Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீன அபாயத்தைத் தடுக்க சிங்களருக்கு ஆயுதமா? தமிழரைக் கொன்று குவிக்கத் துணைபோகாதீர்! --பழ.நெடுமாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீன அபாயத்தைத் தடுக்க சிங்களருக்கு ஆயுதமா?

தமிழரைக் கொன்று குவிக்கத் துணைபோகாதீர்!

-பழ.நெடுமாறன்

இந்திய அரசில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சர்கள் இருவர் இலங்கை இனப்பிரச்சினை குறித்துத் தெரிவித்த கருத்துக்கள் அப்பிரச்சினையின் உண்மையான வடிவத்தினை அவர்கள் முற்றிலுமாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சரான ஏ.கே. அந்தோணி தில்லியில் நடைபெற்ற முப்படைத் தளபதிகளின் மாநாட்டினைத் தொடங்கி வைக்கும்போது (19-06-07) பின்வருமாறு கூறினார்:

"விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு கேட்கும் அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். அதே வேளையில் இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வைவிட அரசியல் ரீதியான தீர்வு ஏற்படவேண்டும் என்பதே இந்தியாவின் கருத்தாக உள்ளது." என்று கூறியுள்ளார்."

இதற்கு இரண்டு நாட்கள் கழித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான பிரணாப்முகர்ஜி சிங்கப்பூரில் 21-06-07 அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது பின்வருமாறு அறிவித்தார்:

"வன்முறையை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். விடுதலைப் புலிகளை ஆதரிக்க முடியாது உலகில் எந்தப் பகுதி யிலும் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு உதவிசெய்வதை இந்தியா கடுமையாக எதிர்த்து வருகிறது. இலங்கை அரசுக்கு தன்னுடைய ஆட்சி எல்லையைப் பாதுகாக்கும் உரிமை உண்டு. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காணவேண்டும்."

மூத்த அமைச்சர்களான இவர்கள் இருவரின் பேச்சின் மூலம் அண்டை நாடான இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பதையே இவர்கள் புரிந்துகொள்ள வில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண வேண்டும் என்று கூறுகிற இவர்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள அரசுக்கு இராணுவ உதவி அளிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள். ஒரு தரப்புக்கு இராணுவ ரீதியிலான உதவியை அளிப்பதன் மூலம் போர் தொடர்ந்து நடத்தப்படுவதற்கு இந்தியா உதவி செய்யுமானால் சமாதானப் பேச்சுவார்த்தை எப்படி நடைபெறும்?

இந்திய அரசின் இந்தத் தடுமாற்றத்தினைத் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ள சிங்கள அரசு இந்தியாவை மிரட்டி தனது நோக்கத்திற்கு இசைய வைத்திருக்கிறது. இந்தியா ஆயுத உதவி செய்யாவிட்டால் சீனாவிடமும், பாகிஸ்தானிடமும் ஆயுத உதவி பெறுவோம் என பகிரங்கமாக மிரட்டுகிறது. இந்த மிரட்டலுக்கு இந்திய அரசு பணிந்து தேவையான ஆயுத உதவிகளை அளிப்பதாகக் கூறியுள்ளது.

சிங்கள அரசு சீனாவிடம் அல்லது பாகிஸ்தானிடம் ஆயுதஉதவி பெறுவது தனது பாதுகாப்பு நலன்களுக்கு உகந்தது அல்ல என இந்தியா கருதுமானால் அதற்கு வழி சிங்கள அரசுக்கு ஆயுதங்களை அள்ளிக்கொடுத்து அதைத் தன்வசப்படுத்த முயற்சிப்பது அல்ல. மாறாக வேறு நாடுகளிடம் சிங்கள அரசு ஆயுத உதவி பெறுமானால், அது இந்தியாவுக்கு எதிரான செயலாகக் கருதப்படும் என எச்சரிப்பது ஒன்றே வழியாகும்.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் காலத்தில் திரிகோணமலையில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைப்பதற்கான முயற்சியில் ரகசியமாக ஜெயவர்த்தனா ஈடுபட்டபோது அவருக்கும் அமெரிக்காவிற்கும் இந்திரா காந்தி கடும் எச்சரிக்கை விடுத்தார்.

