Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்களில் இருந்து மாறுபடும் புதிய தலைமுறை எண்ணங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 2009 யுத்தம் முடிந்தபின் விடுதலைப்புலிகளை கண்களால் பார்த்தறியாத தலைமுறைகள் மெதுவாக இளைஞர்களாகும் இந்த காலப்பகுதியில் அவர்களின் சிந்தனை எங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது.. இது இதற்கு அடுத்த தலைமுறை இன்னும் சில வருடங்களில் இளைஞர்கள் ஆகும்போது இன்னும் மாற்றமடையப்போகுது.. ஆனால் யாழில் எழுதும் நாம் எல்லாம் பெரும்பாலும் புலிகள் இருந்த காலத்தில் சேமித்த ஞபகங்களை சுமந்து கொண்டு அலைபவர்கள்.. எங்களுக்கு இவை அந்நியமாகப்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல.. ஆனால் வயதாகும்போது ஊரில் மைனராக இருந்தவர்கள் ஒதுங்கி புது  இளைஞர்கள் மைனர்கள் ஆவதுபோல் நாமும் மெல்ல மெல்ல வயதாவதால் ஒதுங்கும் காலமோ எண்டு சிந்திக்க தோன்றுது.. இது இவர் வயதை ஒத்த பெரும்பாலானவர்கள் சிந்தனைகள் எழுத்துக்களை ஒத்து இருப்பதால் ஒரு உதாரணமாக இணைக்கிறேன்..

 

———————//—————-

தேசியக்கொடி மீதான விமர்சனங்கள், சிறுபான்மையினரை மூன்றாம் தரப் பிரஜையாக நடத்துவது குறித்த முறையீடுகள் எல்லாம் சரி தான். ஆனால் இங்கு கேள்வி ஒன்று தான். யாரோ சிலரால் எமக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றது என்பதற்காக இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடையாளத்தை இழக்கப் போகிறோமா? அல்லது இந்த நாட்டின் மீது எமக்கும் உரிமை இருப்பதை வலியுறுத்தப் போகின்றோமா என்பது தான். 

இது என்னுடைய நாடு. நான் பிறந்து வளர்ந்த நாடு. இந்த நாட்டைக் குறித்து நான் பெருமை அடைவதற்கான அதிகாரம் எனக்கு யாரோ ஒருவர் வந்து தரவேண்டியதில்லை. இந்த நாட்டின் தேசியக்கொடி மீது விமர்சனங்கள் இருந்தாலும் அதற்கு உரிய மரியாதையைக் கொடுக்க நான் பின்னிற்கப்போவதில்லை. அதைப் பெருமையாக உயர்த்திப் பிடிப்பது கடமை என்பதை விட என்னுடைய உரிமை என்பதே சாலப் பொருத்தம். 

யாரோ ஒரு சில இனவாதிகள் வந்து "உனக்கு இந்த நாட்டில் உரிமை இல்லை" என்பதற்காக எல்லாம் எனது உரிமையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை. அவர்களையும், அவர்களது சிந்தனையையும் எதிர்ப்பேன். அதற்கான மனத்திடம் என்னிடம் உண்டு. மாறாக ஒரு சில முட்டாள்களுக்காக இந்த நாட்டையும், இனவாதம் இல்லாமல் பழகிய மனிதர்களையும் எதிர்த்து வன்மம் சாதிக்க என்னால் முடியாது. ஒரே இனமாக இருந்தபோதும், பிரதேசவாதம் பேசித் தள்ளிவைத்த தமிழனையும் தெரியும்; "நீ இன்னொரு தாய் வயிற்றில் பிறந்தாலும் என் சகோதரன்" என்று சொன்ன சிங்களவனையும் தெரியும். இனவாதம் என்பது மதவாதம், பிரதேசவாதம், சாதீயம் போன்ற ஒரு குழுமனநிலை தான். அவை எவைவும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

