Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் அதே அபத்தம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அதே அபத்தம்!

[ உதயன் ] - [ Jஉல் 29, 2007 04:00 GMT ]

வரலாற்றுச் சக்கரம் மீளச் சுழலத் தொடங்கியிருப்பதாகத் தோன்றுகின்றது. கிழக்கை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து முற்றாக விடுவித்து விட்டதாக அறிவித்திருக்கும் அரசு அங்கு மாகாண சபைத் தேர்தலையும் தமிழ்ப் பிரதேசங்களில் நடத்தப்படாமல் எஞ்சியிருக்கும் ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களையும் நடத்தத் தயாராகி வருவதாகவும் அறிவித்திருக்கின்றது.

1987இல் செய்யப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து, அதற்கு அமையக் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையின் கீழ் 1988 இல் முதலாவது மாகாண சபைத் தேர்தல்கள் நாடு முழுவதிலும் நடத்தப்பட்டன. இலங்கை இந்திய ஒப்பந்தம் வலியுறுத்திய ஏற்பாடுகளுக்கு அமைய தமிழர் தாயகமான வடக்கும் கிழக்கும் முதல் தடவையாகவும், சரித்திரத்தில் ஒரே தடவையா கவும் இணைந்த நிலையில் மாகாண சபைத் தேர்தலைச் சந்தித்தன. அதன்பின்னர், தென்னிலங்கை பல மாகாண சபைத் தேர்தல்களைச் சந்தித்துவிட்டது. ஆனால், வடக்கு, கிழக்கில் மீண்டும் மாகாண சபைத் தேர்தல் சாத்தியப்படவேயில்லை.

இப்போது, சுமார் இருபது ஆண்டுகள் கழித்து, தமிழர் தாயகத்தை சட்டரீதியாகவும், நீதித்துறைத் தீர்ப்பு வாயிலாகவும் வடக்கு கிழக்கு என இரண்டு மாகாணங்களாகத் துண்டித்து, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சத்தையே நிராகரித்துக் குப்பைக் கூடையில் தூக்கிக்எறிந்துவிட்டு, கிழக்கு மாகாண சபைக்குத் தனியான தேர்தலை நடத்தத் தயாராகி வருகின்றது கொழும்பு அரசு.

பல்லாயிரக் கணக்கில் இந்தியப் படைகள் ஈழத் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிற்க, முதலாவது மாகாண சபைத் தேர்தல் என்ற அபத்த நாடகம் இங்கு அரங்கேறியது. அப் போது நடந்தது என்னவென்பதை கொழும்பு ஒரு தடவை சீர்தூக்கிக் கவனத்தில் கொள்ளுமாயின் மீண்டும் ஒருமுறை இந்த அபத்தமான காரியத்தில் இறங்கும் பரீட்சையில் அது குதிக்கமாட்டாது என்பது திண்ணம்.

அந்த மாகாண சபைத் தேர்தல் நடந்தபோது முழு ஆயுத வளத்தோடும், இராணுவப் பலத்தோடும் பல்லாயிரம் இந் தியப் படைகள் வடக்கு கிழக்கு எங்கும் உறுதியாக நிலை கொண்டிருந்தன. விடுதலைப் புலிகள் வன்னிக் காடு களில் மறைந்து ஒளிந்து நிலைகொண்டிருந்தனர். வடக்கு கிழக்கில் எந்தப் பிரதேசமும் அவர்களின் நிர்வாகக் கட் டுப்பாட்டில் எனத் தனியாக இருக்கவில்லை.

ஆனால், வலுவான இந்தியப் படைகளின் பின்புலத் தில் தூக்கி நிறுத்தப்பட்ட வரதராஜப் பெருமாளின் அந்த மாகாண சபையால் உருப்படியாக ஏதும் செய்ய முடிந்ததா? நிர்வாகத்தைத் தன்னும் நடத்த இயலுமாக இருந்ததா? இந்தியப் படைகளின் சீருடைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இருந்துவிட்டு, ஒரு தலைப்பட்சமாக "சுதந்திர ஈழம்' என்ற பிரகடனத்தைக் கேலிக்கூத்தாக விடுத்து விட்டு, நாட்டை விட்டு ஓடித் தப்பவே அதனால் முடிந்தது.

