Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தவின் நிகழ்ச்சி நிரல் தமிழின அழிப்புத்தான்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் நிகழ்ச்சி நிரல் தமிழின அழிப்புத்தான்

நாய்களின் விடயத்தில் தாம் பௌத்த தர்மத்தைக் கடைப்பிடிப்பதாக காட்டும் மகிந்தரின் ஆட்சியில், தமிழர்களின் உயிர்கள் நாயிலும் கேவலமாகிவிட்டது. தமிழர்களைக் கொள்வதற்காக தன்னினத்தின் உயிர்களையும் பலி கொடுக்க மகிந்த தயாராகவே உள்ளார்.

கொலைகள் இன்றேல் ஆட்சி இல்லை என்ற தற்போது நிலையே நாட்டில் நிலவுகிறது. மகிந்தர் அணியைப் பொறுத்தவரை தமிழின அழிப்பே முதன்மையானதாக இருக்கின்றது.

இலங்கையில் மாறி மாறி ஆட்சிப்பீடத்தில் இருந்த அரசுளும், சிங்களத் தலைவர்களும் செய்ததையே மகிந்தரும் செய்தாலும், மகிந்தர் இப்போது முன்னணி வகிக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

ஏனைய ஆட்சியாளர்கள் உலகை ஏமாற்றும் விதத்தில் தமிழருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கப் போவதாகவும், தமிழர்களுக்கு இங்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றும் உலகிற்கு காட்டமுனைந்தனர். அத்துடன் படுகொலைகள் வெளிச்சத்திற்கு வரும்போது, மன்னிப்பு கேட்பதற்கும், தவறுதலாக நடந்து விட்டது என்று கூறுவதற்கும், சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறுவதற்கும் தயங்கவில்லை.

ஆனால் படுகொலைகளை செய்வோர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பது வேறு விடயம். ஆனால், மகிந்தவும், அவரது சகோதரர்களும் இவ்விடயத்தில் சற்று வெளிப்படையாக நடக்கின்றனர் என்றே கூற வேண்டும். படுகொலைகளைப் புரிவது தேசத்தைப் பாதுகாப்பதற்கு உதவும் எனவும், தமிழர்கள் பயங்கரவாதத்திற்கு துணைபோனால் இதுதான் தண்டனை எனவும் மகிந்தவின் சகோதரரும் அவர்களது அமைச்சர்களும் நேரடியாகவே கூறி வருகின்றனர்.

இது தமிழினப் படுகொலை விடயத்தில் மகிந்த அரசு வெளிப்படையாகவே செயற்படுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. அத்துடன் மகிந்தர் தான் சிங்கள மக்களிற்கு மட்டுமே தலைவன் என்பதை கொழும்பில் இருந்து தமிழர்களை வெளியேற்றியதன் மூலம் நிறுவியிருக்கிறார்.

உலக நாடுகளின் அழுத்தங்களுக்கோ மனித உரிமை உரிமைகள் அமைப்புகளின் அழுத்தங்களுக்கோ மகிந்தவும் அவரது கூட்டத்தினரும் மசிந்ததும் இல்லை, இனிமசியப் போவதும் இல்லை என்பதையே அவரின் நகர்வுகள் வெளிப்படுத்தி வருகின்றன.

மகிந்தரைப் பொறுத்தவரை அவரின் ஒரே தெரிவு விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற பெயரில் தமிழினத்தை அழிப்பதாகும். ஆனால் மகிந்தரைவிட ரணில் தனது ஆட்சியில் சற்று வித்தியாசமாக சிந்தித்தார்.

அதாவது விடுதலைப் புலிகளுடன் சமாதானம் என்ற நாடகத்தை ஆடிக்கொண்டு காலத்தை இழுத்தடித்து புலிகளுக்குள் பிளவுகளை உருவாக்கி விடுவதும், புலிகளின் தலைமையுடன் முரண்படாமல் தனது ஆட்சிக்காலத்தை இழுத்தடிப்பதுமே அதுவாகும்.

அத்துடன் சர்வதேச வலைப்பின்னல் ஒன்றை ஏற்படுத்தி புலிகளை வழிக்கு கொண்டு வரலாம் எனவும் அவர் சிந்தித்தார். இதற்கும் மேலாக விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைமையின் காலத்தை இழுத்தடித்து கடத்திவிட்டால், பின்னர் தமிழர்களை கையாள்வது சுலபம் என்ற

வகையிலும் ஒரு நீண்டகாலத் திட்டத்தை ரணில் வைத்திருந்தார்.

ரணில் விக்கிரமசிங்க நேரடியாகவே சிங்கள ஊடகவியலாளர் ஒருவரிடம் இதனைக்கூறியிருந்தார். ஆனால் ரணிலின் சிந்தனைகள் எண்ணங்கள் எல்லாம் பிழைத்துப் போனமை வேறு விடயம்.

ரணிலைப் பொறுத்தவரை தமிழர் விடயத்தில் முதுகில் குத்தும் பேர்வழியாகவே இருந்தார். ஆனால் மகிந்தர் நேரடியாக நெஞ்சில் குத்தும் பேர்வழி. இந்த நிலையில் மகிந்தரின் நகர்வுகளும் செயற்பாடுகளும் தமிழருக்கு நேரடியாகவே பலவற்றை உணர்த்திவருகின்றமை சாதகமானது என்றெ சொல்லலாம்.

