Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா நீ ? இந்த மனிதருள் மாணிக்கத்தை பார்த்தே ஆகணும்..

yaaruppa.jpg

  • Replies 4.9k
  • Views 454.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாரப்பா நீ ? இந்த மனிதருள் மாணிக்கத்தை பார்த்தே ஆகணும்..

yaaruppa.jpg

பின்பக்கம் பார்த்தால் யாரும் ஏறமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

mathiri-kumari.jpg

  • கருத்துக்கள உறவுகள்

K. V. Balan ·

Suivre

pdStoosenr7787tui0 àitH112hhrgg211i ggf55f0e2:h9,1fh725787mm ·

மருத்துவமனையில் இறுதி மூச்சி வாங்கும் அப்பா கேட்கிறார் மகனிடம்: "என்னால் மறக்க முடியாத ஒன்று.. நீ ஒன்பதாவது படிக்கும்போது கணக்கு பரீட்சை மார்க்ன்னு 90 காண்பிச்சே.. எனக்கு நம்பிக்கையே இல்ல.. ஒன்பதுடன் நீ பூஜ்யத்தை சேர்த்து விட்டதாக குற்றம் சாற்றினேன்.. நீ உறுதியாக மறுத்தாய் ..."

"அப்பா என்ன இதெல்லாம்? முப்பது வருஷ கதையை சொல்லிண்டு?"

"இல்ல ரொம்ப நாளா என்னை உறுத்தற விஷயம் இது... நான் உன்னை அடிச்சு கேட்டும் நீ பூஜ்ஜியத்தை சேர்க்கலை என்ற சொல்லிண்டிருந்தே.. என்னால் அதை நம்பவும் முடியல.. இப்ப கேக்கறேன் உண்மையை சொல்லு? பூஜ்யத்தை சேர்த்தது நீ தானே?"

"நீங்க எப்ப கேட்டாலும் என் பதில் ஒண்ணுதான்பா.. நான் பூஜ்யத்தை சேர்க்கவேயில்லை.."

" ஆனா நீ 90 மார்க் வாங்கற மாணவன் இல்லையே?'"

"சரிப்பா.. நீங்க நினைத்ததும் சரி.. நான் சொன்னதும் சரி"

"அது எப்படி?'

"நான் சேர்த்தது 9ஐ......."

😳"

623876560_3250265005152741_3107516678641

(இது யாருக்காவது "என்னைப்போல" கடந்த காலத்தை நினைவூட்டினால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல).......! 😃

  • கருத்துக்கள உறவுகள்

621215252_4206062992945192_2360419937958

பார்க்க பையன் ஏதோ பாடசாலை record note எழுதுற மாதிரி தானே தெரியுது..

ஆனா அதான் இல்லை.

பதிவு திருமணத்துக்கு, கையெழுத்து போடுறார்... மாப்பிள்ளை. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

nilamathi-sirrika-sinthikka.jpg

  • கருத்துக்கள உறவுகள்

626450559_26300833356187631_441878415068

  • கருத்துக்கள உறவுகள்


oSeordtsnp1fl0m45rt é,f86reg55:hg0ct7a10v1i065ffmcu753657 0f
 ·

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களிடம் அந்த ஊரை சேர்ந்த நபர்கள் கூறியிருக்கிறார்கள் அதாவது நீங்கள் கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வந்துவிட்ட பிறகு உங்களால் இந்த ஊரில் வாழ முடியாது

இந்த ராஞ்சி சிறிய நகரம் உங்களுக்கு இந்த ஊர் பிடிக்காமல் போய்விடும் நீங்கள் வேணும்னா பாருங்கள் நீங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவுடன் வேறு நாட்டிற்கு அல்லது வேறு ஊருக்கு நீங்கள் செல்ல நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறியுள்ளார்கள்

அதனை அப்போது தோணி இல்லை நான் எவ்வளவு பெரிய ஆளாகினாலும் நான் இங்கே தான் இருப்பேன் என்று சொல்லி மறுத்து இருக்கிறார்

