Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாகம் செய்த இந்திய அமைதிப் படையினரைக் கெளரவிக்க சிறீலங்கா அரசு தவறிவிட்டது - கல்கத்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 29-07-2007 23:38 மணி தமிழீழம் [மயூரன்]

தியாகம் செய்த இந்திய அமைதிப் படையினரைக் கெளரவிக்க சிறீலங்கா அரசு தவறிவிட்டது - கல்கத்

இலங்கையின் இறைமையை பாதுகாக்கும் நோக்கில் இந்திய அமைதிப்படை வீரர்கள் தமது உயிர்களை தியாகம் செய்துள்ள போதிலும் ஸ்ரீலங்கா அரசும் மக்களும் இந்திய அமைதிப்படையின் தியாகங்களை கௌரவிக்க தவறிவிட்டதாக இந்திய அமைதிப் படையின் தபதியாக பதவி வகித்த ஓய்வு பெற்ற லெப்ரினற் ஜென்ரல் கல்கத் விசனம் தெரிவித்துள்ளார்.

1987 முதல் 1990 வரையான காலப்பகுதியில் இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையின் இறைமையை பாதுகாப்பதற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த போராடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது நாட்டின் இறைமைக்காக போராடிய அயல் நாட்டு படையினரின் தியாகங்களை கௌரவிக்கும் நினைவு தூபி ஒன்றைக் கூட ஸ்ரீலங்கா அரசாங்கம் இதவரை அமைக்காதமை கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்டு இன்றுடன் 20 ஆண்டகள் பூர்த்தி அடைந்துள்ளது.

இது குறித்து வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு கருத்துரைக்கும் போது ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்

இந்தியாவில் கூட இலங்கையில் போராடி உயிரிழந்த வீரர்களை நினைவு கூரும் நினைவுத் தூபிகள் எவையும் அமைக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய அமைதிப்படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களின் போது ஏறத்தாள 1200 படையினர் வரை பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 29-07-2007 23:38 மணி தமிழீழம் [மயூரன்]

தியாகம் செய்த இந்திய அமைதிப் படையினரைக் கெளரவிக்க சிறீலங்கா அரசு தவறிவிட்டது - கல்கத்

1987 முதல் 1990 வரையான காலப்பகுதியில் இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையின் இறைமையை பாதுகாப்பதற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த போராடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியவின் இறைமையினைப் பாதுகாப்பதற்காக என்று வர வேண்டும். உண்மையில் அமைதி காக்க வந்திருந்தால் ஈழத்தமிழர்கள் நிச்சயம் இந்திய அமைதிப்படைக்கு கெளரவித்திருந்திருப்பார்கள

தியாகம் செய்தவையோ வாயில கெட்டவார்த்தைதான் வரும்

இந்திய படைகள் தியாகம் செய்தவையோ...??? சொந்த நலனுக்காக ஈழத்துக்கு அனுப்பி கொலை செய்து போட்டு கதையை பாருங்கோ.... இந்திய தலைவர்களே அமைதி படையை மதிக்க இல்லை.... இதுக்கை இலங்கை அரசாங்கம் மதிக்க வேணுமாம்... உவை சிங்களவனுக்கு சேவகம் செய்ய வந்த அடிமைகள் தானே.... சிங்களவன் அடிமைகளை மதிக்கிறது இல்லை என்பதை மட்டும் உவர் புரிந்து கொண்டால் நல்லது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிரிழந்த இந்திய அமைதிப் படையினருக்கு

நினைவுச் சின்னம் எழுப்பப்படாதது ஏன்?

இந்திய லெப். ஜெனரல் கல்கட் கேள்வி

இரு தசாப்தங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற சண்டையில், மரணித்த இந்திய வீரர்களுக்கு இலங்கை அரசு ஞாபகார்த்த சின்னம் அமைக்கவில்லையே என இந்தியா மனக்கிலேசமடையலாம். அதேவேளை, அவர்களுக்கு இந்தியாவில் ஏன் ஞாபகார்த்த சின்னம் எழுப்பப்படவில்லை?

இந்தச் சண்டையில், இந்தியப் படைகளை வழிநடத்தி வந்த லெப்டினன்ட் ஜெனரல் கல்கட் இந்தக் கேள்விக் கணையைத் தொடுத்துள்ளார்.

லெப். ஜெனரல் கல்கட் "இயான்ஸ்' செய்தி நிறுவனத்துக்குத் தாம் அளித்துள்ள பேட்டியில்,

""இது விடயத்தில் கொழும்பின் வித்தியாசமான போக்கு, உயிர்நீத்த இந்திய வீரர்களின் குடும்பங்கள் மத்தியில் மன வேதனையைத் தோற்றுவித்துள்ளது.'' என சுட்டிக்காட்டியுள்ளார்.

""இந்த வீரர்கள் இலங்கையின் இறையாண்மைக்காக உயிர்நீத்தவர்கள். இவர்களுக்கென ஒரு நினைவுச் சின்னத்தை இலங்கை உருவாக்கவில்லை. இது எமது வீரர்களையும், அவர்தம் குடும்பங்களையும் ஆழ்ந்த கவலைக்குள் ஆழ்த்தியுள்ளது.'' என்றும் அவர் கூறியுள்ளார்.