"இந்துமாக் கடல் பகுதியில் எந்த அந்நிய வல்லரசின் இராணுவத் தளமும் அமைக்கப்படுவது இந்தியாவுக்கு எதிரான செயலாகக் கருதப்படும் என அவர் எச்சரித்தார். இதன் விளைவாக அமெரிக்கக் கடல் தளம் அமைக்கும் முயற்சி முளை யிலேயே கிள்ளி எறியப்பட்டது. இந்திரா காந்தி அவர்கள் உயிரோடு இருந்த காலம் வரை எந்த அந்நிய வல்லரசும் இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவி அளிக்கத் துணிய வில்லை. சிங்கள அரசும் இந்தியாவைத் தவிர்த்த வேறு எந்த நாட்டிடமும் ஆயுத உதவி பெற அஞ்சியது. ஆனால் இந்திரா காந்தியின் மறைவிற்குப் பிறகு பிரதமர் ராஜீவ் காலத்திலிருந்து சிங்கள அரசுகளின் போக்கு மாறத்தொடங்கியது.

இந்தியாவை மிரட்டி பணிய வைக்கும் முயற்சி தொடர்ந்து செய்யப் பட்டது. இலங்கை இனப்பிரச்சினை குறித்த ராஜீவ் காந்தியின் அணுகுமுறை படுதோல்வி அடைந்தது. இராஜீவ்-ஜெயவர்த்தனா உடன்பாடு இந்திய வரலாற்றில் என்றும் அழியாத களங்கத்தை ஏற்படுத்தியது.

ஆசியா-ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு உலக அரங்கில் தனக்கென தனியான மதிப்பினைப் பெற்றிருந்த இந்தியா, குறிப்பாக நடுநிலை நாடுகளுக்குத் தலைமை தாங்கும் தகுதியைப் பெற்றிருந்த இந்தியா, ராஜீவ்காந்தியின் காலத்தில் முதன்முறையாக அண்டை நாட்டில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு இந்தியப் படையை அனுப்பி என்றும் மாறாத பழியைச் சுமந்தது.

ராஜீவ்காந்தியின் இந்த அடாத செயல் அவருடைய பாட்டனார் ஜவஹர்லால் நேருவுக்கும், தாயார் இந்திரா காந்திக்கும் அவமதிப்பைத் தேடித் தந்தது. இராஜீவ்காந்தியின் படுதோல்வி அடைந்த இந்த வெளிநாட்டுக்கொள்கையை இந்திய அரசு இன்னமும் தொடர்ந்து கடைப்பிடிப்பது அறிவுக்கு உகந்த ஒன்றோ நாட்டு நலனுக்கு ஏற்றதோ அல்ல.

இந்தியாவின் மூத்த அமைச்சர்கள் இருவர் பேசியுள்ள பேச்சுக்கள் அவர்கள் இன்னமும் இராஜீவ் காந்தியின் பாதையிலேயே போக விரும்புகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த முயற்சியில் ராஜீவ் காந்தி அடைந்த தோல்வியை இவர்களும் அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சிங்கள இனவெறிக்கு மார்க்சிய முலாம்

இலங்கைக் குடியரசுத் தலைவராக இருக்கும் ராஜபக்சே சிங்களப் பேரினவாதத்தின் ஒட்டுமொத்தமான பிரதிநிதியாக குறிப்பாக ஜே.வி.பி. இயக்கத்தின் துணையுடன் பதவி நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். ஜே.வி.பி. எத்தகைய கட்சி? சிங்களப் பேரினவாதத்திற்கு மார்க்சிய முலாம் பூசிக்கொண்டுள்ள ஒரு அமைப்பாகும். ஈழத்தமிழர்களுக்கு எதிரான அமைப்பு மட்டுமல்ல, இந்தியாவுக்கு எதிரான அமைப்புமாகும்.

1970களின் முற்பகுதியில் சீன ஆதரவு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்களாக அவர்கள் தோன்றினாலும் பச்சை சிங்கள இனவாதத்தில் ஊறித்திளைத்த கட்சியாகத் திகழ்ந்தது. ஜே.வி.பி.யின் வழிகாட்டி எஸ்.டபுள்யு.ஆர். பண்டாரநாயகாதான். சிங்களப் பேரினவாதத்தை அடிப்படையாக வைத்து தனிச் சிங்களச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்து சிங்கள மக்களிடையே இனவெறித் தீயை மூட்டி அதில் குளிர்காய்ந்தவர் பண்டாரநாயகா.

