Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதி அமைச்சர் சப்பிரி தொடர்ந்தும் அமைச்சராக பதவி வகிப்பதைக் குறித்து சங்கடப்படுகிறார்- எம்.ஏ. சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் எம்.ஏ. சுமந்திரன், நீதி அமைச்சர் சப்பிரி தொடர்ந்தும் அமைச்சராக பதவி வகிப்பதைக் குறித்து சங்கடப்படுகிறார் எனவும் இராஜினாமா செய்ய முயன்றும் முடியாமலிருக்கிறார் என ஊடகங்கள் கூறிவருவதாக தெரிவித்தார். இராஜினாமா செய்ய முடியாமை மிகவும் விசித்திரமாக இருந்தாலும் , அமைச்சருக்கு தன் பதவியை குறித்திருக்கும் சங்கடம் தன்னால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறதென சுமந்திரன் கூறினார். ஏனெனில் அரசாங்கம் நாட்டின் நீதித் துறையின் செயற்பாடுகளில் வெட்கமின்றி தொடர்ந்து தலையிட்டு வருகிறதெனச் சாடினார்.
 
"இன்று கடற்படை தளபதி வசந்த காரனாகொட வடமேல் மாகாணத்தின் ஆளுனராக நியமிக்கப்படப் போகிறார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. இவர் இலங்கையின் ஒர் அடையாள வழக்கான கப்பங்கேட்டு கடத்தப்பட்டு பின் திருகோணமலை கடற்படை முகாமில் கொலைசெய்யப்பட்ட பதினொரு இளைஞரின் வழக்கில் முக்கிய சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டவர். ஆனால் இவருக்கெதிரான குற்றப்பத்திரிக்கையை சட்டமா அதிபர் காரணமின்றி மீள கை பெற்றுக்கொள்ளப்போவதாக கூறியுள்ளார். கடத்தப்பட்டவர்களின் குடுபத்தினர் பலவருகாலமாக நீதி கேட்டுப் போராடியிருந்த போதும் சென்ற அரசாங்கக் காலத்தின் போது தான் இவ்வழக்குத் தொடர்பில் சிறிதளவேனும் முன்னேற்றம் காட்டப்பட்டது. ஆனால் தற்போது அவை கூட பின்வாங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, அரசாங்கத்தில் இருக்கும் அல்லது அரசாங்கத்திற்கு சார்பாகவிருக்கும் பலருக்கு எதிராக பதியப்பட்ட குற்றப்பத்திரிகைகளை பதவிக்கு வந்தவுடனேயே சட்டமா அதிபர் அவசரஅவசரமாக மீள கைவாங்கி வருகிறாரென சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.
 
சட்டமா அதிபரானவர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டாலும் சுதந்திரமாக செயற்படவேண்டியவர். எமது அரசியலமைப்பை ஒத்த நாடுகளான பிரித்தானியாவில் மற்றும் இந்தியாவில் அரசியல் நியமனம் பெற்றவராக இருந்தாலும் சட்டமா அதிபர்கள் சுதந்திரமாகவே செயற்படுகின்றனர் ஆனால் இங்கு மட்டும் இது எதிர்மாறாகவே உள்ளது.
 
