Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மல்லாவி மருத்துவமனையில் மருந்துகள் பற்றாக்குறை &யாழில். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளாந்தம் உயர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மல்லாவி மருத்துவமனையில் மருந்துகள் பற்றாக்குறை

மல்லாவி மருத்துவமனையில் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரி கதிர்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

மல்லாவி அரசினர் மருத்துவமனையில் நோயாளர்களுக்கான மருந்துகளும் ஏனைய மருந்து வகைகள் பலவும் முடிவடைந்துள்ளன.

குருதி அழுத்த நோயாளர்களுக்கான மருந்து வகைகள் தீர்ந்து விட்ட நிலையில் தொடர்ந்து அவர்களுக்கான மருந்து வகைகளை வழங்க முடியாமையினால் அவர்கள் வாத நோய்க்கு உள்ளாகும் வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

சத்திர சிகிச்சைக்கூடங்களில் கட்டுத்துணி இல்லாமையினால் பெரும் இடர்பாடுகளை நாம் சந்தித்து வருகின்றோம். குழந்தைகளுக்கான பாணி மருந்துகள் முற்றாக தீர்ந்து விட்டன. இதனால் மருந்து வில்லைகளை கொடுக்கும் போது புரைக்கேறி மிக ஆபத்தான நிலை ஏற்படுகின்றது.

நாள் ஒன்றுக்கு 150-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். அரசினால் மட்டுப்படுத்தப்பட்டு எமக்கு வழங்கப்படும் மருந்து வகைகள் குறுகியகால எல்லைக்குள் தீர்ந்து விடுகின்றன. இதனால் ஒரு முழுமையான சேவையை மக்களுக்கு வழங்க முடியவில்லை. குடிநீர் மின்பிறப்பாக்கி உள்ளிட்ட வளப்பற்றாக்குறை நிறைந்து காணப்படுவதால் இருக்கின்ற வளத்தினை வைத்துக்கொண்டு ஒரு முழுமையான சேவையினை எங்களால் செய்யமுடியவில்லை.

மல்லாவி மருத்துவமனையை பொறுத்த வரை ஜந்து தாதியர் வேலை செய்ய வேண்டிய சேவையை ஒரு தாதியே செய்கின்றார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றுவதற்கு நாம் முன்நிற்கின்ற போதும் இதிலுள்ள வளப்பற்றாக்குறைகளை நீக்கி நிறைவான ஒரு சேவையினை செய்ய வழி செய்து தருமாறு அரசசார்பற்ற நிறுவனங்களை கேட்ட போதும் அவர்களும் பின்னடித்துச் செல்கின்றனர். இதனால் முழுமையான சேவையை மக்களுக்கு வழங்கமுடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

-புதினம்

- - ------------------------------------------------------------

யாழில். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளாந்தம் உயர்வு

யாழ்.குடாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்துவருவதால் பொதுமக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். யாழ்.குடாநாட்டிற்கான பொருட்களை அரசாங்க அதிபரும் தனியார் வர்த்தகர்களும் கப்பல் மூலம் கொண்டு வந்து விநியோகம் செய்துவருகின்றார்கள்.

இவ்வாறு கப்பல் மூலம் கொண்டு வரப்படும் பொருட்கள் அரசாங்க அதிபரால் விலை நிர்ணயம் செய்யப்பட்ட பின்னரே விற்பனை செய்யவேண்டுமென அரசாங்க அதிபர் அறிவித்துள்ளதுடன், அதற்கேற்ப பொருட்களுக்கு விலை நிர்ணயமும் செய்துவருகின்றனர்.

எனினும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் முதல் தனியார் வர்த்தகர்கள் தங்கள் இஷ்டப்படி பொருட்களின் விலையை அதிகரித்து விற்பனை செய்து வருகின்றார்கள்.

யாழ்.நகரில் குத்தரிசி 120ரூபா, தீட்டல் அரிசி 120 ரூபா, கோதுமை மா- 75 ரூபா முதல் 80ரூபா, சீனி 70 ரூபா, பூடு 800 ரூபா, சலவைப் பவுடர் -360 ரூபா, பெரியபற்றி- 100ரூபா முதல் 110 ரூபாவரை, சிறியது - 70ரூபா, இஞ்சி -1000ரூபா, தேயிலை - 600 ரூபா வரை விற்பனையாகின்றன.

இதுபோன்றே அனைத்துப் பொருட்களும் அதிக விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை சீமெந்து ஒரு பைக்கெற்றின் விலையை அரசாங்க அதிபர் 1200 ரூபாவாக விலை நிர்ணயம் செய்துள்ளபோதும் தனியார் வியாபாரிகள் 1750 ரூபாமுதல் 1800 ரூபாவரை விற்பனை செய்கின்றார்கள்.

கோதுமை மாவின் விலை கொழும்பில் அதிகரித்தபோதும் யாழ்ப்பாணத்தில் பழையவிலையான 55 ரூபாவிற்கு விற்பனைசெய்யவேண்டுமென அரசாங்க அதிபர் கூறியுள்ளார். எனினும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களும் தனியார் வர்த்தகர்களும் 70 ரூபாமுதல் 80 ரூபாவரை விற்பனை செய்து வருகின்றார்கள்.

பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் அத்தியாவசியப் பொருட்களை வேண்டிய அளவில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையேற்பட்டுள்ளது.

தனியார் வர்த்தகர்கள் அத்தியாவசியப் பொருட்களை தங்கள் இஷ்டப்படி விலைகளை அதிகரித்துவருவதனால் வசதிகுறைந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கூட நிர்ணயம் செய்து விலைக் கட்டுப்பாட்டை பேண முடியாத நிலையில் குடாநாட்டில் அரச நிர்வாகமிருப்பது குறித்து பொது அமைப்புகள் கடும் விசனம் தெரிவித்துள்ளன.

- சங்கதி

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்புத் தடைகள், சோதனைகளால் பொருள்கள் தட்டுப்பாடு; விலையேற்றம் விநியோகம் தாமதமாவதால் வன்னி மக்கள் பாதிப்பு

இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வடக்கில் மீண்டும் கடும் மோதல்கள் தொடங்கிவிட்ட சூழ்நிலையில் பாதுகாப்புத் தடைகள், சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.