Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கின் உதயத்தோடு அமைதித் தீர்வு அஸ்தமனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-07-19

கிழக்கின் உதயத்தோடு அமைதித் தீர்வு அஸ்தமனம்

""தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பிரதேசங்களில் இருந்தும் அவர்கள் விரட்டப்படுவார்கள். அந்தப் பிரதேசங்கள் அவர்களிட மிருந்து பிடுங்கி எடுக்கப்பட்டு மீட்கப்படும்.'' இப்படி சூளுரைத்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

கிழக்கு மாகாணத்தைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவித்து விட்டோம் எனப் பெருமிதம் கொள்ளும் ஜனாதி பதி மஹிந்தர், அதேபோல வடக்கும் மீட்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.

கிழக்கு முற்றாக மீட்கப்பட்டமையைப் பெரு விழா வாக அவரது அரசு கொண்டாடுகிறது. "கிழக்கு உதயம்' என்ற பெயரில் அந்த அரசு இன்று நடத்தும் வெற்றித் திரு விழாவில் வைத்து, வடக்கை மீட்பது பற்றிய சூளுரையை பிரதிக்ஞையை சபதத்தை மீண்டும் ஒரு தடவை ஜனா திபதி மஹிந்தர் பிரகடனம் செய்யக்கூடும்.

மஹிந்த அரசின் யுத்தத் தீவிரப் போக்கும், யுத்த வெற் றிகள் பற்றிய பீற்றல் பிரசாரங்களும் ஒரு புறம் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல "நைஸாக' அரசுக்கான அர சியல் பிரசாரமாக முன்னெடுக்கப்படுகின்றது. மறு புறத் தில், தெற்கில் மிக ஆபத்தான கருத்தியல் நிலைப்பாட்டை அது ஊன்றி விதைப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

""இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை ஒட்டி வெடித்துள்ள இந்த சிவில் யுத்தம் எத்தரப்பினாலும் வெல் லப்பட முடியாதது. இந்தப் பிணக்குக்கு இராணுவ வழியில் தீர்வு காண்பது சாத்திய மேயற்றது.'' இப்படித்தான் சர்வதேச உலகம் மீண்டும் மீண்டும் அடித்துக்கூறிச் சுட்டிக்காட்டி வருகின்றது. இப்பிரச்சினையை நீண்ட காலமாக அவ தானித்துவரும் நோக்கர்களும், பக்கச்சார்பற்ற ஆய்வாளர் களும், இலங்கையில் செயற்படும் பல பிரதான கட்சிகளின் தலைவர்களும் கூட இதனையே கூறிவருகின்றார்கள்.

ஆனால் இதற்கு மாறாக, விடுதலைப் புலிகளுக்கு எதி ரான யுத்தம் மூலம் அதாவது , இராணுவ நடவடிக்கை வாயிலாக தமிழரின் தேசிய எழுச்சியை அடக்கி, இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என்ற மமதை எண் ணத்தை தென்னிலங்கை மக்கள் மனதில் ஆழமாக விதைக் கின்றன அரசின் போர்த் தீவிரப் போக்கும் அதையொட்டிய வெற்றித் திருவிழாக் கொண்டாட்டங்களும், அரசியல் பிரசாரங்களும்.

கிழக்கு மீட்பை "கிழக்கு உதயம்' என்ற பெயரில் அரசு கொண்டாடுகிறது. ஆனால் அது, அமைதி வழித் தீர்வுக்கு நிரந்தர அஸ்தமனமாக அமைவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாக இருக்கின்றது.

""கிழக்கு மாகாணத்தை முற்றாகப் புலிகளின் கைகளில் இருந்து தமது வீரம் மிக்க துணிச்சலான நடவடிக்கை களின் மூலம் மீட்டதன் வாயிலாக அரச படைகள் ஆழ மான செய்தி ஒன்றை எடுத்துரைத்திருக்கின்றன. இந்த யுத்தம் வெல்லப்படமுடியாத ஒன்று என்ற வீணர்களின் பிரசாரத்தை நமது படையினர் பொய்யாக்கிக் காட்டியிருக் கின்றனர்.

""கிழக்கை மீட்டுள்ள அரசு, இனிப் புலிகளை அமை திப் பேச்சுக்காக ஜெனிவாவுக்குக் கூட்டிச் செல்லும் செயற்பாட்டில் இறங்கக்கூடாது. கிழக்கை மீட்டமை போன்று வடக்கையும் முற்றாக மீட்டு, புலிகளை விரட்டியடித்து, பிரச்சினையைத் தீர்க்கவேண்டும்.'' என்று நாடாளுமன் றத்தில் வீராவேசமாக முழங்கி இருக்கின்றார் ஜே. வி. பியின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ஸ.

கிழக்கு வெற்றியைத் தனது அரசியல் இலாபத்துக்காக முறையற்ற விதத்தில் பிரசாரப்படுத்தும் மஹிந்த அரசு அதன்மூலம் அமைதிவழித் தீர்வுக்கு நிரந்தரமாக சாவுமணி அடித்து, யுத்தத்தையே இறுதிப் பாதையாகத் தான் தேர்ந் தெடுத்து நிற்கின்றது என்பதைத் தெளிவுபடுத்தியிருக் கின்றது.

இது ஒரு மிக மிக ஆபத்தான போக்காகும். மஹிந்த அர சின் இந்த யுத்த வெறித் தீவிரத்தை சரியாக அடையாளம் கண்டு, தன்னை அதற்கேற்ப நெறிப்படுத்தத் தமிழினம் தயாராக வேண்டும். தவறுமானால் வெள்ளம் தலைக்கு மேல் போய் எதுவுமே மிஞ்சாது என்ற அனர்த்தத்தில் ஈழத் தமிழினம் அள்ளுண்டு செல்ல நேரும்.

விடுதலைப் புலிகளைக் கூண்டோடு சமாதி கட்டுவதன் மூலம் தமிழரின் தேசிய எழுச்சியையும், இனப்பிரச்சினை யையும் ஆழக் குழிதோண்டிப் புதைத்துவிடலாம் எனத் தென்னிலங்கை கருதும் இச்சமயத்தில் புலிகளின் சிந் தனைப் போக்கு எப்படியிருக்கின்றது என்பதை நோக்கு வது பொருத்தமானது.

இன்றைய நிலைமை இப்படித்தான் அமையும் என் பதை தமது கடந்த மாவீரர் தின உரையிலேயே கோடி காட்டி விட்டார் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன்.

""சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச் சினைக்குச் சமாதான வழியில் ஒரு நியாயமான தீர்வை ஒருபோதும் முன்வைக்கப்போவதில்லை என்பது இன்று வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. எத்தனை ஆண்டுகள் கடந்து சென்றாலும், எத்தனை யுகங்கள் ஓடி மறைந்தாலும், சிங்கள தேசத்தில் மனமாற்றம் நிகழப்போவதில்லை என் பதும், தமிழருக்கு நீதி கிடைக்கப் போவதில்லை என்பதும் இன்று தெட்டத் தெளிவாகியிருக்கின்றது. எனவே, நடக்க முடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, தொடர்ந்தும் அதே பழைய பாதையில் நடைபோட இனியும் நாம் தயா ரில்லை. எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளவும் நாம் விரும்பவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழ் மக்களுக்குத் திறந்து வைத்திருக்கின்றது. .........''

இப்படிப் புலிகளின் தலைவர் கூறியவற்றை ஆழ மாகச் சிந்திக்க வேண்டிய நிலையில் இன்று தமிழினம் இருக்கின்றது.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.