Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறைந்த மன்னர் அப்துல்லாவைக் கொல்ல விஷ மோதிரம்: சௌதியின் பட்டத்து இளவரசர் மீது குற்றச்சாட்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த மன்னர் அப்துல்லாவைக் கொல்ல விஷ மோதிரம்: சௌதியின் பட்டத்து இளவரசர் மீது குற்றச்சாட்டு!

மறைந்த மன்னர் அப்துல்லாவைக் கொல்ல விஷ மோதிரம்: சௌதியின் பட்டத்து இளவரசர் மீது குற்றச்சாட்டு!

மறைந்த மன்னர் அப்துல்லாவைக் கொல்ல சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் விஷ மோதிரத்தை பயன்படுத்த பரிந்துரைத்தார் என அந்நாட்டின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி சாத் அல் ஜாப்ரி கூறியுள்ளார்.

தற்போது கனடாவில் வசித்து வரும் சாத் அல் ஜாப்ரி, சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த 60 நிமிட நேர்காணலில் இதுகுறித்து பல அதிர்ச்சி தரும் விடயங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

இதன்போது அவர் கூறுகையில், ‘தனது தந்தையை மன்னராக்குவதற்காக அவ்வாறு செய்ய விரும்புவதாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது உறவினரிடம் கூறினார். அடுத்த வாரிசு யார் என்பது தொடர்பாக அப்போது ஆளும் குடும்பத்திற்குள் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஒரு மனநோயாளி, கொலைகாரர், மத்திய கிழக்கின் எல்லையற்ற செல்வங்களைக் கொண்டு, தனது மக்களுக்கும், அமெரிக்காவுக்கும், இந்த ஒட்டுமொத்த பூமிக்கும் அச்சுறுத்தலாக இருப்பவர்.

2014ஆம் ஆண்டு நடந்த சந்திப்பின்போது அப்போது உள்துறை அமைச்சராக இருந்த இளவரசர் முகமது பின் நயேபிடம் மன்னர் அப்துல்லாவைக் கொல்ல ஏற்பாடு செய்ய முடியும் என்று சல்மான் கூறினார்.

அத்துடன், நான் மன்னர் அப்துல்லாவை படுகொலை செய்ய விரும்புகிறேன். எனக்கு ரஷ்யாவிலிருந்து ஒரு விஷ மோதிரம் கிடைத்திருக்கிறது. அவருடன் கைகுலுக்கினால் போதும், அவர் முடிந்து விடுவார்.

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், தற்பெருமை பேசியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் சொன்னார். நாங்கள் அதை கவனமாக எடுத்துக் கொண்டோம்.

இந்த விவகாரம் அரச நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் தீர்க்கப்பட்டது. இந்த சந்திப்பு ரகசியமாக படமாக்கப்பட்டது. அந்தக் காணொளி பதிவின் இரண்டு பிரதிகள் எங்குள்ளது என்பது எனக்கு தெரியும்.

துருக்கியில் சௌதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோகியை சௌதி உளவாளிகள் கொலை செய்த சில நாட்களுக்குப் பிறகு, தன்னைக் கொல்லவும் ஒரு குழுவை அனுப்பியது.

கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள ஒரு விமான நிலையத்தில் ஆறு பேர் கொண்ட குழு தரையிறங்கியது, ஆனால், டிஎன்ஏ பகுப்பாய்வுக்காக சந்தேகத்திற்கிடமான உபகரணங்களை எடுத்துச் சென்றதை சுங்கத் துறையினர் கண்டறிந்ததை அடுத்து அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்’ என கூறினார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள சௌதி அரேபிய அரசாங்கம், ஜாப்ரியை புனை கதைகளைக் கூறும் நம்பகமில்லாத அதிகாரி என கூறியுள்ளது.

இதனிடையே, சிபிஎஸ் நிறுவனத்துக்கு வொஷிங்டனில் உள்ள சௌதி அரேபிய தூதரகம் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் ‘ஆடம்பரமாக வாழ்வதற்காக தாம் செய்த பில்லியன் கணக்கான டொலர்கள் நிதி குற்றங்களில் இருந்து திசை திருப்புவதற்காக புனைக் கதைகளைக் கூறும் வழக்கம் கொண்டவர்’ என்று குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் மன்னர் அப்துல்லா 2015ஆம் ஆண்டு 90 வயதில் இறந்தார், அவருக்குப் பிறகு அவரது சகோதரரும் முகமது பின் சல்மானின் தந்தையுமான சல்மான் மன்னரானார். அவர் முகமது பின் நயேப்பை பட்டத்து இளவரசராக அறிவித்தார்.

2017ஆம் ஆண்டில் நயேஃபுக்கு பதிலாக முகமது பின் சல்மான பட்டத்து இளவரசரானார். நயேஃபின் உட்துறை அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முகமது பின் நயேஃப் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் ஜாப்ரி கனடாவுக்கு தப்பிச் சென்றார்.

https://athavannews.com/2021/1246833

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.