Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சித்திரவதைகளில் ஈடுபடும் இலங்கை பொலிஸாருக்கு ஸ்கொட்லாந்து பயிற்சி வழங்குவதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் – மனித உரிமை ஆர்வலர்கள் போர்க்கொடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரவதைகளில் ஈடுபடும் இலங்கை பொலிஸாருக்கு ஸ்கொட்லாந்து பயிற்சி வழங்குவதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் – மனித உரிமை ஆர்வலர்கள் போர்க்கொடி

ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் விசாரணையை முன்னெடுக்கவேண்டும் என ஐநாவின் முன்னாள் அதிகாரி வேண்டுகோள்
torture.jpg
இலங்கையில் அரசாங்கத்தின் ஆதரவுடன் சித்திரவதைகள் இடம்பெறுவது உறுதிப்படுத்தப்பட்டால் இலங்கை அதிகாரிகளிற்கு பயிற்சி வழங்குவதை ஸ்கொட்லாந்து நிறுத்தவேண்டும் என ஐக்கியநாடுகளின் முன்னாள் விசேட அறிக்கையாளர் பேராசிரியர் மன்பிரெட் நொவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையிலிருந்து ஸ்கொட்லாந்திற்கு தப்பிவந்த அகதிகள் இலங்கை பொலிஸாரின் ஈவிரக்கமற்ற தன்மை குறித்து தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அகதிகள் தெரிவித்தது உண்மை என்பது உறுதியானால் இலங்கை பொலிஸாரிற்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் வழங்கும் பயிற்சியை ஸ்கொட்லாந்து நிறுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்கொட்லாந்து பொலிஸார் தங்களது பயிற்சிகள் சர்வதேச மனித உரிமை தராதரத்தில் முன்னேற்றத்தினை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ளனர் எனினும் ஸ்கொட்லாந்து பொலிஸார் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதில் விவேகத்துடன் செயற்படவில்லை என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
manfred-nowack.jpg
 
ஸ்கொட்லாந்தின் மௌனம் இலங்கையின் சிறுபான்மை தமிழர்கள் சித்திரவதைகளிற்கும் கடத்தலிற்கும் படுகொலைகளைகளிற்கும் உள்ளாவதை மூடிமறைப்பதற்கு உதவுகின்றன என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இலங்கை பொலிஸார் படைப்பிரிவினரிற்கான நீண்ட கால பயிற்சி திட்டம் தற்போது முட்டுக்கட்டை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சு ஆராய்ந்துவருகின்றது.

இந்த திட்டத்தின் கீழ் திட்டமிட்டு சித்திரவதைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் உட்பட பலர் ஸ்கொட்லாந்தின் டுலியாலன் தலைமையகத்தில் பயிற்சி பெற்றுள்ளனர்.
ஸ்கொட்லாந்தின் தொழில் கட்சி அரசியல்வாதி மேர்செடெஸ் விலால்பா இது குறித்து கரிசனை வெளியிடும் கடிதமொன்றை இலங்கைக்கான பிரிட்டிஸ் தூதரகத்திற்கு எழுதியுள்ளார்.
இலங்கை பொலிஸாரிற்கான ஸ்கொட்லாந்து பொலிஸாரின் பயிற்சி தேவையற்ற பாரம்பரியம் ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதுஅது மனித உரிமை மீறல்களை மறைக்க உதவுகின்றது என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

2007 இல் தான் ஐநாவிற்கு அம்பலப்படுத்திய சித்திரவதை முறைகள் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது அச்சத்தை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ள மனித உரிமை சட்டத்தரணியும் மனித உரிமைகளிற்கான சர்வதேச கம்பஸ் அமைப்பின் செயலாளர் நாயகமுமான நொவாக் இலங்கை அகதிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை ஸ்கொட்லாந்து பொலிஸார் ஆரம்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்,ஸ்கொட்லாந்து பொலிஸாரும் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை தண்டிப்பதில் இலங்கை பொலிஸாருடன் இணைந்து செயற்படவேண்டும் என அவர் சண்டே போஸ்டிற்கு தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்காவிட்டால் அல்லது விசாரணைகளை முன்னெடுக்காவிட்டால் கடந்த காலங்களை போல இதனையும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தங்களின் உயிருக்கு பயந்து ஸ்கொட்லாந்திற்கு தப்பிவந்துள்ள அகதிகளின் வாக்குமூலங்கள் 14 வருடங்களிற்கு முன்னர் இலங்கையில் தான் கண்டுபிடித்த விடயங்களை போல உள்ளன என நொவாக் தெரிவித்துள்ளார்.

