Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள வீரன் புஷ்பகுமாரவும் 2009 ஆம் ஆண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

FB_IMG_1583150174313.jpg?resize=695%2C525&ssl=1

'தமிழீழ தாதியர் & சிங்கள வீரன் புஷ்பகுமார'

 

 

ஈழம் என்றதும் புலிகளைக் காட்டி பெருமிதப்படுத்துவோரை விட அச்சம் காட்டி கவலைப்படுத்துவோரே நான் சந்தித்த வேற்றின மக்களில் பெரியளவினர்.

ஆம்.. காட்டு மிராண்டிகள், கொடூரர்கள், போர்ப்பிரியர்கள், உயிர்கொல்லிகள் என எம்மைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயம் எம்மை நாமே அளவிட வேண்டிய கட்டாயத்துக்கு எம்மை தள்ளும்.

எம் வேட்கையை எம்மவரிடம் தக்க  வேண்டியது எந்தளவு அவசியமோ அதே அளவு அவசியமானது எம்மீதான வேற்றின மக்களின் பார்வையை மாற்றுவதும்.

 மாந்த நேசமும், சகோதரப்பண்பும் மிகுந்தவர்கள் தமிழர்கள்; இவைக்கு இன்னல் நேர்கையில்தான் இவர்கள் வேட்டைக்குக் கிளம்பினர் என்பதை  எல்லாச் சமூகத்தினருக்கும் எடுத்தியம்ப வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

அதைச் செய்ய வேண்டியதுதான் எமது வேலையுமாகும். அந்த வகையில்  மாந்த நேசத்தை வெளிப்படுத்திய எண்ணிலடங்கா நிகழ்வுகளில்  ஒன்றை உங்களுடன் பகிர்கின்றோம்.

இதனை வெறுமனே வாசித்து விட்டகலாது, வேற்று மொழிகளில் பெயர்த்து பலருடன் பகிர்வதும், இது போன்ற வெளிப்படுத்தப்பட வேண்டிய அம்சங்களை வெளிப்படுத்துவதும் நாம் ஆற்ற வேண்டிய கடமையாகும்.

“வடபோர்முனை” என அழைக்கப்பட்ட
களமுனையில் ஶ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த இவர் படுகாயடைந்தார்.

இவரின் பெயர் புஷ்பகுமார ஆகும். பதவி நிலையும் படைப்பிரிவும் நினைவில் இல்லை.

2009ஆம் ஆண்டு தைத் திங்கள் நடைபெற்ற மிக உக்கிரமான சமரில்
தமிழர்சேனையால் செங்களத்திடை மீட்கப்பட்டார்.

களமுனையில் கடமையில் இருந்த தமிழர் சேனையின் இராணுவ வைத்தியர்களால் துரித சிகிச்சை வழங்கப்பட்டு கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இடம்பெயர்ந்து தருமபுரத்தில் இயங்கிய கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையிலும் அன்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தமிழர் மனங்களில் நிரந்தர இடம்பிடித்து நிற்கும் Dr.த.சத்தியமூர்த்தி அவர்களின் மானுடநேயமும் இவரின் விடுதலைக்கு காத்திரமான பங்காய் அமைந்தது.

மிக நல்ல முறையில் பராமரிப்பும் வழங்கப்பட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக மேலதிக சிகிச்சைக்காக
பத்திரமாக அனுப்பட்டார்.

யுத்தக் கைதிகளை எவ்வாறு
பராமரிக்கப்பட வேண்டுமென அண்டைய இரு நாடுகள் விவாதம் செய்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் என் நினைவில் மலர்ந்தவை.

“எத்தனை பெரிய மனம் உனக்கு
தமிழா!

எத்தனை பெரிய மனம் உனக்கு
எல்லோரும் மனிதரே
என்பது உன் கணக்கு” ….

என கவிஞர் காசியானந்தன் எழுதி எம்மரும் பாடகர் மானமிகு தேனிசை செல்லப்பா பாடிய பாடல் வரிகளும் என் காதுகளில் ரீங்காரம் செய்கிறது.

 

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to சிங்கள வீரன் புஷ்பகுமாரவும் 2009 ஆம் ஆண்டும்
  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

எங்கள் கிளிநொச்சி மாநகரைக் கைப்பற்றிய ஶ்ரீ லங்கா இராணுவம் பரந்தனில் இருந்து முரசுமோட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

முரசுமோட்டைப் பகுதி களமுனையில் ஶ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த இவர் தலையில் படுகாயம் அடைந்தார்.

இவரின் பெயர் H.M சமன்_புஷ்பகுமார ஆகும். இராணுவத்தில் சமன் புஷ்பகுமாரவின் பதவிநிலை லான்ஷ் கோப்ரல் என்பதும் எந்தன் நினைவுப் பெட்டகத்தில் உண்டு.