ஜனாதிபதி செயலணித் தலைவராக இன்னுமோர் குற்றவாளி நியமிக்கப்பட்டமைக்கு நீதி அமைச்சர் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். இப் பௌத்த பிக்கு இருமுறை நீதித்துறையை அவமதித்த குற்றத்திற்காக குற்றஞ்சாட்டப்பட்டவர். அதுவும் ஒரு இந்துக் கோவில் வளாகத்தில் ஓர் பிக்குவின் உடலை தகனம் செய்வதற்கு தடைவிதித்ததை பொருட்படுத்தாது செயற்பட்டவரே "ஒரு நாடு ஒரு சட்டம்" என்ற செயலணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இச் செயலணி முதலில் நியமிக்கப்பட்ட போது ஒரு தமிழ் உறுப்பினரும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. இதைக் குறித்து நாம் பெருமிதம் கொண்டோம். மானமுள்ள தமிழர் எவரும் இப்படிப்பட்ட ஒரு செயலணியில் இணைய மாட்டார்களென நினைத்திருந்தோம். ஆனால் எல்லாச் சமூகங்களிலும் பலதரப்பட்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஆதலால் தான் தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மூவர் தங்களது சுய மரியாதையை குழிதோண்டி புதைத்துவிட்டு; இச் செயலணியில் சேர்ந்துகொண்டுள்ளனர். நான் இதை கூறுவதற்கான காரணம் பலர் இவ் "ஒரு நாடு ஒரு சட்டம்" என பெயரிடப்பட்டுள்ள செயலணி தனியார் சட்டங்கள் மட்டும் தொடர்பானவையென நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இது அதனைவிடவும் பாரதூரமானது. பிரதமர் இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் பலமுறை இலங்கையில் அதிகாரம் பகிரப்படுமென வாக்குறுதியளித்திருக்கிறார். அதில் ஒரு துளியேனும் உண்மையிருந்தால், ஒரு நாட்டில் ஒரே சட்டம் இருக்கமுடியாது, ஏனெனில் நாம் ஏற்றுக்கொள்ளாத பலவித அடிப்படைக் குறைகளைக் கொண்ட பதின்மூன்றாம் திருத்தச்சட்டத்தின் கீழ் கூட சட்டங்கள் வகுப்பதற்கான அதிகாரம் பகிரப்பட்டுள்ளது. மாகாண சபை பட்டியலில் மற்றும் பொதுப் பட்டியலில் உள்ள கருமங்கள் குறித்தது சட்டமியற்ற மாகாண சபைகளுக்கு அதிகமுண்டு. அரசாங்கம் அதிகாரப் பகிர்வு, மத்தி மீளப்பெற முடியாதவகையில், மென்மேலும் அதிகரிக்கப்படுமென்றே சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி அளித்து வருகிறது. அவ்வாறாயின் எவ்வாறு "ஒரு நாடு ஒரு சட்டம்" என்றோர் செயலணி நிறுவப்பட முடியும்? இது இலங்கை அரசியலமைப்பிற்கு எதிரானது மட்டுமன்றி அரசாங்க வாக்குறுதிகளுக்கும் எதிர்மாறாகவே உள்ளது.
 
இதனால் தான் இச் செயலணியில் தமிழர்கள் இருக்கமாட்டார்களென நான் நம்பினேன். ஆனால் பலதரப்பட்ட காரணங்களுக்காக சிலர் அவர்களுடைய மானத்தை விற்று இவ்வாறு செயற்படுகின்றனர். நாங்கள் இச் செயலணியில் உருவாக்கத்தை எதிர்த்தாலும், ஜனாதிபதியின் கண்ணோட்டத்தில் இதனை நோக்கினால் அவருடைய மூலமுதலான நியமனங்களில் தமிழர் எவரும் இருக்கவில்லை. பின்குறிப்பாகவே இரண்டாவது வர்த்தமானி மூலம் இணைக்கப்பட்டுள்ளார். இது எதனைக் குறித்து நிற்கின்றது? நாங்கள் இந்நாட்டில் பின் குறிப்புகள் அல்ல! நாங்கள் இந்த நாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்துவந்துள்ளோம். இந்நாட்டில் சம உரித்து எமக்குமுள்ளது.
 
எது எவ்வாறாயினும் நாங்கள் இந்த செயலணியை முற்றாக எதிர்க்கிறோம். இப்படிப்பட்ட செயலணியொன்று நிறுவப்பட்ட பின்னர், முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த நீதி அமைச்சர் தொடர்ந்தும் இதனை சகித்துக்கொள்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது." இதில் சேர்ந்துகொண்டுள்ள மூன்று தமிழர்களை போல் நீங்களும் உங்கள் சுய மரியாதையை இழந்து இவ் அரசாங்கத்துடன் இருப்பீர்களென நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் சமூகத்திற்கு 'நான் இராஜினாமா செய்ய முயற்ச்சித்து அதனை பெறமுடியாதுள்ளேன்' எனக் கூறுவது ஒரு கேலிக்கூத்தாகவே இருக்கின்றது. ஆகவே என்னுடைய வேண்டுகோள் யாதெனில் இப் பாராளுமன்ற அமர்வுகள் முடிவுற முன் நிமிர்ந்து நின்று உங்கள் பதவியை இராஜனாமா செய்யுங்கள்" என நீதி அமைச்சர் சப்பிரியை பார்த்து சுமந்திரன் சவால் விடுத்தார்.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.