Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையாளிகள் தமிழர்களுக்கெதிரான நிலைப்பாட்டினை ஏன் எடுக்கிறார்கள் என்பதற்கான வரலாற்றுப் பதிவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது தாயக விடுதலைப் போராட்டத்தில் இந்தியத் தலையீடு எவ்வாறு தவிர்க்கமுடியாத இடராக அமைந்தது என்பது நாம் அறிந்ததே. ஆனால், இந்த இந்திய வெளியுறவுத்துறையின் எமது விடுதலைப் போராட்டத்தினைக் கைய்யாண்ட, கருவறுத்த மிக முக்கியமானவர்களாக மலையாளிகள் இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. 

திக்சீத், எம் கே நாராயணன், சிவசங்கர் மேனன். அந்தோணி, விஜய் நம்பியார், சதீஷ் நம்பியார், ராமன், ஹரிஹரன் உள்ளிட்ட பல அதிகாரிகள் ஈழப்போராட்டம் தோல்வியடையவேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையினை வகுத்தார்கள், செயற்படுத்தினார்கள்.

இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் தமிழர்கள் மீதான மலையாளிகளின் ஏளனமும், வெறும் ரகசியமும் அல்ல. மலையாளைச் சினிமாக்களில் தமிழர்கள் நடத்தப்படும் விதமும், தமிழர்களைக் குறிக்க அவர்கள் பாவிக்கும் தோலின் நிறம், தமிழர் செய்யும் தொழில், அவர்களின் மொழி தமிழ், அவர்களின் மத கலாசார பழக்க வழக்கங்கள் தொடர்பாக அவர்கள் பாவிக்கும் குறியீடுகள் மிகவும் அருவருக்கத் தக்கவை. மலையாளச் சினிமாக்களில் தமிழகத் தமிழரை மட்டுமல்லாமல் ஈழத்தமிழர் மீதான வன்மமும் மலையாளிகளால் தவறாமல் திணிக்கப்பட்டே வந்திருக்கிறது. குறிப்பாக சுரேஷ் கோபி, மம்முட்டி, துல்க்கர் சல்மான், ஜோன் ஏபிரகாம், ஜெயராம், அஜித்குமார்  போன்ற பிரபல மலையாளி நடிகர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மிகவும் கீழ்த்தரமாகவும், பயங்கரவாதமாகவும் விமர்சித்தே வந்திருக்கிறார்கள். 2019 இல் துல்கர் சல்மான் தயாரித்த வாரணம் அவஷ்யமுண்ட் எனும் சுரேஷ் கோபி நடித்த மலையாளப் படத்தில் தனது நாய்க்கு "பிரபாகரன்" என்று பேர் சூட்டி தனது காழ்ப்புணர்வைத் தீர்த்துக்கொண்டதும் நாம் அறிந்ததே. 

இவ்வாறு மலையாளிகள் எதற்கான மொத்தத் தமிழின மீதும் வெறுப்பைக் காறி உமிழ்கிறார்கள் என்று தேடியபோது பல தகவல்களை நாம் பார்க்கமுடிந்தது.

இதுகுறித்துப் பேசும் பல தமிழ் அறிஞர்கள் சரித்திரத்தில் தமிழர்களுக்கும், சேரர்களுக்கும் இடையே நடந்த போர் ஒன்று குறித்துப் பேசியிருக்கிறார்கள்.

காந்தளூர் சாலை எனப்படும் பகுதியில் இடம்பெற்றதாக சொல்லப்படும் சேரன் மீதான சோழ, பாண்டியர்களின் போரும், அழிப்புமே சேரர்களான இன்றைய மலையாளிகளை இன்றுவரை தமிழர் மீதான வெறுப்பிற்குக் காரணமாகச் சொல்கிறார்கள்.

நண்பர் ஏராளனின் உதவியுடன் பின்வரும் காணொளிகளை இணைக்கிறேன்.

நன்றி ஏராளன் .

 

 

உங்களிடம் இதுகுறித்த மேலதிக தகவல்கள், காணொளிகள் இருப்பின் தயவுடன் அவற்றை இங்கு இணைக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.