இறுதியாக குடும்பிமலை வெற்றி விழா தெற்கில் கொண்டாடப் பட்டமை கூட தமிழருக்கு சாதகமானது என்றே சொல்லலாம். ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது போர் தொடுத்து வெற்றி பெறும் போதுதான் இத்தகைய வெற்றிவிழாக்களை கொண்டாடப்படுவது வழமை.

இந்த வெற்றி விழாவும் இத்தீவில் இரு நாடுகள் இருப்பதையே எடுத்துக் காட்டுகிறது. ஒன்று தமிழீழம், இன்னொன்று சிறீலங்கா. தமிழீழத்தின் ஒரு பகுதியை சிறீலங்கா ஆக்கிரமித்து வெற்றி

விழாக் கொண்டாடியபோது கொழும்பில் உள்ள முக்கிய நாடுகளின் தூதுவர்கள் விழாவை புறக்கணித்தனர்.

இது மகிந்தரின் அணுகுமுறையை சர்வதேசம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுவதாகவே தோன்றுகின்றது. இந்த நிலையில் இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் இறுதியாக கூடியபோது கூட பேச்சுவார்த்தை மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி இருந்தன.

இந்த மாநாட்டில் அரசின் தீர்வு யோசனை சமஷ்டியை நோக்கியதாக அமைய வேண்டும் எனவும் நியாயமான தீர்வை அரசு முன்வைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. ஆனால், சர்வதேச நாடுகளின் எதிர்பார்ப்புக்கு மாறாக, குறிப்பாக இணைத்தலைமை நாடுகளின் எதிர்பார்ப்புக்கு மாறாக சிறீலங்கா அரசு தனது அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறது.

சிறீலங்கா அரசால் நியமிக்கப்பட்ட தீர்வுக்குழுவின் யோசனை மாவட்ட சபைக்குரிய அதிகாரங்களை மட்டுமே கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிறீலங்கா அரசிற்கு ஆயுத உதவிகளை அளிக்கிற நாடுகள் கூட அரசிடம் இருந்து ஒரு நீதியான தீர்வு கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றன.

அமெரிக்கா போன்ற நாடுகள் அரசு சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை முன்வைத்தால் அந்த தீர்வு யோசனையை ஏற்குமாறு விடுதலைப் புலிகளிற்கு அழுத்தம் கொடுக்கலாம் என எதிர்பார்த்தன.

இந்த நிலையில் அரசின் நகர்வுகளில் அதிருப்தி கொண்டுள்ள இணைத்தலைமை நாடுகள் இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் முனைப்புடன் செயற்படுவதில்லை எனவும், சிறீலங்கா அரசாங்கம் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடாக இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளை முன்வைக்கும் வரை இவ்விவகாரத்தில் தலையிடாப் போக்கை கையாள்வது எனவும் தீர்மானித்துள்ளன.

அண்மையில் சிறீலங்கா அரசால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான அனைத்துலக உதவிகளை பெறுவதற்கு சிறீலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ள போதும், இணைத்தலைமை நாடுகள் இத்திட்டத்திற்கு இன்னும் பச்சைக் கொடி காட்டவில்லை.

இது இவ்வாறு இருக்க, அரசில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளுடன் கண்டியில் கூட்டம் ஒன்றை நடத்திய சிறீலங்கா சனாதிபதி, இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறைத் தீர்வு காண்பது என்ற போக்கிற்கே இடமில்லை எனவும், இப்போது நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைக்கு மக்களின் அங்கீகாரம் பெற சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது பற்றி அரசு ஆராய்கிறது எனவும் தெரிவித்ததுடன், நாட்டில் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் தனது நகர்வுகள் இருக்கும் எனவும் சமஷ்டி என்ற பேச்சிற்கே இடமிருக்காது எனவும் திடமாக கூறி உள்ளார்.

அப்படியானால் மகிந்தவின் தெரிவும் தேர்வும் என்னவாக இருக்கும் எனப்பார்த்தால், மகிந்தரின் அடுத்த இலக்கு மடுவை கைப்பற்றி அரசியல் இலாபம் தேடுவதாகும். அத்துடன் வடக்கின் ஏனைய பகுதிகளையும் அபகரித்து தனது தமிழினப் படுகொலைகளையும், தமிழ் இன அழிப்பையும் பெரும் எடுப்பில் முடுக்கி விடுவதாகும்.

ஆனால் மகிந்தரின் எண்ணங்களும் கனவுகளும் பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்த்தால், மகிந்தரின் கணக்கில் உள்ள பல பிழைகளை பின்னர் ஆய்வாளர்கள் ஆய்வு செய்வார்கள்.

ஆனால் மகிந்தரின் ஆட்சியில் இறுதிவரை 5000ற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். 1000ற்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டுள்ளார்கள்.

வரப் போகும் நாட்களில் சிங்கள தேசத்திற்கு பல முனைகளில் அதிர்வுகள் காத்திருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

மகிந்த ராஜபக்சவின் இன அழிப்பிற்கான நிகழ்ச்சி நிரல் அவர் நினைத்ததற்கு மாறாக அமையப் போகின்றதென்பதுதான் உண்மை.

- வே.தவச்செல்வன்

ஈழமுரசு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.