அவர்களும் அப்போது அதனை ஏற்க மறுத்து விட்டனர் இப்போது தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் இதே ராஞ்சி நகரில் தான் இருக்கிறேன் என்னிடம் அப்போது கூறியவர்கள் இங்கே இருக்க மாட்டேன் என்று என்னை பார்த்து சொன்னார்கள் ஆனால் எனக்கு இந்த ராஞ்சி மிகவும் பிடிக்கும்

இந்த ராஞ்சியில் தான் நான் பிறந்தேன் இந்த ராஞ்சி மண் என்னுடைய சொந்த ஊர் இது எனக்கு சொர்க்கம் தான் என்று நான் இங்கு விட்டு எங்கும் குடியேற மாட்டேன்

மேலும் இங்கே சும்மா இல்லாமல் எனக்கு பிடித்தமான விவசாயம் செய்வதை மிகுந்த சந்தோஷமாக உணர்த்துகிறேன் மேலும் என்னுடைய உடல் நலத்திற்கு இது மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கிறது என்றும் தோனி மனம் திறந்து கூறியிருக்கிறார்

கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் சொந்த ஊரில் வாழ்வது அவமானம் என்று நகரத்தை நோக்கி செல்பவர்கள் ஏராளம்..ஆனால் இங்கே தோனியின் இந்த செயல் அவரின் வாழ்வியல் பாராட்டுதலுக்குரியது

தோனியின் ரசிகன் என்பதில் பெருமிதம் 😍"

629226289_2259251967918396_6201807287684

  • கருத்துக்கள உறவுகள்


oeoptrnSds2tigie0fll2ih74é77656ft02,9a11rr9hav1f5 l6l:hm8g h
 ·

சென்னையில் 1960 ல் நடந்த ஒரு திருமணத்தின் போதுதான் , இந்த காட்சியைக் கிளிக் செய்திருக்கிறார்கள்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் அந்த நேரத்தில் நடிகர் திலகம் கணேசனும் சரி , ஜெமினியும் சரி எந்தப் படத்திலும் நாதஸ்வரக்கலைஞராக நடித்ததில்லை.

இரண்டு பேரும் அந்தக் கல்யாணத்துக்கு வந்தபோது , அங்கே காருக்குருச்சி அருணாசலம் அவர்களின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது...

இரண்டு கணேசன்களுக்கும் காருக்குரிச்சியின் நாதஸ்வரம் என்றால் உயிர் .

இருவரும் அமர்ந்து ஆனந்தமாய்க் கச்சேரியை ரசித்தார்கள்.

கச்சேரி முடிந்தவுடன் " அண்ணே அண்ணே நாதஸ்வரத்தக் குடுங்ஙண்ணே " என்று கணேசனும் ஜெமினியும் வாங்கிக் கொள்ள..இருவரும் கச்சேரி வித்வான்கள் போல் போஸ்பண்ண அங்கு வந்திருந்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் தவில்காரரிடமிருந்து தவிலைக் கைப்பற்றி பந்தாவாக அமர ஒரே அமர்க்களம்தான்...

சிவாஜி கணேசன் அருகே அமர்ந்து இருப்பவர் காருக்குரிச்சி அவர்கள்

இதற்குப் பிறகு பல வருடங்கள் கழித்துத்தான்

கொஞ்சும் சலங்கையும் தில்லானா மோகனாம்பாளும் வந்தன.

கொஞ்சும் சலங்கையில் ஜெமினி நாதஸ்வரத்தைப் பிடிக்க....அவருக்கு காருக் குறிச்சி நாதஸ்வரம் வாசித்தார்......!

627389762_3660626247413785_2103380660471

  • கருத்துக்கள உறவுகள்


RS Vijayakumar
 ·edrospntSorm91i9719 8370i5,0me8ulm4lr6cf11f003:h14m780v é536 ·

இணையத்தில் பார்த்த புகைப்படம்...

இந்தப் புகைப்படத்தில் இருக்கும் குழந்தைக்கு மிகவும் உடல்நலக்குறைவாக இருந்ததால் CT ஸ்கேன் அவசியமாக இருந்தது.

ஆனால் அந்தப் பெரிய இயந்திரம் இருக்கும் அறைக்குள் தனியாகச் செல்ல அவன் தயங்கியிருக்கிறான்.

2–3 மணி நேரமாக பெற்றோர், மருத்துவர்கள்—எல்லோரும் முயன்றும் அவனை சமாதானப்படுத்த முடியவில்லை.

