Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை - இந்தியாவிற்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் குறியீடாக இந்திய கடற்படை கப்பல்களின் விஜயம் அமைந்துள்ளது - இந்திய உயர்ஸ்தானிகராலயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை - இந்தியாவிற்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் குறியீடாக இந்திய கடற்படை கப்பல்களின் விஜயம் அமைந்துள்ளது - இந்திய உயர்ஸ்தானிகராலயம்

(செய்திப்பிரிவு)

இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கைக்கு அமைவாக இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் மிகவும் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ஒன்றிணைவு ஆகியவற்றின் குறியீடாக இந்திய கடற்படை கப்பல்களின் விஜயம் அமைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

நட்புறவு பாலங்களை கட்டியெழுப்பும் இந்திய கடற்படையின் பெரு முயற்சியின் தொடர்ச்சியாக கடந்த 10 - 19 ஆம் திகதி வரையில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 5 பாய்மரக்கப்பல்கள் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தன. 

சுதேசிய முறையிலான இப்பாய்மரக்கப்பல்களில் மாதே, தரிணி, புள்புல், கடல்புறா மற்றும் ஹரியால் உள்ளிட்டவை அடங்குகின்றன. 

இலங்கை கடற்படைக்கு சமுத்திரத்தில் பாய்மரக்கப்பலோட்டும் பயிற்சிகள் மற்றும் அனுபவங்களை வழங்கும் நோக்குடன் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுகிறது.

1__1_.jpeg

கடந்த 10 - 13 ஆம் திகதி வரையான காலப்பகுதிகளில் இக்கப்பல்கள் திருகோணமலையில் தரித்து நின்றதுடன் இலங்கை கடற்படையின் இரு பெண் அதிகாரிகள் உட்பட 14 அதிகாரிகள் கொழும்பில் கப்பலோட்ட பயிற்சிகளுக்காக இணைந்துள்ளனர். 

அத்துடன் கப்பல்கள் துறைமுகத்தில் தரித்து நிற்கும் நிலையில் இந்திய கடற்படை அதிகாரி ஒருவரால் இலங்கை கடற்படையினருக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

இந்திய கடற்படை பாய்மரக்கப்பல் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியான கொமொடோர் பி.ஆர்.சிங் திருகோணமலையில் கிழக்கு பிராந்திய கடற்படை தலைமை அதிகாரி ரியல் அட்மிரல் ஜெயந்த குலரட்னே மற்றும் கொழும்பில் மேற்கு பிராந்திய கடற்படையின் பிரதி தலைமை அதிகாரி ரியல் அட்மிரல் ஏ.யூ.சி. டீ சில்வா ஆகியோரை இவ்விஜயத்தின் போது சந்தித்திருந்தார். 

இந்திய கடற்படையினரால் வழங்கப்படும் பாய்மரக்கப்பல் பயிற்சிகள், இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு சாகச விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கான  ஆர்வத்தை தூண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

2__1_.jpeg

2010ஆம் ஆண்டில் கொமாண்டர் திலீப் தொண்டே ஐஎன்எஸ்வி.மாதே கப்பலில் தனியாளாக உலகை சுற்றிவந்த நிலையில், 2012ஆம் ஆண்டில் லெப்டினன்ட் கமாண்டர் அபிலாஷ் டோமியால் இடை நிறுத்தப்படாத தனி பயணம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளப்பட வேண்டும். 

மேலும் நாவிகா சாகர் பரிக்கிரமா திட்டத்தின் (ஆறு பெண் அதிகாரிகளைக் கொண்ட குழு) ஒரு பகுதியாக  2019 ஆம் ஆண்டில் ஐ.என்.எஸ்.வி தரிணி கப்பல் வெற்றிகரமாக உலகை சுற்றி வந்திருந்தது.

இந்நிலையில் இலங்கை கடற் படையினர் மத்தியில் சாகச விளையாட்டுக்கள் மற்றும் பாய்மரக்கப்பலோட்டல் குறித்த ஆர்வத்தினை மேம்படுத்துவதற்கான ஆதரவினை வழங்கும் முகமாக இந்திய கடற்படையின் மேற்கு பிராந்திய கடற்படை தலைமை அதிகாரி ரியல் அட்மிரல் சமீர் சக்சேனா சுதேசிய முறையில் சொந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட பாய்மரக்கப்பலோட்டல் பொறித்தொகுதியை இலங்கை கடற்படையின் பொது நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் ரியல் அட்மிரல் பி எஸ் மகாவிதானவிடம் கடந்த 12 ஆம் திகதி ஐஎன் எஸ் சென்னை கப்பலில் இடம்பெற்றிருந்த நிகழ்வொன்றில் கையளித்திருந்தார்.

இரண்டு கடற்படையினருக்கும் இடையில் அண்மைய காலங்களில் காணப்படும் நெருக்கமான ஈடுபாடுகள், மிகவும் ஆழமாக வேரூன்றி காணப்படும் நட்புறவுக்கு மேலும் வலுவூட்டியிருக்கும் அதேவேளை இடையறாத இயங்கு திறனையும் உருவாக்கியுள்ளது. 

இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கைக்கு அமைவாக இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் மிகவும் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ஒன்றிணைவு ஆகியவற்றின் குறியீடாக இந்திய கடற்படை கப்பல்களின் விஜயம் அமைகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
 

https://www.virakesari.lk/article/124444

 

  • கருத்துக்கள உறவுகள்

பாய்மரக் கப்பலில் போய் ஹிந்தியா எவரோடு போர் புரியப் போகிறது. சும்மா பொழுதுபோக்கிற்கு வந்த இடத்தில் கதை அளக்கிறார்கள்.. அவ்வளவே. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கையோடு அரிசி ,பருப்பு, பால் மா கொண்டு வந்து கையளித்து இருந்தால் வாழ்த்தி இருப்பினம்..

வெறும் படம் காட்டல் ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.