ஆக தேசியக்கொடியைப் Profile pictureல்போட்டு வைத்திருப்பது போன்ற சில்லறைக் காரணங்களுக்காக கேற்றை ஆட்டவேண்டாம். 

https://www.facebook.com/688115846/posts/10159027383970847/?d=n

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்+
On 5/4/2022 at 17:33, பாலபத்ர ஓணாண்டி said:

இலங்கையில் 2009 யுத்தம் முடிந்தபின் விடுதலைப்புலிகளை கண்களால் பார்த்தறியாத தலைமுறைகள் மெதுவாக இளைஞர்களாகும் இந்த காலப்பகுதியில் அவர்களின் சிந்தனை எங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது.. இது இதற்கு அடுத்த தலைமுறை இன்னும் சில வருடங்களில் இளைஞர்கள் ஆகும்போது இன்னும் மாற்றமடையப்போகுது.. ஆனால் யாழில் எழுதும் நாம் எல்லாம் பெரும்பாலும் புலிகள் இருந்த காலத்தில் சேமித்த ஞபகங்களை சுமந்து கொண்டு அலைபவர்கள்.. எங்களுக்கு இவை அந்நியமாகப்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல.. ஆனால் வயதாகும்போது ஊரில் மைனராக இருந்தவர்கள் ஒதுங்கி புது  இளைஞர்கள் மைனர்கள் ஆவதுபோல் நாமும் மெல்ல மெல்ல வயதாவதால் ஒதுங்கும் காலமோ எண்டு சிந்திக்க தோன்றுது.. இது இவர் வயதை ஒத்த பெரும்பாலானவர்கள் சிந்தனைகள் எழுத்துக்களை ஒத்து இருப்பதால் ஒரு உதாரணமாக இணைக்கிறேன்..

 

———————//—————-

தேசியக்கொடி மீதான விமர்சனங்கள், சிறுபான்மையினரை மூன்றாம் தரப் பிரஜையாக நடத்துவது குறித்த முறையீடுகள் எல்லாம் சரி தான். ஆனால் இங்கு கேள்வி ஒன்று தான். யாரோ சிலரால் எமக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றது என்பதற்காக இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடையாளத்தை இழக்கப் போகிறோமா? அல்லது இந்த நாட்டின் மீது எமக்கும் உரிமை இருப்பதை வலியுறுத்தப் போகின்றோமா என்பது தான். 

இது என்னுடைய நாடு. நான் பிறந்து வளர்ந்த நாடு. இந்த நாட்டைக் குறித்து நான் பெருமை அடைவதற்கான அதிகாரம் எனக்கு யாரோ ஒருவர் வந்து தரவேண்டியதில்லை. இந்த நாட்டின் தேசியக்கொடி மீது விமர்சனங்கள் இருந்தாலும் அதற்கு உரிய மரியாதையைக் கொடுக்க நான் பின்னிற்கப்போவதில்லை. அதைப் பெருமையாக உயர்த்திப் பிடிப்பது கடமை என்பதை விட என்னுடைய உரிமை என்பதே சாலப் பொருத்தம். 

யாரோ ஒரு சில இனவாதிகள் வந்து "உனக்கு இந்த நாட்டில் உரிமை இல்லை" என்பதற்காக எல்லாம் எனது உரிமையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை. அவர்களையும், அவர்களது சிந்தனையையும் எதிர்ப்பேன். அதற்கான மனத்திடம் என்னிடம் உண்டு. மாறாக ஒரு சில முட்டாள்களுக்காக இந்த நாட்டையும், இனவாதம் இல்லாமல் பழகிய மனிதர்களையும் எதிர்த்து வன்மம் சாதிக்க என்னால் முடியாது. ஒரே இனமாக இருந்தபோதும், பிரதேசவாதம் பேசித் தள்ளிவைத்த தமிழனையும் தெரியும்; "நீ இன்னொரு தாய் வயிற்றில் பிறந்தாலும் என் சகோதரன்" என்று சொன்ன சிங்களவனையும் தெரியும். இனவாதம் என்பது மதவாதம், பிரதேசவாதம், சாதீயம் போன்ற ஒரு குழுமனநிலை தான். அவை எவைவும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