புலிகளிடம் தனியாக ஒரு நிர்வாகக் கட்டமைப்புப் பிரதேசம் இல்லாதபோது புலிகளை அடக்கி, ஒடுக்கி ஒரு தலைமறைவு கெரில்லா இயக்கமாக அலையவிட்ட சமயத்தில் கூட மிகப் பலமான இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் உருவாக்கப்பட்ட பாதுகாப்புக் கவ சத்தை வைத்துக் கொண்டிருந்தும் கூட அந்த மாகாண சபை நிர்வாகம் புஸ்வாணம் ஆகிப்போனது. அந்தப் பட் டறிவை மறந்து மீண்டும் அதே தடத்தைத் தனது அரசி யல் காய் நகர்த்தல்களுக்கான தந்திரமாகக் கையில் எடுக் கிறது மஹிந்த அரசு.

அப்போது 1988இல் முதலாவது மாகாண சபைத் தேர்தல் நடக்க முன்னர் தமிழர் தாயகம் முழுவதுமே இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ், இராணுவ ஆட்சி முறைக்குள் அடக்கப்பட்டிருந்தமை மறக்கப்படக் கூடியது அல்ல.

அத்தகைய அதே நிலைமையே இப்போது, கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு கொழும்பு அரசு தயாராகும் சமயத்திலும் கிழக்கிலும் நிலவுகின்றது. "கிழக்கில் மக்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள் ளன.

தகவல்கள், கருத்துக்களை மக்கள் சுதந்திரமாக வெளியிடமுடியாத வகையில் இராணுவ இறுக்கம் அவர் கள் மீது நெறிக்கப்பட்டிருக்கின்றது. அரச சார்பற்ற நிறு வனங்களின் செயற்பாடுகள் மீது கிழக்கில் கட்டளைத் தளபதி பராக்கிரம பன்னிப்பிட்டிய இராணுவக் கெடுபிடிக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றார். வாகரை மீள்குடி யேற்ற நடவடிக்கை முற்றும் முழுதாக இராணுவத்தினா லேயே கையாளப்படுகின்றது. கொக்கட்டிச்சோலை, போரதீவு போன்ற பகுதிகளில் முழு நிர்வாகமுமே இராணு வத்தின் கைகளில்தான்.

ஆக, கிழக்கில் சிவில் நிர்வாகச் செயற்பாடுகள் இராணுவ மயப்படுத்தப்படுகின்றன.' என்று சுயாதீன வட்டாரங்கள் ஏற்கனவே அம்பலப்படுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. ஆக, இந்திய அமைதிப்படை தமிழர் தாயகத்தின் மீது திணித்த மாகாண நிர்வாகம் போன்ற அபத்தம் ஒன்றை சுமார் இருபது ஆண்டுகள் கழித்து கிழக்கு மக்கள் மீது அதே பின்புலத்தோடு சுமத்த மஹிந்தரின் அரசு தயாராகின்றது.

கிழக்கிலிருந்து புலிகளை விரட்டி, கிழக்கை முற்றாக விடுவித்து விட்டதாக உறுதிப்பாடு கொண்டுள்ள அரசு, அதன் காரணமாகத் தனது மாகாண நிர்வாகம் என்ற நாட கம் அங்கு செம்மையாக அரங்கேறும் அவியும் என்று நம்புகின்றது போலும். சீர்குலைந்து, வன்னிக் காட்டுக்குள் தடுமாறிக் கொண் டிருந்த சமயமே அப்போதைய வடக்கு, கிழக்கு மாகாண நிர்வாகத்தைத் தடுமாறித் தள்ளாட வைத்த புலிகளுக்கு, உத்தேச கிழக்கு மாகாண சபையும் அதன் நிர்வாகமும் எப் படியிருக்கும் என்பதை எவரும் ஊகிக்க முடியும்.

""கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் அரசியல் தந்திரோபாயக் காய் நகர்த்தலில் மஹிந்த அரசு இறங்கி னால், அதனால் விபரீத விளைவுகள் ஏற்படும்'' என்று புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரை யன் குறிப்பிட்டமையை எச்சரித்தமையை இந்தப் பின் னணியில்தான் நோக்கவேண்டும்.

http://www.tamilcanadian.com/news/tamil/in...ews&id=1489

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஞாயிறு கிழமையெண்டா எழுதிர பேப்பர்காரருக்கு கொண்டாட்டம்தான் B)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.