அப்போது அவனுக்கு மிகவும் நெருக்கமான நண்பன் அழைக்கப்பட்டான்.

நண்பன் வந்தவுடனே மாயம் செய்தது போல அவனின் பயம் பாதியாக குறைந்தது.

இருவரும் சேர்ந்து CT ஸ்கேன் போக வேண்டும் என்று முடிவு செய்து இருவரும் கண்களை மூடி படுத்துக்கொண்ட புகைப்படம் தான் நாம் பார்ப்பது.

இருவருமே சிறுவர்கள் தான்.. இருவருக்குமே பயம் தான் ஆனாலும் அசாத்தியம் சாத்தியமானது...

இயந்திரப் பயத்தை எதிர்கொள்ள ஒருவருக்கொருவர் தைரியமாக மாறியவர்கள் தான் இந்த நண்பர்கள்..

இந்தக் காட்சி நமக்கு ஒன்றை மட்டும் நினைவூட்டுகிறது — வெளிச்சத்தில் சேர்ந்து ஓடுவதற்கு மட்டுமல்ல இருளான நேரங்களில் ஒருவருக்கொருவர் விளக்காக இருப்பதே உண்மையான நட்பு.

உலகில் உள்ள அனைத்து நட்புகளும் இவ்வளவு தூய்மையானதும் உடைக்க முடியாததுமானவையாக இருக்கட்டும்....!

631684866_26368155762768452_207221088950

  • கருத்துக்கள உறவுகள்

நாளை பிப் 14...

எல்லாரும் அவுங்க அவுங்க மனுசிமார் / காதலியிடம் மட்டுமே காதலை சொல்வோம்னு சத்தியம் பண்ணுங்கடா..

image-2026-02-13-202444501.png

  • கருத்துக்கள உறவுகள்


prsSodteonfacu5 7i59tà947iHg09aea4185t:lc19 0rth1g680t001,ml
 ·

மெட்ராஸ்கார‌ர்களை திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னால் எப்புடி இருக்கும்?

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத்தக.

பொருள்: க‌ஸ்மால‌ம், ஒயுங்கா ப‌டி, ப‌ட்ச‌து ப‌ட்சாமாறி ந‌ட்ந்துக்க‌டா, பேமானி.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

பொருள்: டேய், வூட்டுக்கு வந்த‌ விருந்தாளி கைல ந‌ல்லா‌ மூஞ்சி குட்து பேசுடா, இல்ல‌ன்னா ப‌ய‌ அனிச்ச‌ம் பூவ‌ மோந்தா மாரி வாடி வுடுவாண்டா .

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.

பொருள்: சோமாறி, கொய்யாப் ப‌ய‌த்த‌ கைல‌ வ‌ச்சிக்கினு எவ‌னாவ‌து கொய்யாக்காவ‌ துண்ணுவானாடா? ந‌ல்ல‌ வார்த்தையா நாலு பேசுவியா, அத‌ வுட்டுப்புட்டு கெட்ட‌ கெட்ட‌ வார்த்தையா பேசிக்கினு கீற‌? காது கொய்யின்னுதுடா, கொய்யால‌.

புறம் கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறம் கூறும் ஆக்கம் தரும்

பொருள்: ப‌ன்னாட‌, ஒர்த்த‌ன‌ப் ப‌த்திப் பின்னால‌ போட்டுக் குட்து பொய‌க்க‌ற‌தெல்லாம் ஒரு பொய‌ப்பாடா? அதுங்காட்டி நாண்டுகிட்டு சாவ‌லாம்டா, ச‌னிய‌ம் புட்ச்ச‌வ‌னே..

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.

பொருள்: எவ‌ன் வேணா சும்மா உதார் உட‌லாம் ம‌ச்சி, ..சொன்னா மாரி செஞ்சிப்பாரு அப்ப‌ தெரியும் மேட்ட‌ரு, நெஞ்சில‌ கீற‌ ம‌ஞ்சா சோறு எகிறிப்பூடும் பாத்துக்க‌......!

