Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போன சிறிலங்கா": வோசிங்ரன் போஸ்ட் ஏடு சாடல்

Featured Replies

"சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போன சிறிலங்கா": வோசிங்ரன் போஸ்ட் ஏடு சாடல்

சிறிலங்காவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது என்று அமெரிக்காவின் வோசிங்ரன் போஸ்ட் சாடியுள்ளது.

சிறிலங்கா நிலைமைகள் தொடர்பாக வோசிங்ரன் போஸ்ட் இதழில் எழுதப்பட்டுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்:

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் கடந்த ஏப்ரல் 7 ஆம் நாள் ஒரு கடைக்குச் சென்ற சிலர் குற்றப் புலனாய்வுத் திணைகளத்திலிருந்து வந்துள்ள காவல்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். இலங்கை தமிழ்ச் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த கடையின் உரிமையாளரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு தம்மோடு வருமாறு கூறி ஒரு வானில் ஏற்றினர். ஆனால் அவர் கடத்தப்பட்டுவிட்டார். 5 இலட்சம் டொலர் கப்பப் பணம் கோரப்படுகிறது. அச்சுறுத்தல்களும் பேச்சுகளும் இரண்டு மாதங்கள் நீடிக்கின்றன. 20 ஆயிரம் டொலர் பணம் தரவில்லையால் அந்த உரிமையாளரின் மகனையும் கடத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் கடத்தப்பட்டவரின் மகள் முறைப்பாடு செய்தார். ஆனால் புதிய அச்சுறுத்தல்கள் அவருக்கு விடுக்கப்பட்டன. ஆனாலும் அதிகாரிகள் எதுவித வெளிப்படையான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

சிறிலங்காவில் நடைபெறும் கடத்தலில் இது ஒரு நிகழ்வு. நீதிக்குப் புறம்பான படுகொலைகள், காணாமல் போதல்கள், தடுத்து என்பன கடந்த ஆண்டு முழுவதும் சிறிலங்காவில் நிகழ்ந்து சட்டத்தின் ஆட்சி நொறுங்கியும் உள்நாட்டு யுத்தம் அதிகரித்தும் உள்ளது.

தனிநாடு கோரும் தமிழினப் போராளிகளுடன் பெரும்பான்மை சிங்கள அரசாங்கம் போரிட்டுக் கொண்டிருக்கிறது.

கடத்தப்பட்ட மற்றவர்களைப் போல்தான் கடை உரிமையாளரின் குடும்பத்தினரது பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. கடத்திச் சென்றோர் உண்மையான காவல்துறை அதிகாரிகளா அல்லது போலிகளா என்பது அந்தக் குடும்பத்தினருக்குத் தெரியவில்லை. ஆனால் எந்த ஒரு விளக்கமும் தற்போதைய சூழ்நிலையில் உண்மையாகத் தோன்றுகிற போலியானதாக இருக்கும்.

2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தமானது பிரதானமாக காகிதலில் உள்ள போதும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.

1983 ஆம் ஆண்டிலிருந்து இருதரப்பினருமே தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக அனைத்துலகப் பார்வையாளர்கள் தெரிவித்துளனர்.

"போராளிகளின் இராணுவமானது தொடர்ச்சியாக அரச இராணுவம் மற்றும் சிங்களப் பொதுமக்கள் மீதும் திட்டமிட்ட வகையில் ஆத்திரமூட்டக் கூடிய தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் பலவந்தமாக இளைஞர்களையும் சிறார்களையும் படையணிகளில் சேர்ப்பதாக" பிரசெல்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக நெருக்கடி நிலைக்குழு எனும் அமைப்பின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், "பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள், காணாமல் போகச் செய்தல் ஆகியவற்றை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்துவதாகவும்" அந்த அமைப்பு கூறியுள்ளது.

கொழும்பிலும் இராணுவத்தின் இறுக்கமான பாதுகாப்பு நிறைந்த பிரச்சினைக்குரிய வடக்கு - கிழக்கு பகுதிகளிலும் பொதுவாக அறவிடுதல், கடத்தல்கள் உள்ளிட்டவைகளில் அரசாங்கத்தின் மீது மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

கடத்தல்கள் தொடர்பாக அரசாங்கத்தின் தொடக்க நிலை பதில்கள் வேறானதாக இருந்தது. பிரதான அரசியல் கட்சிகள் இதனை அரசியல் இலாபங்களுக்காக மிகைப்படுத்துகின்றன. "வர்த்தகர்கள் வெளிநாடுகளுக்கு இரகசியமாகச் செல்கின்றனர். தங்களது மனைவிமார்களை விட்டு அவர்கள் விரும்பியவாறு இரகசியமான இடத்தில் உல்லாசமாக இருந்துவிட்டு வருகின்றனர்" என்றும் ஒரு அரசியல்வாதி கூறினார்.

ஆனால் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அதிகாரிகளின் தூண்டுதலில் இக்கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோரின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறினார். அதனைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னாள் மற்றும் இந்நாள் இராணுவத்தினர், காவல்துறையினரைக் கைது செய்து விசாரணைகளை நடத்தியது.