நபர்களை தலைகீழாக கட்டிதொங்கவிடுவது போன்றவை 14 வருடங்களிற்கு முன்னர் நான் எதிர்கொண்ட விடயங்கள் என குறிப்பிட்டுள்ள அவர் பெட்ரோல் நிரம்பிய பிளாஸ்டிக் பைகள் குறித்தும் நான் கேள்விப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொலிஸார் இவ்வாறான சித்திரவதைகளை பயன்படுத்துகின்றார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது என்றால் ஸ்கொட்லாந்து பொலிஸார் இலங்கை பொலிஸாருக்கு பயிற்சிகளை வழங்குவதை கைவிடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
mercedes-villaba.jpg
ஸ்கொட்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என நொவாக் விடுத்துள்ள வேண்டுகோள்களிற்கு ஆதரவு வெளியிட்டுள்ளனர்.

ஸ்கொட்லாந்து பொலிஸாருக்கும் இலங்கை பொலிஸாருக்கும் இடையிலான பயிற்சி ஏற்பாடுகள் தொடர்வது, பாரிய அளவில் பாலியல் வன்முறை சித்திரவதைகளில் ஈடுபடுகின்றனர் என நாங்கள் அறிந்துகொள்பவர்களிற்கும் ஸ்கொட்லாந்து பொலிஸாருக்கும் இடையிலான குழப்பமான கவலைதரும் உறவுகளை வெளிப்படுத்துகின்றன என ஸ்கொட்லாந்தின் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர் அலெக்ஸ் கோல் ஹமில்டன் தெரிவித்துள்ளார்.

சித்திரவதைக்கு உள்ளானவர்களிடமிருந்து மேலும் தகவல்களை பெற விரும்புகின்றேன் விசாரணைகள் இடம்பெறவேண்டும் என விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்களை ஆதரிக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சித்திரவதைகள் மனித உரிமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் அவதானித்துக்கொண்டிருக்கின்றோம் செவிமடுக்கின்றோம் என்பதை அறிவது முக்கியமானது என தெரிவித்துள்ள தொழில்கட்சியின் போலின் மக்நெய்ல் ஸ்கொட்லாந்துமனித உரிமைகள் தொடர்பில் நிலைப்பாட்டை எடுப்பதற்கு உறுதியான ஆதரவு அனைத்து கட்சிகள் மத்தியிலும் காணப்படும் என கருதுகின்றேன என தெரிவித்துள்ளார்.

நொவாக்கின் கருத்தினை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வரவேற்றுள்ளனர்.
பக்ஸ் கிறிஸ்டி ஸ்கொட்லாந்து என்ற சமாதான அமைப்பின் தலைவர் மரியன் பலிஸ்டெர் இலங்கையில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுத்தருவதை நோக்கிய முதல் நடவடிக்கையாக இது காணப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
alex-cole-hamilton.jpg
சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் பிரான்சிஸ் ஹரிசன் ஸ்கொட்லாந்து முன்னொருபோதும் எடுக்கப்படாத இந்த நடவடிக்கையை ஸ்கொட்லாந்து முன்னெடுத்தால் அது சித்திரவதையில் ஈடுபட்டவர்கள் தப்பமுடியாது என்ற செய்தியை உலகிற்கு தெரிவிப்பதாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற விசாரணை என்பது உலகின் பல பகுதிகளி;ல் மௌனமாகவும் அச்சத்துடனும் வாழும் சித்திரவதையால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களிற்கு கலங்கரை விளக்காக அமையும்- இலங்கை அவர்களின் நடவடிக்கைகளை இனிமேலும் சகித்துக்கொள்ளப்போவதில்லை என்ற செய்தியை தெரிவிப்பதாக அமையும் என தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிற்கு பயிற்சி வழங்குவதற்கு முன்னர் மனித உரிமைகளை ஸ்கொட்லாந்து பொலிஸார் கருத்தில் எடுத்தனர் என்பதற்கான ஆதாரங்களை நாங்கள் கோரியுள்ளோம் ஆனால் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என சர்வதேச மன்னிப்புச்சபையின் யுகே ஸ்கொட்லாந்திற்கான இயக்குநர் நயோமி மக்காலிவ் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பொலிஸார் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்களா என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்,அதேவேளை ஸ்கொட்லாந்து பொலிஸாரின் பங்களிப்பு ஏனைய தரப்பினர் தங்கள மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கு உதவலாம் என்பதையும் கருத்தில்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/148033

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.