சிங்கப் படையணி, கஜபாகு படையணி, கெமுனு காவற்படை என பல சண்டை உருவாக்கங்களைக் கொண்ட ஶ்ரீலங்கா இராணுவத்தில் லான்ஷ் கோப்ரல் H.M சமன் குமார எந்தச் சண்டை உருவாக்கங்கத்தைச் சேர்ந்தவர் என்பது எந்தன் நினைவில் இல்லை.

2009 ஆம் ஆண்டு தைத் திங்கள் நடைபெற்ற மிக உக்கிரமான தொடர் சமரில் தமிழர் சேனையால் செங்களத்திடை மீட்கப்பட்டார்.

களமுனையில் கடமையில் இருந்த தமிழர் சேனையின் இராணுவ வைத்தியர்களால் துரித சிகிச்சை வழங்கப்பட்டு கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் (DGH Kilinochchi) அனுமதிக்கப்பட்டார்.

இடம்பெயர்ந்து தருமபுரத்தில் இயங்கிய கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையிலும் அன்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தமிழர் மனங்களில் நிரந்தர இடம்பிடித்து நிற்கும் Dr.த.சத்தியமூர்த்தி அவர்களின் மானுடநேயமும் இவரின் விடுதலைக்கு காத்திரமான பங்காய் அமைந்தது.

சமன் புஷ்பகுமாரவுக்கு தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாய் "காலைக்கடன்" உட்பட தனது அன்றாட கடமைகளைக் கூட செய்ய முடியவில்லை. குறிப்பாகச் சொன்னால் ஒரு கையை முழுமையாகவே அசைக்க முடியாதிருந்தார்.(Mobility level 1 ) அந்த நேரம் ஒரு குழந்தையைப் போலவே இவர் அன்போடும் கருணையோடும் பராமரிக்கப்பட்டார். புஷ்பகுமாரவுக்கு பல்துலக்கி, உடலெல்லாம் இளஞ்சூட்டு நீரினால் துடைத்துப் பாராமரித்த எமது வைத்தியப் பணியாளர்களை யான் நினைந்து அதிகம் அதிகம் பெருமைப்படுகின்றேன்.

மிக நல்ல முறையில் பராமரிப்பும் வழங்கப்பட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) ஊடாக மேலதிக சிகிச்சைக்காக பத்திரமாக அனுப்பட்டார்.

தரணி எங்கும் மானுடநேயம் தள்ளாடிக் கொண்டிருக்க தமிழர்தம் செயலிலும் சொல்லிலும் அந்த மானுடநேயம் தனித்துவமாய் நடைபயின்றது.

யுத்தக் கைதிகளை எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டுமென அண்டைய இரு நாடுகள் விவாதம் செய்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் என் நினைவில் மலர்ந்தவை.

"எத்தனை பெரிய மனம் உனக்கு தமிழா!
எத்தனை பெரிய மனம் உனக்கு
எல்லோரும் மனிதரே
என்பது உன் கணக்கு" ....

என உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் எழுதி எம்மரும் பாடகர் தேனிசை செல்லப்பா அவர்கள் பாடிய இந்தப் பாடல் வரிகளும் என் காதுகளில் ரீங்காரம் செய்கின்றது. 

இதே போன்று புதுக்குடியிருப்பில் உள்ள விடுதலைப் புலிகளின் முல்லை படைய மருத்துவமனையிலும் 6 காயமடைந்த சிங்களத்து சிப்பாய்கள் மிக நேர்த்தியாக சிகிச்சை அளிக்கப்பட்டு (இதில் இருவர் மேஜர் தர அதிகார நிலையை உடையவர்களாவர்) தலைவர் அவர்களால் தை 2009 ல் விடுவிக்கப்பட்டனர் என்பனை இங்கு நினைவுபடுத்திக் கொள்கிறேன்.  இதே போல் கல்மடுவிலும் ஒருவரை வைத்திருந்தோம். மேலும் கல்லாறு பகுதியில் நாங்கள் 3 படையினர் - ஒருவர் தலைக்காயம், இன்னும் ஒருவர் கால் முறிவு , இன்னும் ஒருவர் சிறு சிறு காயங்களுடன் - கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு வைத்து பராமரிக்கப்பட்டு செஞ்சிலுவை சங்கம் ஊடாக அனுப்பி வைத்திருக்கின்றோம். 

 

தமிழீழ மருத்துவர் தணிகை

https://www.facebook.com/photo.php?fbid=1209614659205880&set=pb.100004720719988.-2207520000.&type=3

 

Edited by நன்னிச் சோழன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.