சிறிலங்கா அரசாங்கப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல நேர்காணல் ஒன்றில், "கடத்தல்களும் அறவிடுதல்களும் சிறிலங்காவுக்குப் புதிது அல்ல. 1980-களில் தென்னிலங்கை வன்முறைகளின் போதும் இருந்தன" என்று கூறியுள்ளார். மேலும் "அரசாங்கமும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் இந்த விடயத்தை பாரதூரமானதாகக் கருதி ஜூன் 18 ஆம் நாள் நடவடிக்கை மேற்கொண்டனர்" என்று ஜூலை 10 ஆம் நாள் நேர்காணலில் கேகலிய தெரிவித்துள்ளார். அத்துடன் "ஒரே ஒரு கடத்தல் சம்பவத்தில் மட்டும்தான் அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்" என்றும் அவர் கூறினார்.

ஆனால் பல கடத்தல் சம்பவங்களில், காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்வதற்கு அச்சப்படுவதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.

133 கடத்தல் சம்பவங்கள் மற்றும் அதனை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்த ஆவணத்தை மக்கள் கண்காணிப்பு ஆணையத்தின் மனோ கணேசன் வெளியிட்டுள்ளார். "உண்மையான குற்றவாளிகள்- பெரிய மீன்கள்- அவர்கள் தண்டிக்கப்படவில்லை" என்கிறார் மனோ கணேசன். "மகிந்த அரசாங்கமானது மனித உரிமை நிலைகளைக் கண்காணிக்க குழுக்களையும் ஆணையங்களையும் அமைக்கிறது. ஆனால் எதுவித கள நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை" என்றும் அவர் கூறினார்.

தொடர்ச்சியான வலியுறுத்தல்களின் பின்னர், 16 மிக முக்கியமான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை ஆணையத்தை அரசாங்கம் அமைத்துள்ளது. அக்சன் ஃபார்ம் என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை முதல் வழக்காக அது எடுத்துள்ளது.

ஆனால் சம்பவங்கள் தொடர்கின்றன.

அண்மையில் கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருந்த தமிழர்களால் பாதுகாப்புக்கு ஆபத்து என்று கூறி அரசாங்கத்தால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் சர்ச்சைக்குள்ளானது. பின்னர் சிறிலங்காவின் நீதிமன்றமானது அதனை நிறுத்த உத்தரவிட்டது.

தமிழர்கள் மட்டும் அடிப்படை உரிமைகளை இழக்கவில்லை எனினும் அவர்கள் குறிப்பாக காயப்படுத்தப்பட்டுள்ளன.

வஜிர தர்மசேன என்ற சிங்கள தாதி ஒருவர் வவுனியா பிரதான மருத்துவமனையில் பணியாற்றுகிறார். வடக்கில் பெரும்பான்மைத் தமிழர்கள் வசிக்கும் நகரம் அது. வவுனியாவில் உள்ள சிங்களக் குடியேற்றப் பகுதியான மாமடுவவில் அவர் வசித்து வருகிறார். போராளிகளாகிய தமிழ்ப் புலிகளால் தாங்கள் தாக்கப்படக்கூடும் என்ற அச்சம் இருப்பதாக அவர் கூறுகிறார்.

"வவுனியாவுக்கும் எமது கிராமத்துக்கும் இடையேயான பேரூந்தில் பயணிப்பதை நாம் தவிர்க்க முயற்சிக்கிறோம். ஏனெனில் அந்தப் பேரூந்து இலக்கு வைக்கப்படக் கூடும் என்பதால்தன். நாங்கள் அச்சத்துடன் வாழ்கிறோம். முன்னரங்க நிலைகளையொட்டி வாழும் மக்கள் இரவு நேரங்களில் நகரப் பகுதிக்கு வந்து விடுகின்றனர். பாடசாலை சிறார்களால் படிக்க இயலவில்லை" என்றும் அந்த சிங்களத் தாதி தெரிவித்தார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து 11 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கடந்த மாதத்தின் இறுதியில் அனைத்துலக ஊடக கண்காணிப்பு குழு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

"ஊடகவியலாளர்களின் மீதான தாக்குதல்களும் படுகொலைகளும் இன்னமும் தீர்க்கப்படவில்லை. ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகியிரு

மட்டக்களப்பை சேர்ந்த சிங்கள ஊரில் வேலை செய்யும் ஓரு முஸ்லீம் CID பொலீஸ் அதிகாரி ஒருவரிடன் எனது உறவினர் ஒருவர் தேவை ஒண்றுக்காக நாடி இருந்தார்... மனம் வெறுத்து போய் இருந்த அதிகாரி போனவரிடம் சொன்னாராம் ...

"இலங்கையிலை வாழுறது எண்டா புலிகளின் கட்டுப்பாட்டுக்கை வாழுறதுதான் நல்லம்.. முன்னர் எல்லாம் அரசாங்கதிடம் மட்டும்தான் அதிகாரம் இருந்தது.. இப்ப எல்லாரும் கையில்லை வச்சிருக்கிறார்கள்... புலிகள் பகுதீக்கை மட்டும்தான் அதிகாரம் ஒருதரப்பிடம் இருக்கிறது... "

இதுதான் இப்போதைய ஜதார்த்தம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கு தேவையெண்டா எவரிட்டையும் உதவி கேக்கலாம், சரிதானே தல அண்னே :angry:

நமக்கு தேவையெண்டா எவரிட்டையும் உதவி கேக்கலாம், சரிதானே தல அண்னே :angry:

பிள்ளை கிணத்துக்கை விழுந்து தத்தளிக்கும் போது நீங்கள் நீச்சல் தெரிஞ்சவையிட்ட காசு கொடுத்தாவது உதவி கேக்காமை எதிரியா நண்பனா எண்டுதான் பாப்பீங்கள் போல...!! உங்களை கட்டுறவர் பாவம்...!

ஆதி விடாமல் துரத்திறது போல இருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.