Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதுங்கு குழிகளில் உணவும் தண்ணீரும் இல்லாமல் தவித்தோம் – உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதுங்கு குழிகளில் உணவும் தண்ணீரும் இல்லாமல் தவித்தோம் – உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் தகவல்

March 6, 2022
spacer.png
sumyuniv.jpg

க்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், பதுங்கு குழிகளில் உணவும் தண்ணீரும் இல்லாமல் தவித்ததாகவும், அங்கிருந்து தப்பிக்க பூஜ்ஜிய வெப்பநிலையில் நடந்ததாகவும் கூறியுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் நூர் ஹாசன், “நான் இந்தியாவைச் சேர்ந்த 50 மாணவர்களுடன் இணைந்து, ருமேனிய எல்லையை அடைய மார்ச் 1 ஆம் தேதி கிவ் நகரில் உள்ள எனது கல்லூரியில் இருந்து பஸ்ஸை வாடகைக்கு எடுத்தோம். உக்ரேனிய இராணுவத்தின் பல சோதனைகளுக்குப் பிறகே நாங்கள் எல்லையை அடைந்தோம்” என்று தன் துயர் பயணத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

“மூன்று நாட்களாக, நாங்கள் எங்கள் மருத்துவக் கல்லூரியில் ஒரு பதுங்கு குழியில் பதுங்கி இருந்தோம். உணவும் தண்ணீரும் இல்லாமல் இருந்தோம். தொடர்ந்து குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. நேரம் ஆகிக்கொண்டே இருப்பதால், நாங்களாகவே ஒரு பேருந்தை அமைத்துக்கொண்டு உக்ரைன்-ரோமானிய எல்லைக்கு புறப்பட்டோம். உக்ரைன் ராணுவத்தால் அங்கு பல மணிநேரம் காக்க வைக்கப்பட்டோம்” என்று அவர் கூறியுள்ளார்.

மாணவர்கள் எல்லையைத் தாண்டிய பிறகு, இந்தியத் தூதரகம் ருமேனிய அரசாங்கத்தின் உதவியுடன், அவர்களை டெல்லிக்கு அழைத்து வந்துள்ளது.

அலிபுர்துவார் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவர் கௌரவ் பானிக் பேசுகையில், “எனது சொந்த ஊருக்கு வந்த பிறகுதான் எனக்கு நிம்மதி வந்தது. ஆனால், அங்கு சிக்கித் தவிக்கும் மற்றவர்களின் பாதுகாப்பு குறித்து கவலையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

கார்கிவ் நகரில் உள்ள நேஷனல் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் பயிலும் ஐந்தாம் ஆண்டு மாணவர் பானிக், பயண ஆவணங்கள் எல்லாம் இருந்தும், உக்ரைன்-போலந்து எல்லையை கடக்க பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

“ஒரு பயங்கரமான நிகழ்வு ஒன்றை சொல்கிறேன். முதியவர்கள் மற்றும் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான உக்ரேனிய குடும்பங்கள், வெளிநாட்டினருடன் சேர்ந்து எல்லையை கடக்க முயன்றனர். வரிசையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வரிசையில் நிற்கும் மக்களை ஒழுங்குப்படுத்த உக்ரேனிய பாதுகாப்புப் படைகள் வானத்தை நோக்கி சுட்டு, மக்களை பயங்கொள்ள வைத்தனர். இதேபோல அடிக்கடி செய்தனர். விமானத்தில் ஏறிய பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Source: PTI

 

https://www.aransei.com/news/bengal-students-from-ukraine-spent-three-days-at-bunker-without-food-water/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.