Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புவாக்பிட்டியவில் கடத்தப்பட்ட தமிழ்ப் பொறியாளரின் சடலம் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புவாக்பிட்டியவில் கடத்தப்பட்ட தமிழ்ப் பொறியாளரின் சடலம் மீட்பு

அவிசாவளை புவாக்பிட்டியப் பகுதியில் 5 மில்லியன் ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட தமிழ்ப் பொறியாளரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

விக்னேஸ்வர கடசரனத் மகோதரர் (வயது 27) என்ற தகவல் தொடர்புப் பொறியாளர் கடந்த ஜூலை 15 ஆம் நாள் வெள்ளவத்தையிலிருந்து தன்னுடைய வீட்டுக்குத் திரும்பும்போது காணாமல் போனார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முத்துவலப் பகுதியைச் சேர்ந்த கண்ணா மற்று சீலன் ஆகியோரை கொட்டாஞ்சேனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததாகவும் இருவரும் மகோதரரை கடத்தியதை ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் புவாக்பிட்டிய றப்பர் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த மகோதரரின் சடலம் மீட்கப்பட்டது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்த மகோதரர், வேலை வாய்ப்புக்காக காத்திருந்தார். அவரது தந்தையார் பிரபல பல் மருத்துவர். மகோதரரை விடுவிக்க 5 மில்லியன் ரூபாய் தொகை கேட்டு அடையாளம் தெரியாத நபர்கள் அச்சுறுத்தியுள்ளனர். ஆனால் தங்களால் அவ்வளவு தொகை தர இயலாது என்று மகோதரரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில் முத்துவலவில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் கொட்டாஞ்சேனை காவல் நிலையத்துக்கு அடிக்கடி சென்று வந்தவர் என்றும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டோரில் ஒருவர் வெல்டிங்க் கடை நடத்தி வருவதாகவும் மகோதரரின் வீட்டுக்கதவை சீரமைக்க அந்நபர் சென்றிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இக்கடத்தலில் மேலதிகமானோர் ஈடுபட்டிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புவக்பிட்டியவில் புதைக்கப்பட்ட நிலையில் இனந்தெரியாத இளைஞரின் சடலம் மீட்பு

அவிசாவளை புவக்பிட்டிய இறப்பர் தோட்டப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இனந்தெரியாத இளைஞர் ஒருவரின் சடலத்தை அவிசாவளை பொலிசார் நேற்று மீட்டுள்ளனர்.கொழும்பும் அதனை அண்மித்த பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெறுகின்ற ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிசாரினால் நேற்று கைதுசெய்யப்பட்ட இருவர் வழங்கிய தகவல்களையடுத்தே புவக்பிட்டியவில் புதைக்கப்பட்டிருந்த மேற்படி சடலம் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

புவக்பிட்டிய எலிஸ்ட் இறப்பர் தோட்டத்திலிருந்து கண்,கைகள் பின்புறமாக கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் குறித்த சடலம் சுமார் பத்து நாட்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சடலம் கொட்டாஞ்சேனையில் வைத்து இனந்தெரியாதோரினால் அண்மையில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞரின் சடலமாக இருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

நீதிமன்ற அனுமதியுடன் நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் தோண்டி எடுக்கப்பட்ட சடலம் இனங்காண்பதற்காக அவிசாவளை வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

- வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.