Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர் டக்ளஸ் உரிய தீர்வைப்பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை எமக்கில்லை - வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் டக்ளஸ் உரிய தீர்வைப்பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை எமக்கில்லை - வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம்

(நா.தனுஜா)

காணாமல்போனோரின் குடும்பங்களின் துன்பத்தை நிவர்த்திசெய்தல் மற்றும் அவர்களுக்கான தீர்வை வழங்குதல் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் அறிவுறுத்தியதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ள நிலையில், அவரின் கடந்தகால செயற்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் அவர் தமக்கு உரிய தீர்வைப்பெற்றுக்கொடுப்பார் என்ற நம்பிக்கை தோன்றவில்லை என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி சர்வதேச மனித உரிமைகள் தினமான எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதியன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டத்தை நடாத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல்போனோரின் குடும்பங்களின் துன்பத்தை நிவர்த்திசெய்தல் மற்றும் அவர்களுக்கான தீர்வை வழங்குதல் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் அறிவுறுத்தியதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருப்பதாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து, தீர்வை வழங்குவதற்கான பொறுப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஒப்படைக்கப்படுவது குறித்து வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,

தற்போது மாத்திரமன்றி, எமது நாட்டில் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் இடம்பெற்ற காலத்திலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஓர் அதிகார மட்டத்தில் இருந்திருக்கின்றார்.

அவர் தமிழீழ விடுதலைப்புலிகளை எதிரிகளாகப் பாரத்திருந்தாலும், தமிழர்களை எதிரிகளாக நினைத்திருக்கத்தேவையில்லை. எனவே அவர் நினைத்திருந்தால் இறுதிக்கட்டப்போரின்போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களையும் சரணடைந்தவர்களையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

அதுமாத்திரமன்றி காணாமல்போனவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து வெளியிட்டபோதும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவருடன்தான் இருக்கின்றார். ஆனால் இறுதிக்கட்டப்போரின்போதும் போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னரும் பெருமளவானோர் படையினரிடம் கையளிக்கப்பட்டமை தொடர்பில் அவர் ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கவில்லை.

வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக நீண்டகாலமாக நாங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்ற போதிலும், எமக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான எந்தவொரு நடவடிக்கைகளும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை. 

அதுமாத்திரமன்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கடந்தகால செயற்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், அவர் எமக்கான தீர்வைப்பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை தோன்றவில்லை. மாறாக பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தை வழங்கியோ அல்லது வேறு ஏதேனும் வழிகளிலோ இவ்விவகாரத்தை முழுமையாக மூடிமறைப்பதற்கு முயற்சிப்பார் என்றே நாங்கள் கருதுகின்றோம்.

ஆகவேதான் எமது பிரச்சினைக்கான தீர்வை இலங்கைக்குள் ஒருபோதும் பெறமுடியாது என்று தொடர்ச்சியாகக் கூறிவருகின்றோம். அதனை வெளிக்காட்டும் வகையில் எமது போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம். 

ஆனால் எமது ஜனநாயக ரீதியிலான போராட்டங்களைத் தடுப்பதற்கு வேறு வழிகளின்றி, கொவிட் - 19 வைரஸ் பரவல் நெருக்கடியைக் காரணமாகக்கூறி உண்மையைக் கண்டறிவதற்கான எமது போராட்டங்களை முடக்குகின்றார்கள்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், சர்வதேச மனித உரிமைகள் தினமான எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதியன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டத்தை நடாத்துவதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம். 

கொவிட் - 19 வைரஸ் பரவல் நெருக்கடியையும் மிகையான செலவுகளையும் கருத்திற்கொண்டு வடக்கின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வடக்கிலும், கிழக்கின் 3 மாவட்டங்களிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிழக்கிலும் கவனயீர்ப்புப்போராட்டங்களை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டங்கள் நடாத்தப்படும் இடம், நேரம் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

 

 

https://www.virakesari.lk/article/116712

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.