Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடுகளில் வளங்களில் இலாபம் அடைவதே சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் நோக்கம் : அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகளில் வளங்களில் இலாபம் அடைவதே சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் நோக்கம் : அறிக்கை

(ஏ.என்.ஐ)

சீனாவின்  ஒரு பாதை ஒரு மண்டலம்  முன்முயற்சி (பிஆர்ஐ) திட்டம் வீணான செலவுகள், சுற்றுச்சூழல் அழிவு மற்றும் பாரிய கடன் சுமைகளுக்கு ஒத்ததாக மாறியுள்ளது. மேலும் நாட்டின் இயற்கை வளங்கள் அல்லது மக்களின் செலவில் பங்கேற்கும் நாட்டின் தலைவர்கள் மற்றும் சீன நிறுவனங்களுக்கு இலாபம் ஈட்டுவதை  சீன திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில்  பீ.ஆர்.ஐ திட்டங்கள் தொடர்பான 1,814 திட்டங்களில் 270 திட்டங்களில் கடன் நிலைத்தன்மை, தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகள், தேசிய பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் தொடர்பான சிக்கல்கள் இருப்பதாக  ஆய்வவறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2017 இல்  McKinsey  என்ற அமைப்பின் கணக்கெடுப்பின் பிரகாரம்  ஆப்பிரிக்காவில் உள்ள சீன நிறுவனங்களில் 60 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை ஒப்பந்தங்களுக்கு இலஞ்சம் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், கண்டத்தில் சமீபத்திய டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இலஞ்சம் கொடுப்பவர்கள் குறியீட்டில் சீன நிறுவனங்கள் இரண்டாவது முதல் கடைசி வரை மதிப்பெண் பெற்றுள்ளதாக இன்சைட்ஓவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

பீ.ஆர்.ஐ திட்டங்களில், பல ஊழல் வழக்குகள் ஒரே மாதிரியான வடிவத்தில் வெளிப்பட்டுள்ளன. சீனாவிற்கும் பீ.ஆர்.ஐ பங்கேற்கும் நாட்டிற்கும் இடையில் மூடிய ஏல முறையுடன் கையொப்பமிடப்பட்ட ஒளிபுகா ஒப்பந்தங்கள், சீன நிறுவனங்களுக்கு இரகசியமாக திட்டத்தை வழங்குவதற்காக  மாத்திரமே நோக்ககாக கொண்டுள்ளன.  

ஆரம்ப கட்டத்தில், சீன  திட்டங்கள் உள்ளூர் மக்களுக்கும்இ பங்கேற்கும் நாட்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இறுதியில், திட்டங்கள் பலனைத் தரவில்லை. மாறாக கடன் மற்றும் ஏனைய நெருக்கடிகளுக்கே வலிவகுத்துள்ளன. 

பல சந்தர்ப்பங்களில்இ திட்டங்களில் கடுமையான ஊழல் காரணமாக நாடுகள் சீனாவுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டன. இதனால்  'கடன் வலையில்' விழுந்துள்ளன என்று இன்சைட்ஓவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  

பீ.ஆர்.ஐ.  குடையின் கீழ் சீனா இத்தகைய நெருக்கடியான  நடைமுறைகளை முன்னெடுத்து வருகின்றது.  இதற்கு  ஆப்பிரிக்க கண்டம் ஒரு சிறந்த  உதாரணமாகும். ஒரு பாதை ஒரு மண்டலம்  செயல்படுத்தும்போது பின்பற்றப்பட்ட முறைகேடுகளின் சுமைகளை எதிர்கொண்டது. 

சீனாவின் தவறான நிர்வாகத்தின் மிகத் தெளிவான உதாரணங்களில் ஒன்றாக    நைரோபி-மொம்பாசா ரயில்வே, கிழக்கு ஆப்பிரிக்க திட்டத்தை குறிப்பிடலாம். 

எனவே சீன திட்டத்தில் பங்கேற்கும் நாடுகளில், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மீட்டெடுக்க வேண்டும். பீ.ஆர்.ஐ.  திட்டங்களின் கீழ், ஊழல் ஆட்சிகளுக்கு பில்லியன் கணக்கான டொலர்கள் செலுத்தப்படுகின்றன, அங்கு ஊழல் விவகாரங்கள் அரசியல் அமைப்புகளில் உட்பொதிக்கப்பட்டுகின்றமை கவலைக்குறியதாகும். 
 

https://www.virakesari.lk/article/119979

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பட்டியலில் மேற்கு வராதோ!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.