ஆக தேசியக்கொடியைப் Profile pictureல்போட்டு வைத்திருப்பது போன்ற சில்லறைக் காரணங்களுக்காக கேற்றை ஆட்டவேண்டாம். 

https://www.facebook.com/688115846/posts/10159027383970847/?d=n

 

"பெரும்பாலானோர்" உப்பிடி இல்லை ஐயனே, உந்த வகையறாக்கள் எல்லாம் கொழும்பு மற்றும் இன்னபிற சிங்களப் பகுதிகளில் உண்டாக்கப்பட்டதுகள். உதுகள் ஆயுதவழி விடுதலைப் போர்க்காலத்தில் இருந்தே உப்படித்தான். அதற்காக தமிழீழத்தில் இல்லையென்றில்லை. தாயகப் பகுதிகளிலும் உப்படிப்பட்ட சிலதுகள் இன்னமும் உண்டு.

என்ர தமிழீழ நட்பு வட்டம் எல்லாம் இப்போதும் அதே ஓர்மத்தோடுதான் இருக்கினம் (சிலது தீவுக்குள் உள்ளிருந்தபடியே 'தமிழீழம்' என்று இன்சுராகிராமில் வைத்துள்ளார்கள்). உதெல்லாம் வீட்டில சொல்லிக்கொடுப்பதால் உவ்வாறாகி எழுதுபவையேயொழிய தானாக சிந்தித்து வருபவை அன்று. 

உவங்களில் சிலரின் அப்பன் ஆத்தையெல்லாம் அந்தக் காலத்தில் ஈப்பிநாய்ப்பீ அ சிங்களவர்களின் எடுபிடிகளாக தமிழீழ தேசயெதிர்ப்பு வால்களாக வாழ்ந்ததானதால் சிலர் வஞ்கங்கள், காட்டிக்கொடுப்புகள், தலையாட்டல்கள் போன்ற தேசவஞ்சக குற்றத்திற்காக இலவசமாக கைலாயம் அனுப்பப்பட்டவங்கள். வேறு சிலர் அக்காலம் முதலே 'தமிழீழ எதிர்ப்பு' என பொல்லம்பொத்தப்பட்டதால் தமது தலைமுறைகளுக்கும் அதே நஞ்சையே விதைத்து அவையும் அவ்வாறே வளர்ந்து பிறருக்கும் அவற்றை செலுத்திவிடுகின்றன. வெளிநாடுகளில் வாழும் இதே போன்ற சிலரை நான் இன்சுராகிராமிலும் கண்டுள்ளேன். 

சிலருக்காக எல்லாரும் மாறிட்டினம் என எண்ண வேண்டாம். இவ்வகை உயிரினங்கள் முக்காலத்திலும் வாழும் (எ.கா. யாழ் கருத்துக்களம்). 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2022 at 07:33, பாலபத்ர ஓணாண்டி said:

இலங்கையில் 2009 யுத்தம் முடிந்தபின் விடுதலைப்புலிகளை கண்களால் பார்த்தறியாத தலைமுறைகள் மெதுவாக இளைஞர்களாகும் இந்த காலப்பகுதியில் அவர்களின் சிந்தனை எங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது.. இது இதற்கு அடுத்த தலைமுறை இன்னும் சில வருடங்களில் இளைஞர்கள் ஆகும்போது இன்னும் மாற்றமடையப்போகுது.. ஆனால் யாழில் எழுதும் நாம் எல்லாம் பெரும்பாலும் புலிகள் இருந்த காலத்தில் சேமித்த ஞபகங்களை சுமந்து கொண்டு அலைபவர்கள்.. எங்களுக்கு இவை அந்நியமாகப்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல.. ஆனால் வயதாகும்போது ஊரில் மைனராக இருந்தவர்கள் ஒதுங்கி புது  இளைஞர்கள் மைனர்கள் ஆவதுபோல் நாமும் மெல்ல மெல்ல வயதாவதால் ஒதுங்கும் காலமோ எண்டு சிந்திக்க தோன்றுது.. இது இவர் வயதை ஒத்த பெரும்பாலானவர்கள் சிந்தனைகள் எழுத்துக்களை ஒத்து இருப்பதால் ஒரு உதாரணமாக இணைக்கிறேன்..

