Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டில் எரிபொருள் நெருக்கடி இல்லை, பொய்யான செய்திகள் பரவுகின்றன – பிரதமர் மஹிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் எரிபொருள் நெருக்கடி இல்லை, பொய்யான செய்திகள் பரவுகின்றன – பிரதமர் மஹிந்த

நாட்டில் எரிபொருள் நெருக்கடி இல்லை, பொய்யான செய்திகள் பரவுகின்றன – பிரதமர் மஹிந்த

எரிபொருள் நெருக்கடி என்ற தவறான கருத்து காரணமாகவே மக்கள் அச்சத்தில் உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

எரிபொருள் இருப்பு நான்கு நாட்களுக்கு மட்டுமே இருக்கின்றது என தவறான செய்திகள் பரவுவதாக தெரிவித்த அவர், நாட்டில் எவ்வித எரிபொருள் நெருக்கடியும் இல்லை என கூறினார்.

அரசியலில் குறைந்த அனுபவம் கொண்டவர்களினால் வெளியிடப்படும் இவ்வாறான அறிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான செய்திகள் காரணமாக நாடு முழுவதும் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரதமர் கூறினார்.

அதற்காக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி அனைத்து அரச ஊழியர்களும் உழைக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.

https://athavannews.com/2022/1270592

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது – காமினி லொக்குகே

எரிபொருள் நெருக்கடி இன்னும் சில நாட்களில் தீர்வு – காமினி லொகுகே

நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் மற்றும் பெற்றோல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆகவே எரிபொருள் நெருக்கடி இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே உறுதியளித்தார்.

இதேவேளை எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சுற்றுலாத் துறை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பொதுமக்கள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காணமுடிந்தது.

https://athavannews.com/2022/1270642

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

எரிபொருள் இருப்பு நான்கு நாட்களுக்கு மட்டுமே இருக்கின்றது என தவறான செய்திகள் பரவுவதாக தெரிவித்த அவர், நாட்டில் எவ்வித எரிபொருள் நெருக்கடியும் இல்லை என கூறினார்.

ஆளைப்பார்த்தால் நினைவுக்கோளாறு போல் தெரிகிறது. அமைச்சரே பயந்து மூடிக்கொண்டு போகிறார். இவரோ அப்படி ஒன்றுமே இல்லை என்கிறார். நான் சொல்லேலை; கேட்டால் கஜானா காலி என்று சொல்லக்கூடாது கஜானாவின் திறப்பை காணேல்லை என்றுதான் சொல்லணும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் இலங்கையில் இருந்து எழுதும் யாழ் உறவுகள் சொல்வது பொய்யாகி விடுமே???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அப்படியானால் இலங்கையில் இருந்து எழுதும் யாழ் உறவுகள் சொல்வது பொய்யாகி விடுமே???

அப்படி  என்றால் இவர்கள் சொல்வது எல்லாம் உண்மையென்றாகுமோ? ஐ. நா. வில் கூறுவது உட்ப்பட. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

அப்படி  என்றால் இவர்கள் சொல்வது எல்லாம் உண்மையென்றாகுமோ? ஐ. நா. வில் கூறுவது உட்ப்பட. 

பொதுமக்களது கருத்துக்கும் அரசின் கருத்துக்கும் உள்ள வேறுபாட்டை காண்பிக்க எழுதினேன் ஐயா 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

பொதுமக்களது கருத்துக்கும் அரசின் கருத்துக்கும் உள்ள வேறுபாட்டை காண்பிக்க எழுதினேன் ஐயா 

 அரசியல் வாதிகள் சொல்வதையும் கவனியுங்கள், கூடுதல் வாக்கு எந்தச் செய்தியில் சேருகிறது?

மாத்தையாவின் முகத்தை, கண்ணைப் பார்த்தால் அவர் சுய நினைவில் இல்லைபோல் தெரிகிறது. ஆகவே இவர் சொல்வது நாளைக்கு மாறலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.