Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பில் மாணவர்கள் போராட்டம்- காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் மாணவர்கள் போராட்டம்- காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீச்சு [திங்கட்கிழமை, 30 யூலை 2007, 16:07 ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்த ராஐரட்டை பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தண்ணீர் பாய்ச்சியும் கலைத்தனர்.

லிப்டன் சுற்றுவடத்தில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் முழக்க பதாகைகளையும் முழக்கமிட்டு தமது ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

பல்கலைக்கழகத்திற்கான போதுமான வளங்கள், விடுதி வசதி ஆகியவற்றைப் பெறுத்தர ராஜரட்டை பல்கலைக்கழக நிர்வாகமோ அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ முன்வரவில்லை என்று கண்டனம் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதனால் நகரப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் சிறிலங்கா காவல்துறையினர் உடனடியாக குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைந்து செல்லும்படி சிறிலங்கா காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினரின் கோரிக்கையை மறுத்த மாணவர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சுமார் 11.30 மணிவரை ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் அதன் பின்னர் லிப்டன் சுற்று வட்டத்திற்கு முன்பாக உள்ள வோட் பிளேஸ் வீதியில் அமைந்திருக்கும் உயர்கல்வி அமைச்சக கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியதும் காவல்துறையின்ருக்கும், மாணவர்களுக்கும் இடையே முறுகல்நிலை ஏற்பட்டது.

முட்கம்பிகளால் ஆன தடுப்பு வேலிகளை வீதிக்கு குறுக்காக போட்ட காவல்துறையினர், மாணவர்கள் மேலும் நகராத வண்ணம் அழுக்குத்தண்ணீரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது பாய்ச்சினர். ஆனால் அதனைப் பொருட்படுத்தாது தொடர்ந்தும் அழுக்குத்தண்ணீருக்கு மத்தியிலும் நின்று மாணவர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சரமாரியான கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.

இந்த சம்பவத்தால் நகரில் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தமது பல்கலைக்கழகத்தில் போதிய வளங்கள் இல்லை என்று கூறி முன்னர் ராஜரட்டை பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு துணைவேந்தரையும், விரிவுரையாளர்கள் சிலரையும் அலுவலகத்திற்குள்ளேயே மாணவர்கள் தடுத்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சொத்துக்கள் சிலவற்றையும் மாணவர்கள் சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 12 மாணவர்களை இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். நீதிமன்றத்தில் அந்த மாணவர்கள் முன்னிலையாக இருந்த நிலையில், ராஐரட்டை பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்

puthinam

  • கருத்துக்கள உறவுகள்

புதினத்தின் மேலதிக இணைப்பிலிருந்து

இன்றைய போராட்டம் குறித்து ராஜரட்டை பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் தனுஸ்க குமாரசிங்க கூறுகையில், எமக்கு விடுதி வசதி இல்லை. விரிவுரையாளர்கள் இல்லை. எமது 45 நாள் போராட்டத்தை அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை. கொழும்பிலிருந்து அனுராதபுரம் மாவட்டத்துக்குச் செல்கிறோம். அடிப்படை வசதிகளின்றியே கல்வி கற்கிறோம். சுத்தமான குடிநீர் கூட கிடையாது. சுத்தமான குடிநீரை விநியோகிக்காவிட்டால் பலரும் சிறுநீர செயலிழப்பினால் இறந்தே போய்விடுவர் என்றார்.

பல்கலைக் கழகங்களை தனியார்மயமாக்க முயற்சி

சிறிலங்காவில் பல்கலைக் கழகங்களை தனியார்மயமாக்க மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முயற்சிப்பதாக பல்கலைக் கழக மாணவர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் துமிந்த நகமுவ குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

தனியார் மயமாக்குவதற்கு ஏதுவாக பல்கலைக் கழகத்துக்கான நிதியில் ஜனவரி மாதம் 20 விழுக்காட்டை குறைத்தனர். அதன் பின்னர் 50 விழுக்காடு குறைக்கப்பட்டது.

வரி வருவாயை சரியாக வசூலிக்காமையால் 389000 மில்லியன் ரூபாய் அரசாங்கத்துக்கு அழைப்பு ஏற்படுகிறது என்று அரசாங்கத்தின் கணக்குத் தணிக்கையாளர்கள் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அதேபோல் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் ஆகியோரினது ஊழல் முறைக்கேட்டினால் 150000 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுவதாக நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை கூறுகிறது.

ஆனால் பல்கலைக் கழகங்களுக்கு வெறும் 7000 மில்லியன் ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.