பண்டாரநாயகாவின் இனவாதம் சிங்கள மக்களிடையே பெற்ற பேராதரவைக் கண்ட ஜே.வி.பி. இயக்கம் சிங்களத் தேசிய இனவாதத்தைத் தன் கையில் எடுத்தது.

சிங்கள சமூகத்தில் நிலவிய சமூக முரண்பாட்டிற்கும், பொருளாதார பிரச்சினைகளுக்கும் தீர்வாக தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையைத்தான் இவர்கள் தங்களுடைய நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். மேலும் பண்டாரநாயகா-சேனநாயகா என்ற இரு குடும்ப பாரம்பரியங்களுக்கு எதிராக இந்திய எதிர்ப்புக் கோணத்தில் நின்று இனவாதத்தைப் பயன்படுத்திய கட்சி ஜே.வி.பி. கட்சியாகும்.

1971ல் ஜே.வி.பி. ஆயுதம் தாங்கிய போராட்டத்தைத் தொடங்கியபோது இந்தியாவின் இராணுவ உதவியைப் பெற்று அக்கிளர்ச்சியை சிங்கள அரசு ஒடுக்கியது. இந்தியாவின் இந்தச் செயலை ஜே.வி.பி. ஒருபோதும் மறக்கவில்லை. இன்னமும் இந்தியாவுக்கு எதிரான கடும்போக்கையே அது கொண்டுள்ளது.

சீன அரசுக்கும்-இராசபக்சே அரசுக்கும் இடையே சுமூகமான உறவு ஏற்பட ஜே.வி.பி. தலைமையே காரணமாகும். இந்த உறவுக்கான பாலமாக ஜே.வி.பி. திகழ்ந்து வருகிறது.

இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் மேற்கண்ட உண்மைகளை ஒருபோதும் எண்ணிப்பார்க்கவில்லை. மாறாக இராசபக்சே தில்லிக்கு வந்தபோது அவருடன் வந்த ஜே.வி.பி. அமைச்சரையும் சந்தித்துப் பேச இந்தியப் பிரதமரும் பிற அமைச்சர்களும் தயங்கவில்லை. ஆனால் அதே வேளையில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர் களைச் சந்திக்க இந்தியப் பிரதமர் தயங்கினார் என்பது அண்மைக்கால உண்மையாகும்.

இலங்கையில் சீனா கால் ஊன்று வதைத் தடுக்க வேண்டும் என இந்தியா விரும்புமானால் அதற்கு வழி சிங்கள அரசைத் திருப்திசெய்யும் கொள்கை அல்ல. சீனாவிட மிருந்தோ அல்லது பாகிஸ்தானிடமோ ஆயுத உதவி பெறுவது என்பது இந்தியாவின் நலன் களுக்கு எதிரானது என்று சிங்கள அரசை இந்திய அரசு எச்சரிக்க வேண்டும். மறைந்த பிரதமர் இந்திரா காந்திக்கு இருந்த மன உறுதி. இப்போதைய பிரதமருக்கும் இருக்க வேண்டும்.

தன்னுடைய எச்சரிக்கைக்குப் பணிய சிங்கள அரசு மறுக்குமானால் கீழ்க்கண்ட உறுதியான நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும்.

1. இந்திய துறைமுகங்கள், விமான நிலையங்கள் வழியாக இலங்கைக்கு ஆயுதங்கள் ஏந்திச் செல்லும் கப்பல்கள், விமானங்கள் ஆகியவற்றுக்குத் தடைவிதித்தல்.

2. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எந்தப் பொருளும் அனுப்புவதற்கும், இலங்கையிலிருந்து எந்தப் பொருளையும் இறக்குமதி செய்வதற்கும் தடைவிதிக்க வேண்டும்.

3. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதுள்ள தடையை உடனடியாக இந்திய அரசு விலக்கிக்கொள்ளவேண்டும்.

4. விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி இலங்கை இனப்பிரச்சி னைக்கு சுமூகமான தீர்வு காண்பதற்கு கால நிர்ணயம் செய்து இந்திய அரசு சிங்கள அரசுக்குக் கடிதம் அனுப்ப வேண்டும்.

5. அய்.நா. பேரவை, காமன்வெல்த் நாடுகள் அமைப்பு, நடுநிலை நாடுகள் அமைப்பு போன்ற அனைத்து நாடுகள் அமைப்புகளில் ஈழத்தமிழர் பிரச்சினையை எழுப்பி ஆதரவு திரட்ட இந்தியா முற்படவேண்டும்.

-தென் செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.