1987ஆம் ஆண்டு ஜூலையில் கைச்சாத்தான இந்தியஇலங்கை உடன்படிக்கையின் 20ஆம் வருட நிறைவையொட்டி, லெப். ஜெனரல் கல்கட், தமது இல்லத்தில் வைத்து இப்பேட்டியை அளித்தார்.

""இந்தியாவைப் பொறுத்த மட்டில் என்ன? இந்த வீரர்கள் இந்தியக் கொடியின் கீழ் இலங்கையில் போரிட்டவர்கள். போரில் உயிர்நீத்த தீரமிக்க வீரர்களைக் கௌரவிக்க இந்திய மண்ணிலும் நினைவுச் சின்னம் எழுப்பப்படவில்லை. இது குறித்து நான் கவலையடைகிறேன்.'' என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இந்தியத் தலையீடு, நிதி ரீதியாகவும், மனித சக்தி ரீதியாகவும் எத்தகைய பெறுமதிக்குரியது என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

""அது பெறுமதிக்குரியதோ? இல்லையோ? அது பூகோள அரசியல் விவரண அட்டை மூலமாக எடைபோட வேண்டிய விடயம்.'' என்றார்.

""இந்திய அமைதி காக்கும் படை திரட்சியான வெற்றியை ஈட்ட அனுமதிக்கப்படவில்லை. 1989 டிசம்பரில் வி.பி. சிங்கின் அரசு பதவி ஏற்றது. அது அமைதிப் படை மீளப்பெறப்பட வேண்டுமென்ற உறுதிப்பாட்டிலேயே நிலைத்து நின்றது. இதனால் இது சாத்தியப்படவில்லை.

""இதேவேளை, 1987 ஆம் வருடத்திய உடன்படிக்கையையும், இலங்கையின் தமிழர்களுக்கான உத்தேச அதிகார பகிர்ந்தளிப்பையும் பிரமதாசஅடியோடு வெறுத்து வந்தார். அத்துடன் கடும் ஆட்சேபனை கிளப்பியும் வந்தார். அவர் "குரோத' மனப்பான்மை கொண்ட ஜனாதிபதி.'' என்றும் கல்கட் விவரித்துள்ளார்.

""வடக்குக் கிழக்கில் தமிழ் மாகாணம் இருப்பதை பிரேமதாஸ விரும்பவில்லை. வடக்குக் கிழக்கில் ஒரு தமிழ் முதல் அமைச்சர் உறுதிப்பாட்டோடும், ஸ்திரப்பாட்டோடும் இருந்து விடக்கூடாது என்பதிலேயே அவர் கருத்தாக இருந்தார்.

அவசர கோலத்தில் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களும், வெடிமருந்துகளும் வழங்குமாறு தம் அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டார். அச்சமயம் புலிகளின் செயற்பாடு பெருமளவில் குறைக்கப்பட்டிருந்தது.'' என்றும் கல்கட் குறிப்பிட்டார்.

""அச்சமயத்தில்தான் இனப்பிரச்சினையை இந்திய இராணுவத்தால் சரியாகப் புரிந்துகொள்ள முடிந்தது. இப்பிரச்சினை பல்லாயிரக் கணக்கானோரை பலிகொடுத்துள்ளது. இரத்தக் களரி இன்னும் தொடர்கிறது.'' என்றும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளைப் பற்றி கல்கட் குறிப்பிடுகையில்,

""எதிர்க்க முடியாத அர்ப்பணிப்போடு கூடிய முழுமையான தொழில் அமைப்பிலான போராளிகள் அமைப்பே விடுதலைப்புலிகள் இயக்கம். இதில் சந்தேகமில்லை.'' என்றார்.

1987இன் பிற்பகுதியில், யாழ்ப்பாணத்தை இந்திய இராணுவம் கைப்பற்றியபோது, கல்கட் மேற்பார்வை அதிகாரியாக இருந்தார். பின்னர் 1988 ஜனவரி முதல் 1990 மார்ச் வரை, அமைதிப் படையின் தளபதியாக இருந்தார்.

http://www.sudaroli.com/pages/news/today/10.htm

விடுதலைப் புலிகளைப் பற்றி கல்கட் குறிப்பிடுகையில்,

""எதிர்க்க முடியாத அர்ப்பணிப்போடு கூடிய முழுமையான தொழில் அமைப்பிலான போராளிகள் அமைப்பே விடுதலைப்புலிகள் இயக்கம். இதில் சந்தேகமில்லை.'' என்றார்.

பட்டு தெளிந்தவர் கூறுகின்றார் சிமார் 17 வருடத்துக்கு முன்னால் இனியும் திருந்தமாட்டம் என இருக்கும் இலங்கை படைகள் இதை வாசித்தார்களா.விக்கிரமாதித்

எதை தியாகம் என கூறிகின்றார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.