Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை அரசு - தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பேச்சுவார்த்தைகளை இந்தியா வரவேற்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உயர் தூதுவராலயம்
கொழும்பு

ஊடக அறிக்கை

இலங்கை அரசு - தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பேச்சுவார்த்தைகளை இந்தியா வரவேற்கிறது !

1. இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர், நா.உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவை இன்று சந்தித்தார். 

2. இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான மார்ச் 25 சந்திப்புக் குறித்து, த.தே.கூட்டமைப்புப் பிரதிநிதிகள் அமைச்சர் ஜெய்சங்கருக்குப் பேச்சுவார்த்தை குறித்த இறுதி நிலைமைகள் பற்றி விளக்கினர். அரசியல் கைதிகளின் விடுதலை, காணிப் பாவனை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துதல், புலம்பெயர்ந்தோர் முதலீடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டதாக, அவர்கள் இந்திய அயலுறவுத் துறை அமைச்சருக்குத் தெரிவித்தனர்.

3. முன்னதாக, இந்திய அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை ஜனாதிபதியை சந்தித்தபோதும் த.தே.கூட்டமைப்புடனான  இலங்கை அரசின் சந்திப்புக் குறித்த விடயம் வந்திருந்தது .  பின்னர் மாலையில் அமைச்சர்  ஜி.எல்.பீரிஸிடம் இருந்து, இந்த விடயம் தொடர்பாக விரிவான விளக்கத்தை அமைச்சர் ஜெய்சங்கர் பெற்றிருந்தார்.

4. இந்த அனைத்துத் தொடர்பாடல்களிலும் இலங்கை அரசாங்கம்-த.தே.கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில் உள்ள விடயங்கள் தொடர்பான முன்னேற்றங்களை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றுள்ளார். ஒன்றுபட்ட இலங்கையின் கட்டமைப்பிற்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான இலங்கைத் தமிழர்களின் அவாக்களை நிறைவேற்றுவதற்கு இந்திய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

5. வடக்கு - கிழக்கின் பொருளாதார மீட்சிக்கான இந்தியாவின்  பங்களிப்பு, நடைபெற்ற அனைத்துக் கூட்டங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. யாழ் கலாசார நிலையத்தின் இணையவழித் திறப்பு விழாவை இலங்கையின் பிரதமருடன் இணைந்து நடத்தியதன் திருப்தியை அமைச்சர் ஜெய்சங்கர் வெளிப்படுத்தினார். 

6. அமைச்சர் ஜெய்சங்கர் இன்னொரு சந்திப்பை மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் மேற்கொண்டிருந்தார். மீனவர்கள் பிரச்சினைகள் குறித்தும், அதிகாரப்பகிர்வு குறித்தும் கருத்துகளை அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.


கொழும்பு
28 மார்ச் 2022

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Sasi_varnam said:

 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துதல், புலம்பெயர்ந்தோர் முதலீடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டதாக, அவர்கள் இந்திய அயலுறவுத் துறை அமைச்சருக்குத் தெரிவித்தனர்.

13’வது திருத்த சட்டத்தை வலியுறுத்தி,
999’வது தடவையாக… இந்திய அரசுக்கு, கூட்டமைப்பு தெரிவித்தது.

ஒன்றில்…. அவங்களுக்கு காது கேளாமல் இருக்க வேணும்,
அல்லது கூத்தமைப்புக்கு… என்ன மொழியில் சொல்வது என்று தெரியாமல் இருக்க வேணும்.
இரண்டு பேரும் சேர்ந்து…. எங்களை, பைத்தியக்காரங்கள் என்று நினைக்கிறார்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் - இந்திய வெளிவிவகார அமைச்சர் கூட்டமைப்பிடம் தெரிவிப்பு

(ஆர்.யசி)

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டாம், ஆனால் 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் என இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.

No description available.

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் திங்கட்கிழமை (28) பிற்பகல் தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். 

பிற்பகல் 4.30 மணிக்கு கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

சுமார் அரைமணிநேரம் இடம்பெற்ற சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சளார் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூட்டமைப்பின் சார்பில்  கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயங்களில் தாம் கூடிய அக்கறை செலுத்துவதாகவும், அதேபோல் அரசியல் அமைப்பு உருவாக்கம் தவிர்ந்து, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விடயங்களில் உண்மையை கண்டறிதல், வடக்கு கிழக்கு பகுதிகளில் காணி விடுவிப்பு மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்தும் அரச தரப்புடன் பேசியதாகவும் இது குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தியதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் எம்.பி ஆகியோர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதேபோல் 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும், ஆனால் நீண்ட காலமாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் மீறப்பட்டு வருவதாகவும் சம்பந்தன் அவர்கள் எடுத்துக்கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களை  பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு வழங்கிய கடிதம் தொடர்பில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் எனவும், அதற்கு பதில் தெரிவிக்க வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து எம்மத்தியிலும் நம்பிக்கை இல்லை எனவும், ஆனால் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், ஒரு சில அரசியல் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படலாம் எனவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்துகொண்ட இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர், திங்கட்கிழமை காலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவை சந்தித்த வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து ஜனாதிபதி முழுமையாக தெளிவுபடுத்தியதாக சம்பந்தன் தரப்பிடம் தெரிவித்ததுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இப்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு நகர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் கூடிய நம்பிக்கை வைக்க வேண்டாம் எனவும், புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கும் இல்லையெனவும், 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தெரிவித்ததாக தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி வீரகேசரிக்கு தெரிவித்தார். 

அதேபோல் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்திலும் சில மாற்றங்கள் ஏற்படும் என்பது தமக்கும் தெரிவதாக கூறியுள்ள வெளிவிவகாரத்துறை அமைச்சர், தமிழர் தரப்பு இந்தியாவிற்கு அனுப்பிய கடிதம் குறித்து கேட்டறிந்துகொண்ட போதிலும் அதற்கு பதில் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/124892

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.