Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக நிலைமைகளும் இலங்கைத் தமிழ்ப் பிரச்சினையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா அயல்நாடு எனும் வகையில் தனது பிரசன்னத்தை ஆழமாகவே பதிக்க வேண்டிய தேவைகள் ஏற்பட்டமையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் பலன்களும் இலங்கையின் தமிழர் உரிமைப் போராட்டத்தினை மிக மிக ஆழமாகவேம் பாதித்துள்ளன என்பதை மறுக்கவோ, மறக்கவோ முடியாது. அண்மைக்கால வரலாற்றில் 1987 இல் இலங்கை - இந்திய இணைவு ஆவணம் உண்மையில் அதன் பின் வந்துள்ள அரசியற் போக்குகளை தீர்மானித்துள்ளது. அதன் மிகப்பெரிய சாதனைகளிலொன்று வடக்கு - கிழக்கை ஒரு அலகாகக் கொண்டமையாகும். இதனோடு, இணைந்த முக்கியத்துவமுடையது தமிழை இலங்கையின் தேசிய மொழிகளிலொன்றாக பிரகடனப்படுத்தியமை.

இந்த இணைவு ஆவணத்துக்கு பிரேமதாஸ உட்பட பல சிங்கள அரசியல்வாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் அடியாகவே சமாதானக்காப்புப் படை இலங்கை வந்தது.

நிலைமைகள் பெரிதும் மாறி இறுதியில் மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலையில் ராஜீவ்காந்தி சிறிபெதும்பூரில் கொலை செய்யப்பட்டார். ஏறத்தாழ நிலை முற்றிலும் மாறுபட்டுவிட்டது. இந்த செயல் ஓட்டங்களின் பலாபலனாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமாக மாறிற்று.

இந்த சம்பவங்கள் முதல் இந்தியாவின் புதுடில்லி அரச மையம் இலங்கைப் பிரச்சினையை குறிப்பாக, இலங்கைத் தமிழர் பிரச்சினையை மிகவும் மாறுபட்ட முறைமையில் ஆனால், உன்னிப்பாக கவனிக்க தொடங்குகின்றது.

சிறிய அளவிலான நாடுகளால் விளங்கிக் கொள்ள முடியாத ஓர் உண்மை என்னவெனில், பெரிய - முக்கியமான நாடுகளின் உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் முகம் தெரிய வெளியே நிற்கும் அரசியல்வாதிகளால் மாத்திரமல்லாமல் திரைக்கு பின்னர் நின்று தொழிற்படும் அவ்வந்நாட்டின் நலப்பேணுகைக் குழுக்களேயாகும். உதாரணமாக இதனை British interests (பிரித்தானிய நலன்/நலன்கள்) Indian interests(இந்திய நலன்/நலன்கள்) எனக் கூறுவர். இந்த நலப் பேணுத்துறைகளில் அரசியல்வாதிகளுக்கு அதிக இடமிருப்பதில்லை. வெளிநாட்டலுவல்கள், பாதுகாப்பு போன்ற துறைகள் இதிலே முக்கியம் பெறும். இதன் பொறுப்பாளர்கள் பெரும்பாலும் இதனையே தொழிலாக கொண்டவர்களாயிருப்பார்கள். இவர்கள் மீது அரசியல்வாதிகளின் செல்வாக்கிருக்கலாம். ஆனால், அரசியல்வாதிகளால் பெரிதாக எதையும் செய்துவிட முடியாது.

உண்மையில், பிரித்தானிய பேரரசின் கீழ் இந்தியா இருந்தபொழுது இது நிறுவனமாக வளர்த்தெடுக்கப்பட்டது. இவர்கள் கண்களில் இலங்கைத் தமிழர் பிரச்சினையென்பது ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல விடயங்களை சமநிலைப்படுத்திப் பார்ப்பதாகும்.

இந்தச் சமநிலை பேணுகையில் இன்று(உண்மையில் என்றென்றுமே)பிரச்சினையாகயிர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.