நீளமும்

ஆழமும் அறியாத எரிதளலின் எச்சமாய் இருப்பவர்கள்

 

 

இடர்கள் கடந்தும் கடக்காததுவாய் தொடரும் துயரில்

துவண்டிடாது துச்சமாய் துயரைக் கடப்பவர்கள்

 

எச்சங்கள் பல எஞ்சி இருப்பினும் எள்ளளவேணும்

எதிர்வினையற்று எல்லாம் கடந்தும் வாழ்பவர்கள்

 

 

எரிகின்ற நெருப்பாய் மனம் இருந்தும்

ஏகாந்த வெளிகளை எல்லைக்களற்றுத் கடக்கும் மனதினர்

 

புகை படர்ந்த வாழ்வின் தூசிகளை துயருடன் கடந்தாலும்

காலங்களை வசவுடன் கடக்காதவர்

 

 

எதிர்கால இருளின் முன்னே ஏதுமறியாது ஏங்கித் தவித்தபடி

எங்கோ இருக்கும் வெளிச்சம் வரக் கனவுகளே அற்றுக் காத்திருக்கின்றனர்

 

காலத்தின் முன்னே கலைந்த வாழ்வை துவைத்துப்போட்டபடி

புன்னகை தொலைத்த ஏதிலிகளான எம் பெண்கள்   

 

 

 

பகிர்வதற்கு நன்றிகள்..💐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழத் தேசியன் 

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் வாழ்வை முன்னேற்ற இருக்கும் அமைப்புக்களின் போதாமைகளினால்தான் ஏதிலி வாழ்வு தொடர்கின்றது. அது தொழில், வருமானம் குறைந்த இக்காலத்தில் இன்னும் மோசமாக மாறியுள்ளது. சமூகச் சிந்தனை உள்ளவர்கள் சேர்ந்து வேலை செய்யாமல் இருப்பதும் ஒரு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கனமான கவிதை, கவனமாக எழுதியிருக்கிறீர்கள் .......பாராட்டுக்கள்........!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

பெண்களின் வாழ்வை முன்னேற்ற இருக்கும் அமைப்புக்களின் போதாமைகளினால்தான் ஏதிலி வாழ்வு தொடர்கின்றது. அது தொழில், வருமானம் குறைந்த இக்காலத்தில் இன்னும் மோசமாக மாறியுள்ளது. சமூகச் சிந்தனை உள்ளவர்கள் சேர்ந்து வேலை செய்யாமல் இருப்பதும் ஒரு காரணம்.

பெண்களும் சரி ஆண்களும் சரி தாம் கடினமாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணமே இல்லாது சும்மா இருக்க ஆர் காசு தருவார்கள் என்று எண்ணுவது கூட பல பெண்களை இன்னும் வறுமை நிலைக்குத் தள்ளியிருக்கிறது. நாம் வெளிநாட்டவர்களிடம் கற்றுக்கொண்ட சுறுசுறுப்பும் வீடா முயற்சியும் இருந்திருந்தாலே பலர் வாழ்வு இன்று மேம்பாட்டிருக்கும்.

10 hours ago, suvy said:

மிகவும் கனமான கவிதை, கவனமாக எழுதியிருக்கிறீர்கள் .......பாராட்டுக்கள்........!  👍

நன்றி அண்ணா 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2021 at 06:50, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பெண்களும் சரி ஆண்களும் சரி தாம் கடினமாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணமே இல்லாது சும்மா இருக்க ஆர் காசு தருவார்கள் என்று எண்ணுவது கூட பல பெண்களை இன்னும் வறுமை நிலைக்குத் தள்ளியிருக்கிறது. நாம் வெளிநாட்டவர்களிடம் கற்றுக்கொண்ட சுறுசுறுப்பும் வீடா முயற்சியும் இருந்திருந்தாலே பலர் வாழ்வு இன்று மேம்பாட்டிருக்கும்.

உங்களது கவிதைக்கு நன்றி அக்கா!!, ஆனால் அவர்களை அந்த நிலைக்கு கொண்டு வந்ததில் பணத்தை எதற்கு கொடுக்கிறோம், ஏன் கொடுக்கிறோம் என தெரியாமல் கண் மூடித்தனமாக கொடுத்துவிட்டும், உண்மையான தேவைகளில் முதலிடாமல் பெயர் வரவேண்டும் என்பதற்காக செய்யும் புலம் பெயர்ந்த தமிழர்களும் அடங்குவார்கள் என நினைக்கிறேன்.. 

On 26/10/2021 at 20:22, கிருபன் said:

பெண்களின் வாழ்வை முன்னேற்ற இருக்கும் அமைப்புக்களின் போதாமைகளினால்தான் ஏதிலி வாழ்வு தொடர்கின்றது. அது தொழில், வருமானம் குறைந்த இக்காலத்தில் இன்னும் மோசமாக மாறியுள்ளது. சமூகச் சிந்தனை உள்ளவர்கள் சேர்ந்து வேலை செய்யாமல் இருப்பதும் ஒரு காரணம்.

உண்மைதான்..அமைப்புகள் பல இருந்தாலும் அவை ஒற்றிணைந்து இயங்காததுதான் காரணம் என நான் நினைக்கிறேன்..அதனால்தான் பல அமைப்புகள் இருப்பதை விட ஒன்றிரண்டு அமைப்புகள் இருந்தால் அவை அதிகளவு பயனைத்தரலாம் என நினைப்பதுண்டு. 

அதே போல ஓரளவிற்கு சிறு கைதொழில் செய்பவர்கள் அதிகரித்து இருந்தாலும், சிறு கைத்தொழில் செய்யும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் கூட குறையவில்லை. சில ஆண்கள் அதிகம் கொண்ட துறைகளில் கூட ஈடுபடுகிறார்கள், ஆனால் அதற்கான வரவேற்பு எதிர்பார்த்த அளவில் கிடைப்பதில்லை. மேலும், உள்ளூர் உற்பத்திகளை இவர்கள் மேற்கொண்டாலும் போதிய சந்தைப்படுத்தல் வசதிகள் இல்லாதும் கஷ்டப்படுகிறார்கள்.. இப்படி பல. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.