Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகத்தின் பங்குபற்றுதலூடான செயலாற்றுகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, tree and body of water

 

இந்தப்படம் நேற்றுமுதல் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.ஆனால் இது வெறுமனே ஆரியகுள சூழலை அசுத்தம் செய்தவரை யாரோ வழிப்போக்கர் படமெடுத்திருக்கிறார் என்பதே தாண்டு இந்த படம் சொல்லும் கருத்தியலை இன்னொரு கோணத்தில் அணுக விரும்புகிறேன்.

சில மாதங்களுக்கு முன்புவரை ஆரியகுளம் சூழல் குப்பை கூளங்கால் சூழப்பட்டிருந்த போது, தினம் தினம் எத்தனையோ பேர் குப்பைகளை வீசிவிட்டோ, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டோ இருந்திருக்க கூடும்.ஆனால் நம்மில் மிகப் பெரும்பான்மையானோர் அதை கண்டுகொண்டதோ அல்லது தினம் தினம் புகைப்படங்களை எடுத்து பகிர்ந்ததோ கிடையாது. ஒரு சிலர் மட்டும் அவ்வப்போது பகிர்ந்ததுண்டு அதையும் நம்மில் பலர் கண்டுகொண்டதில்லை.

ஆனால் நேற்றய இந்த படம் சமூக வலைத்தளங்களில் அவதானிக்கப்படுகிறது. மேற்படி புகைப்படத்தை எடுத்த வழிப்போக்கருக்கு ஏன் அதை எடுக்க தோன்றியது?? அதை பகிர வேண்டும் என்று தோன்றியது? ஏனெனில் ஆரிய குளத்தின் மீது வெளிச்சம் பாச்சப்பட்டு சமூகம் அதை ஆழமாக அவதானிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வெளிச்சமும் அவதானமும் அதன் முக்கியத்துவத்தை உணர்தியிருக்கிறது. ஆரிய குளத்தை போணவேண்டும் என்பதில் சமூகம் பங்குபற்ற ஆரம்பித்திருக்கிறது

மறுபக்கம், சம்பந்தப்பட்ட நபருக்கு கூட இந்த படம் சென்றடைந்திருக்கலாம். அந்ந நபர் கூட மறுபடியும் இவ்வாறு செய்யாமல் விடக்கூடிய அழுத்தம் கிடைத்திருக்கும். தவிர இதை பார்த்த வழமையாக தவறு செய்யும் வேறு பலரும் கூட இனிமேல் தங்களையும் சமூகத்தில் இருந்து யாராவது புகைப்படம் எடுத்துவிடக்கூடும் என்ற அழுத்தத்தில் இனிவரும் காலத்தில் ஆரியகுள பொதுவெளியில் தவறாக நடக்க முயலமாட்டார்கள் அல்லது முயல்வது குறைந்து நாளடைவில் இல்லாமல் போகும்.
ஆக சமூகம் சரியாக இருக்கவும் அல்லது தவறுகளை தாங்களாக திருத்திக்கொண்டு அது புதிய வழமையா நிலைபேறாக மாறவும், சமூகத்தின் பங்குபற்றுதலால் பிரயோகிக்கப்படும் அழுத்தமே மிகப்பெரிய பங்கு வகிக்கும்

சமூக வெளி என்பது வெறும் சமூகவலைத்தளங்களின் கருத்தாடல் என கடந்து விடமுடியாது. சமூக வலைத்தளங்கள் மிகப்பெரிய தாக்கத்தை மாற்றத்தை ஏற்படுத்த வல்லன. "நாங்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துரைப்பதில்லை, அறவழியில் அமைதியாக வாழ்கிறோம்" என்று இருக்கும் சிலர் வரலாறுகளை தோண்டினால் சமூகத்தை மட்டுமல்ல நாடுகளையே ஏமாற்றிய வரலாறுகள் இருக்கும். அவர்கள் போன்றவர்களில் ஒருவராக தான் நேற்று மேற்படி செய்த இளைஞனையும் பார்க்கிறேன்.

ஆனால் சமூகத்தின் பங்குபற்றுதலூடான அழுத்தம் அவ்வாறான முகமூடிகளை கிழித்து உண்மையான வெளிப்படைத்தன்மையுடைய பொறுப்புவாய்ந்த சமூகத்தை கட்டியெழுப்பும்.நேற்றயை பலருடைய பதிவுளின் பின்னூட்டலில், யாழ் மாநகர சபைக்குள் வேறெங்கெல்லாம் மலசலகூட வசதிகள் உள்ளன? அவை எவ்வாறு பேணப்பபடுகிறது? வேறெவ்வாறு இந்த கழிப்பறை வசதிகளை மேம்படுத்தலாம் எனும் பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்றன.இவையெல்லாம் ஆரோக்கியமான சமூக மாற்றத்தை நோக்கிய படிகள்.

ஆக சமூகம் மேலும் மேலும் அதிகமாக பொதுவிடையங்களில் பங்கெடுக்கவேண்டும். சமூகத்தின் அவதானம் படும் படி பொதுவிவகாரங்களில் வெளிப்படைத்தன்மை எனும் வெளிச்சம் பாச்சப்படவேண்டும். சமூகத்தின் பங்குபற்றுதல் அரசியல்மயப்படுத்தப்படாமல் அங்கீகரிக்கப்படவேண்டும்.
இது தொடர்ந்து நடந்துவந்தால் நிலைபேறன ஆரோக்கியமான பொறுப்புவாய்ந்த சமூகமாக இன்னும் இன்னும் எங்கள் சமூகம் மாறும்.

நன்றி

திருநாவுக்கரசு தயந்தன்
17.12.2021

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.