634207850_122276269262037466_66014576479

  • கருத்துக்கள உறவுகள்

vfkfkf.png

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் அதிபர் மக்ரோனின் மிகவும் சிந்திக்கத்தக்க ஒரு சுய மதிப்பீடு ........!

sooStrnepd6m:9172u4393l0c7av821f74im3e1i,h1t9r r0ua3805 21éh ·

அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையால் பெரும் தவறுகளைச் செய்துவிட்டேன்!" - இந்தியப் பயணத்தில் மனம் திறந்த பிரான்ஸ் அதிபர் மக்ரோன்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தற்போது இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். புதுடெல்லியில் இந்திய ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில், தனது ஆட்சிக் காலத்தில் செய்த தவறுகள் குறித்தும், தனது தனிப்பட்ட ஆசைகள் மற்றும் காதல் குறித்தும் மிகவும் வெளிப்படையாகப் பேசியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

"எப்போதெல்லாம் எனக்கு என் மீது அதீத நம்பிக்கை இருந்ததோ, அப்போதெல்லாம் நான் தவறுகளைச் செய்திருக்கிறேன்; அதுவும் மிகப்பெரிய தவறுகளைச் செய்திருக்கிறேன்," என்று அதிபர் மக்ரோன் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கு உதாரணமாகத் தனது மேடைப் பேச்சுகளைச் சுட்டிக்காட்டிய அவர், "நாம் நினைத்ததை எல்லாம் பேசிவிடலாம் என்று கருதிப் பேசும்போது, அது பல நேரங்களில் மக்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. பின்பு அதற்காக நாம் பெரிதும் வருந்த நேரிடுகிறது. நமது பேச்சை மற்றவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற கவனிப்பு குறையும்போதுதான், இந்த அதீத தன்னம்பிக்கை தலைதூக்குகிறது," என்று தனது முந்தைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

"உங்களுக்கு இப்போது 25 வயதாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?" என்ற சுவாரஸ்யமான கேள்விக்குச் சற்றும் தயங்காமல் பதிலளித்தார் அதிபர். "கலை மற்றும் படைப்பாற்றல் துறையில் எனது திறமைகளை வளர்த்துக்கொண்டிருப்பேன். முற்றிலும் தனித்துவமான ஒன்றைச் செய்திருப்பேன்," என்று கூறிய அவர், பல ஆண்டுகளாகத் 'தரவு அறிவியல்' (Data Science) படிக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகவும், ஆனால் அதை இன்னும் தொடங்கவில்லை என்றும் புன்னகையுடன் குறிப்பிட்டார்.

இன்றைய இளைய தலைமுறையினரின் நிலை குறித்துத் தனது ஆழ்ந்த கவலையையும் அவர் வெளிப்படுத்தினார். "பருவநிலை மாற்றம், இயற்கை வளங்கள் அழிவு, உலகெங்கும் நடக்கும் போர்கள், நாடுகளுக்கிடையே இல்லாத ஒற்றுமை மற்றும் அசுர வளர்ச்சியடையும் தொழில்நுட்பங்கள் எனப் பலவிதமான அழுத்தங்களுக்கு இன்றைய இளைஞர்கள் ஆளாகியுள்ளனர். இதனால், அவர்களின் இளமைக்காலத்திற்கே உரித்தான கள்ளங்கபடமற்ற தன்மை தொலைந்துவிட்டது வருத்தமளிக்கிறது," என்றார்.

முடிவாக, "உங்கள் காதல் கதையை 60 விநாடிகளில் சொல்ல முடியுமா?" என்று நெறியாளர் கேட்டபோது, அதிபரின் பதிலில் கவித்துவம் எட்டிப்பார்த்தது.

"காதல் என்பது முற்றிலும் எதிர்பாராமல் நடப்பது; அது முன்கூட்டியே எழுதி வைக்கப்பட்டதல்ல. அதை மிக ஆழமாக, முழுமையாக வாழ்ந்து பார்க்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடந்து செல்லும் மிக முக்கியமான உணர்வு அதுதான். ஒவ்வொருவரின் காதலும் முற்றிலும் தனித்துவமானது; அதை வேறெந்தக் காதலுடனும் ஒப்பிட முடியாது," என்று நெகிழ்ச்சியாகப் பதிலளித்து நேர்காணலை நிறைவு செய்தார் அதிபர் மக்ரோன் .......!

638113586_26862288320026687_913537524669

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.