Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திரா காந்தி அம்மையாருடன் ஒரு நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

16/11/1978 இல் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் ஒரு நேர்காணல். 
தேம்ஸ் டெலிவிஷன்ஸ் ஜொனாதன் டிம்பிள்பி, இந்திய அரசியல் மற்றும் அவர் பிரதமராக இருந்தபோது பத்திரிகைகள் மீதான ஒடுக்குமுறை குறித்து திருமதி காந்தியிடம் சில சங்கடமான கேள்விகளைக் கேட்டார். திருமதி காந்தி எவ்வளவு லாவகமாக அவரின் பேட்டி காண்பவரின் குறுக்கு விசாரணை போன்ற கேள்விகளை கையாள்கிறார் பாருங்கள். 👌

Indira Gandhi Interview | TV Eye | 1978

https://youtu.be/q8aETK5pQR4

இணைப்புக்கு நன்றி சசிவர்ணம்.  இந்திரா காந்தி உலகில் மிக சிறந்த தலைவர்களில் ஒருவர் என்பது நேர்காணலில் தெரிகிறது. எமேர்ஜென்சி காலம் என்பது அவரது அரசியல் வாழ்விலும் அவரது தலைமைத்துவத்திற்கும் ஏற்பட்ட  ஒரு சறுக்கல் என கூறலாம். 

இருப்பினும் அவரது திறமையான தொலை நோக்கு அரசியல் அணுகுமுறை,  தனது தவறுகளில் இருந்து பாடம் கற்று குறுகிய காலத்தில் மீண்டுவர முடிந்தது. 

இந்திராகாந்தி உயிருடன் இருந்திருந்தால், ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தில் பல நல்விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பது எனது எண்ணம். 1983 இனக்கலவரத்தின் பின்னர், “இனப்படுகொலை” என்ற வார்ததையை முதன்  முதலில் பயன்படுத்திய உலக தலைவர் திருமதி இந்திரா காந்தியாவார். இந்திய சுதந்திர தின விழாவுக்கு அன்றைய தமிழர்விடுதலை கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்தை  உத்தியோகபூர்வ விருந்தாளியாக அழைத்ததன் மூலமும்,  அந்த நிகழ்வில் திரு அமிர்தலிங்கத்தை நேரடியாக பலர் முன் வரவேற்று உரையாடியதன் மூலமும்,   தமிழர் பிரச்சனையில் தனக்குள்ள விசேட ஆர்வத்தை வெளிப்படுத்தி மறைமுகமாக ஜே. ஆர். ஜெவர்தனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி ஆகிய இருவரதும் மரணங்கள் ஈழத்தமிழர் வாழ்வியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.  இரண்டு மரணங்களுமே தமிழர் போரட்டத்தை அழிக்க நினைத்த எதிரிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இருவரது மரணத்தையும் தமிழரின் எதிரிகள் மிக சிறப்பாக கையாண்டனர். 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் மோசமான தலைவர் தவறுக்கு முன்னோடி இந்திரா காந்தி என்று அறிகிறேன்.
Tulpen இப்படி சொல்வது 😭

10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இந்தியாவின் மோசமான தலைவர் தவறுக்கு முன்னோடி இந்திரா காந்தி என்று அறிகிறேன்.
Tulpen இப்படி சொல்வது 😭

நீங்கள் கூறுவது அவரது எமேஜன்சி கால ஆட்சியை பற்றியது. அது தொடர்பாக பல விமர்சனங்கள் உள்ளது. அதுவே 1977 ல் அவரது தோல்விக்கும் காரணமாக அமைந்தது. அதை தாண்டி உலகில் மதிப்பு மிக்க சிறந்த தலைவராக அவர் விளங்கினர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.