 

———————//—————-

தேசியக்கொடி மீதான விமர்சனங்கள், சிறுபான்மையினரை மூன்றாம் தரப் பிரஜையாக நடத்துவது குறித்த முறையீடுகள் எல்லாம் சரி தான். ஆனால் இங்கு கேள்வி ஒன்று தான். யாரோ சிலரால் எமக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றது என்பதற்காக இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடையாளத்தை இழக்கப் போகிறோமா? அல்லது இந்த நாட்டின் மீது எமக்கும் உரிமை இருப்பதை வலியுறுத்தப் போகின்றோமா என்பது தான். 

இது என்னுடைய நாடு. நான் பிறந்து வளர்ந்த நாடு. இந்த நாட்டைக் குறித்து நான் பெருமை அடைவதற்கான அதிகாரம் எனக்கு யாரோ ஒருவர் வந்து தரவேண்டியதில்லை. இந்த நாட்டின் தேசியக்கொடி மீது விமர்சனங்கள் இருந்தாலும் அதற்கு உரிய மரியாதையைக் கொடுக்க நான் பின்னிற்கப்போவதில்லை. அதைப் பெருமையாக உயர்த்திப் பிடிப்பது கடமை என்பதை விட என்னுடைய உரிமை என்பதே சாலப் பொருத்தம். 

யாரோ ஒரு சில இனவாதிகள் வந்து "உனக்கு இந்த நாட்டில் உரிமை இல்லை" என்பதற்காக எல்லாம் எனது உரிமையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை. அவர்களையும், அவர்களது சிந்தனையையும் எதிர்ப்பேன். அதற்கான மனத்திடம் என்னிடம் உண்டு. மாறாக ஒரு சில முட்டாள்களுக்காக இந்த நாட்டையும், இனவாதம் இல்லாமல் பழகிய மனிதர்களையும் எதிர்த்து வன்மம் சாதிக்க என்னால் முடியாது. ஒரே இனமாக இருந்தபோதும், பிரதேசவாதம் பேசித் தள்ளிவைத்த தமிழனையும் தெரியும்; "நீ இன்னொரு தாய் வயிற்றில் பிறந்தாலும் என் சகோதரன்" என்று சொன்ன சிங்களவனையும் தெரியும். இனவாதம் என்பது மதவாதம், பிரதேசவாதம், சாதீயம் போன்ற ஒரு குழுமனநிலை தான். அவை எவைவும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

ஆக தேசியக்கொடியைப் Profile pictureல்போட்டு வைத்திருப்பது போன்ற சில்லறைக் காரணங்களுக்காக கேற்றை ஆட்டவேண்டாம். 

https://www.facebook.com/688115846/posts/10159027383970847/?d=n

83 வைகாசியில் பேராதனை பல்கலைக்கழகம் குழம்பி , ஒன்றாகக் படித்த சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களை அடித்து கேவலப்படுத்திய நேரம் , பாதுகாப்பு இல்லை என்று நாங்கள் இடத்தை காலி பண்ணி வீடு போக ஆயத்தப்படுத்திய நேரம் , அங்கே வந்த எமது சிங்கள நண்பர்கள் எம்மை போக வேண்டாம் என்று தடுத்ததுடன் , எங்களுக்கு எதாவது நடந்தால் அது தங்களின்  உயிரற்ற உடலங்கள் மேல்  தான் சாத்தியமாகும் என்று சொல்லி , அதன் படியே நடந்து எங்களை தாக்க வந்தவர்களிடம் இருந்து எங்களை காத்து நின்றதும் நினைவகலா நிகழ்வுகள்…..

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.