Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்துல் கலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்துல் கலாம்

[26 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திருமதி பிரதீபா பட்டீல் நேற்று புதன்கிழமை பதவியேற்றிருக்கிறார். சுதந்திர இந்தியாவில் முதற்தடவையாக பெண்மணியொருவர் ஜனாதிபதியாக பதவியேற்றிருப்பதை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இந்திய அரசியல்வாதிகள் பெருமை பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அது பெருமைப்பட வேண்டியதுதான். ஆனால், அதையும் விட பெறுமதியான பெருமைக்குரிய முன்னுதாரணத்தை வகுத்து பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எளிமையான வாழ்வு மற்றும் நேர்மைப் பண்புகள் குறித்து இந்திய அரசியல்வாதிகள் பெரிதாகப் பேசுவார்களா என்பது சந்தேகமே.

அப்துல் கலாம் அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு அணு விஞ்ஞானி. உபகண்டத்தில் அணுவாயுதப் போட்டி தீவிரமடையத் தொடங்கிய காலகட்டத்தில் இந்தியாவின் அணுத் திட்டங்களுக்கு பெரும் பங்களிப்பைச் செய்த அப்துல் கலாமை ஜனாதிபதியாக இந்திய அரசியல்வாதிகள் தெரிவு செய்தனர். எந்தவிதமான எதிர்பார்ப்புமே இல்லாமல் அந்தப் பதவிக்கு வந்த அப்துல் கலாம், ஐந்து ஆண்டுகள் கடந்து பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும்போது இப்படியொரு ஜனாதிபதி இனிமேல் எப்போது கிடைக்கப்போகிறார் என்ற ஆதங்கத்தை சாதாரண மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறார். உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் இனிமையாகவும் எளிமையாகவும் செயற்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய மையே அப்துல் கலாம் என்ற தற்பெருமையோ, பகட்டுத்தன்மையோ இல்லாத மனிதனின் ஆளுமையின் பெருவெற்றி.

அரசியல்வாதிகள் மீது அதிகரித்துவரும் அதிருப்திக்கும் வெறுப்புக்கும் மத்தியில் நாளைய உலகம் பற்றி இளந்தலைமுறையினர் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்டவர் அப்துல் கலாம். ஜனாதிபதியாக பதவி வகித்த ஐந்து வருட காலத்திலும் இந்தியா பூராவும் மேற்கொண்ட பயணங்களின்போது அவர் பெருமளவு சந்திப்புகளை மாணவ சமுதாயத்துடன் தான் நடத்தியிருந்தார் என்று உறுதியாகக் கூறமுடியும். எந்தவொரு பதவிக்கும் பெருமையோ அதிகாரமோ உண்மையில் கிடைப்பது அதை அலங்கரிக்கும் நபர்கள் நடந்துகொள்ளும் விதத்தில்தான் என்பதை நமது காலத்தில் நாம் காணக்கூடியதாக நடைமுறையில் காண்பித்த ஒருவராக அப்துல் கலாம் திகழ்கிறார்.

இந்தியாவில் ஊழல் மோசடி இல்லாமல் எந்தத் துறையையும் காண முடியவில்லை என்றும் எந்தவொரு அலுவலைச் செய்துகொள்வதற்கும் இலஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது என்றும் இந்தர்குமார் குஜ்ரால் பிரதமராக இருந்தபோது ஒரு தடவை மிகுந்த கவலையுடன் கூறினார். இன்று அரசியல் பணம் பண்ணுவதற்கான முழுநேரத் தொழிலாக்கப்பட்டிருக்கிறது. தவறான செயற்பாடுகளின் மூலம் கோடிகோடியாக சொத்துச் சேர்த்து உருட்டும் பிரட்டும் செய்யும் அரசியல்வாதிகளே இன்று தலைவர்களாக இருக்கிறார்கள். அத்தகைய ஒரு ஆரோக்கியமற்ற சூழ்நிலையிலே உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று வர்ணிக்கப்படுகின்ற இந்தியாவின் அதியுயர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும்போது ராஷ்டிரபதி பவனிலிருந்து இரண்டே இரண்டு சிறிய சூட்கேஸுகளுடன் வெளியேறுகின்ற ஒரு மனிதரைப் பார்க்க முடிகிறதென்றால் அதை என்னவென்று வர்ணிப்பதென்றே தெரியவில்லை.

ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறியபோது அங்கிருந்த ஆடம்பரப் பொருட்களில் கணிசமானவற்றையும் கதிரை, மேசை, கரண்டிகளைக் கூட எடுத்துச் சென்ற தலைவர்களின் குடும்பங்கள் பற்றியெல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஓய்வுபெற்றுச் சென்ற அப்துல் கலாம் இரு சிறிய சூட்கேஸுகளுடன் தான் போகிறேன் என்று கூறிய வார்த்தைகள் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களிடம் இருக்கவேண்டிய நேர்மை மற்றும் ஒளிவுமறைவற்ற தன்மையை வலியுறுத்தும் உன்னதமான பிரகடனமாகும். கடந்த வருடம் அப்துல் கலாமின் உறவினர்கள் புதுடில்லிக்கு சென்று அவருடன் ராஷ்டிரபதிபவனில் சில நாட்கள் தங்கியிருக்க விரும்பினர். இராமேஸ்வரத்திலிருந்து புதுடில்லி ரயில் நிலையத்துக்கு சென்று இறங்கிய 53 உறவினர்களும் அப்துல் கலாமின் வேண்டுகோளின் படி அவரது ஊழியர்களினால் வரவேற்கப்பட்டு, ஊர் சுற்றிக் காண்பிக்கப்பட்டு, விருந்தினர்களுக்கான சகல உபசரிப்புகளுடனும் கவனிக்கப்பட்டனர். ஒருவாரம் தங்கியிருந்து விடைபெற்ற அவர்கள் ஊர் சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு தடவை கூட அரசாங்க வாகனம் பயன்படுத்தப்படவில்லை. அதுமாத்திரமல்ல, அவர்களது உணவுக்கான செலவைக் கூட தனது தனிப்பட்ட கணக்கில் சேர்த்து அதற்கான கட்டணங்களை வசூலித்துவிட வேண்டுமென்ற கண்டிப்பான உத்தரவை அப்துல் கலாம் பிறப்பித்திருந்தாராம்.

அப்துல் கலாம் உத்தரவின் பிரகாரம் ராஷ்டிரபதி பவனில் இதுவரை இரகசியமாக பேணப்பட்ட இந்த விவகாரம் பற்றி ராஷ்டிரபதி பவனில் இருந்து அவர் வெளியேறும் வேளையிலேயே வெளியில் தெரியவந்திருக்கிறது. பிற்காலப் பதவிகள் மீதும் சொத்துச் சுகங்கள் மீதும் குறிவைத்து தங்கள் பொதுத் தொண்டைத் தொடங்காமல் மக்கள் நலனை மனதிற்கொண்டு அரசியல் வாழ்வில் ஈடுபட்டவர்கள் பலரைப்பற்றி நாம் முன்னர் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அத்தகையவர்களை இன்று எம்மால் காணமுடிவதில்லை. நன்றாகப் பணம் சம்பாதிக்கக்கூடிய அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக கிஞ்சித்தும் கூச்சமின்றி பகிரங்கமாகக் கவலையை வெளிப்படுத்துகின்ற அரசியல்வாதிகள் மத்தியில் இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். குடும்பத்துக்கு மாத்திரமல்ல, தன்னைச் சார்ந்த பரிவாரங்கள் சகலதுக்குமே அரசாங்கப் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை தேடிக் கொடுக்கும் அரசியல்வாதிகள் தான் இன்று எம்மைச் சூழக் காணப்படுகிறார்கள்.வாழும் முறையால் வழிகாட்டக் கூடியவர்கள் தலைவர்களாக இல்லாத ஒரு துரதிர்ஷ்டவசமான யுகத்தில் வாழும் எமக்கு அப்துல் கலாமின் வாழ்க்கை கனவுலகம் போன்றல்லவா தெரிகிறது.

thanks

http://www.thinakkural.com/news/2007/7/26/...l_page32132.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.