Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பரோலில் வெளியே வந்த நளினி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரோலில் வெளியே வந்த நளினி

spacer.png

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி ஒரு மாத பரோலில் இன்று (டிசம்பர் 27) வெளியே வந்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க வேண்டுமென அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு ஒன்றைக் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல என்று தெரிவித்தது.

இதனிடையே கடந்த 2021 மே 28ஆம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்டார் பேரறிவாளன். நேற்று முன் தினம் அவருக்கு 8ஆவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நளினி பரோலில் விடுவிக்கப்பட்டார்.

நளினியின் தாயார் பத்மா, கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தனக்கு உடல்நிலை சரி இல்லை என்பதால் தனது மகளை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில் நளினிக்கு பரோல் வழங்கக் கேட்டு அரசிடம் விண்ணப்பித்திருந்தேன், ஆனால் அரசிடம் இருந்து உரியப் பதில் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆஜராகி, தமிழக அரசு நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்க முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார். அதன்படி நளினியை பரோலில் விடுவிக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வேலு என்பவரது வீட்டில் தங்க நளினி தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டை போலீசார் ஆய்வு செய்து அங்கு தங்குவதற்கு அனுமதி வழங்கினர்.

இந்நிலையில் இன்று முதல் 30 நாட்கள் வரை பரோல் வழங்கப்பட்டதால், வேலூர் பெண்கள் சிறையிலிருந்து வெளியே வந்தார் நளினி. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் பிரம்மபுரத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை அவரது தாயார் பத்மா, கணவர் முருகனின் உறவினர் தேன்மொழி ஆகியோர் வரவேற்றனர்.

பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரை சந்திக்கக் கூடாது, மருத்துவ காரணங்களைத் தவிர வேறு எதற்கு வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. காட்பாடி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் நளினிக்கு விதிக்கப்பட்டுள்ளன. அதுபோன்று ஒரு டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நளினி தங்கியுள்ள வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

முன்னதாக, 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் நளினி அவரது மகளின் திருமண ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக பரோலில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://minnambalam.com/politics/2021/12/27/18/rajiv-gandhi-case-Nalini-released-on-parole

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதல்வருக்கு நன்றி.

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடையம்.நிரந்தர விடிவு கிடைக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.