Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அக்கரப்பத்தனையில் மத முரண்பாட்டை உருவாக்க திட்டமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அக்கரப்பத்தனையில் மத முரண்பாட்டை உருவாக்க திட்டமா?

January 2, 2022

spacer.png

 

அக்கரபத்தனை நகரில் பதற்றம் நிலவுவதாகவும் அங்கிருக்கும் கடைகளில் சில கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் திருவுருவச் சிலைகளும் பொம்மைகளும் இனந்தெரியாதோரால் நேற்றிரவு அல்லது இன்று விடியற்காலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆலய நிர்வாக சபையினர் அக்கரபத்தனை காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள பிரதான ஆலயமான சித்தி விநாயகர் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக சபையினர் மேற்கொண்டுள்ளனர்.

புனர்நிர்மாண பணிகள் நிறைவடைந்து தற்பொழுது பொம்மைகளுக்கு வெளிப்புற பூச்சு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்து நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து ஆலயத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் கடும் எதிர்பை தெரிவித்து வருகின்றனர்.

இது இனந்தெரியாத குழு ஒன்றின் செயற்பாடு எனவும் ஆலயத்தில் நடைபெற இருந்த கும்பாபிஷேக நிகழ்வை குழப்புவதற்கான செயற்பாடு எனவும் மேலும் மத ரீதியிலான முரண்பாடுகளை உருவாக்க திட்டமிடப்பட்ட செயற்பாடாகவும் இதனை கருதுவதாக ஆலய நிர்வாக சபையினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அக்கரபத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

லிந்துலை பகுதியில் அமைந்துள்ள மாதா சிலை ஒன்றும் அண்மையில் உடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://globaltamilnews.net/2022/171295

  • கருத்துக்கள உறவுகள்

அக்கரபத்தனை ஆலயத்தில் விக்கிரகங்கள், சிலைகள் உடைப்பு - மக்கள் ஒன்று கூடியதால் பதற்றம்.

(க.கிஷாந்தன்)

அக்கரப்பத்தனை நகரத்தில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விக்கிரங்கள் மற்றும் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Photo__1_.jpg

இச்சம்பவம் 02.01.2022 அன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.

Photo__5_.jpg

அக்கரப்பத்தனை நகரத்தில் இதுவரை காலமாக ஆலயம் ஒன்று இல்லாத நிலையில் புதிதாக புனரமைக்கப்பட்ட குறித்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலேயே இவ்வாறு சிலைகள் மற்றும் விக்கிரங்கள் உடைக்கப்பட்டுள்ளன.

குறித்த ஆலயத்தில் இம்மாதம் 19 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை கும்பாபிஷேகமும் இடம்பெறவுள்ளது.

Photo__6_.jpg

இந்த நிலையிலேயே இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றது அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அக்கரப்பத்தனை நகர வர்த்தகர்களும் அனைத்து கடைகளையும் மூடி ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Photo__8_.jpg

குறித்த சம்பவம் தொடர்பில் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/120077

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் ஒரு கலவரம் வெடிக்கோணும், தாம் அதில் குளிர் காயோணும் என்றொரு கூட்டம்அலையுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, satan said:

நாட்டில் ஒரு கலவரம் வெடிக்கோணும், தாம் அதில் குளிர் காயோணும் என்றொரு கூட்டம்அலையுது.

இனி வரும் காலங்களில் ஒன்லி மதக்கலவரம்.....அதுதான் இப்போதைக்கு வசதி...😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இனி வரும் காலங்களில் ஒன்லி மதக்கலவரம்.....அதுதான் இப்போதைக்கு வசதி...😁

எதிரி அடுக்கடுக்காய் வைச்சிருக்கிறான் ஆப்பு நமக்கு. நாங்கள் இன்னும் இந்தியாவின் பின்னால்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, satan said:

எதிரி அடுக்கடுக்காய் வைச்சிருக்கிறான் ஆப்பு நமக்கு. நாங்கள் இன்னும் இந்தியாவின் பின்னால்.

ஏய் விழித்தெழு என்று என்று நாம் சொன்னால் படிக்காதவன்,புலம்பெயர்ந்தவன், ஓடிப்போனவன் என்ற வக்கணைகள் ஆயிரம் ஆயிரம்......
இதில் சிலுவைகளை நாமே சுமக்கின்றோம் என சொல்லி சோரம் போபவர்கர்களோ சொற்பம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.