Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சம்பூர் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூர் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

திருகோணமலை மாவட்டம் சம்பூர் தமிழர் பிரதேசத்தை அதிஉயர் பாதுகாப்பு வலயமாக மகிந்த அரசாங்கம் பிரகடனம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சிறிலங்கா தலைமை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அதிஉயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்தை எதிர்த்து சம்பூரைச் சேர்ந்த 4 பேர் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை விசாரித்த சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என்.டி.சில்வா, இது போன்ற "உணர்வுப்பூர்வமான" விடயங்களை நீதித்துறை முன்பாக கொண்டுவரக் கூடாது என்றும் எச்சரித்த சரத் என்.டி.சில்வா, இத்தகைய மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டால் இதுபோன்ற 15 ஆயிரம் மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு விடும் என்றும் கூறினார்.

நீதித்துறையிடம் நீதி கோருவதற்கு முன்பாக உரிய நிர்வாக அதிகாரியிடம் முறைப்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் மனுதாரர்களுக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தல் விடுத்தார்.

பாரம்பரியமாக தாங்கள் வாழ்ந்து வந்த சம்பூர் பிரதேசங்களில் மீளக் குடியேற அனுமதிக்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூதூர் கிழக்கில் மீள்குடியேற அனுமதி கோரிய மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்தது

உயர்பாதுகாப்பு வலயமாக இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட மூதூர் கிழக்குப் பகுதியில் சென்று குடியேற அனுமதிக்குமாறு அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இலங்கை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கடந்த வருட மோதல்கள் காரணமாக, மூதூர் கிழக்கில் இருந்து வெளியேறி வேறு இடங்களில் தங்கியுள்ள மக்களால், தற்போது உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தமது இருப்பிடங்களில் சென்று வாழ்வதற்கு தாம் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரி 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களையே இலங்கை பிரதம நீதியரசர் தள்ளுபடி செய்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அடிப்படையில், அந்தப் பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்படல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய சூழ்நிலையில், அங்கு பொதுமக்களை மீளக் குடியமர்த்துவதற்கான முடிவை பாதுகாப்புப் படையினரே முடிவு செய்ய வேண்டும் என்றும், அதில் உயர் நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

- பிபிசி - தமிழழோசை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனம் மூதூர் மக்களின் மனு நிராகரிப்பு இனிமேல் தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்றம் தடை

மூதூர் கிழக்குப் பகுதியை அரசுப் படைகள் ஆக்கிரமித்துள்ள நிலையில், அப்பிரதேசத்தை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தி, அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேறவிடாமல் தடுத்திருக்கின்றது இலங்கை அரசு. இதை ஆட்சேபித்து அப்பகுதித் தமிழ் மக்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம் நேற்று, விசாரணைக்கு ஏற்காமல் தள்ளுபடி செய்தது.

இதுபோன்ற விண்ணப்பங்களை எதிர்காலத்தில் சமர்ப்பிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ள பிரதம நீதியரசர், அத்தகைய மனுக் கள் வந்தால் ஏற்க வேண்டாம் என உயர் நீதிமன்றப் பதிவாளருக் குத் தாம் உத்தரவிடுவார் என்றும் தெரிவித்திருக்கின்றார்.

பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, நீதியரசர்கள் ராஜா பெர்னாண்டோ, ஜெகத் பாலபட்டபெந்தி ஆகியோரைக் கொண்ட உயர்நீதிமன்ற ஆயமே இத்தீர்ப்பை நேற்று வழங்கியது.

மூதூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த நற்சிங்கம் சுந்தரலிங்கம், பொன் னையா இரத்தினசிங்கம், இராமுப்பிள்ளை நடராஜா, செல்லப்பா கோபா லகிருஷ்ணன் ஆகியோர் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவே நேற்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் யஸந்த கோத்தாகொட, இதேபோன்று இதே விவகாரத்துக்காக மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் சார்பில் அதன் நிறைவேற்று அதிகாரி பாக்கியஜோதி சரவணமுத்து தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு ஏற்கனவே உயர் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளமையை நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

ஆனால், அத்தகைய தீர்ப்பின் பிரதி தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றார் மனுதாரர் தரப்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கனகஈஸ்வரன்.

""பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காக்கவே அரசு இத்தகைய உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்தைச் செய்திருக்கின்றது.'' என்றார் அரசுத் தரப்பில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல்.

""அங்கு (மூதூரில்) புதிதாகக் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணி நடக்கின்றது. அது முடிய முன்னர் யாரும் அங்கு போக முடியாது. அதனால்தான் காலதாமதம் நீடிக்கின்றது. நிலைமை சீரானதும் மனுதாரர்கள் தமது இடங்களுக்குத் திரும்பலாம். மக்களை மீளக் குடியேற்றும் நடவடிக்கை எடுக்கப்படும்போது அதில் மனுதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இது தொடர்பாக மனுதாரர்கள், பிரதேச கட்டளையிடும் அதிகாரியும், அதிகாரமளிக்கப்பட்ட அலுவலருமான இராணுவப் பொறுப்பாளருடன் தொடர்பு கொண்டு தமது விவரங்களைப் பதிந்து வைத்துக் கொண்டால், மீள் குடியேற்றத்தின்போது அவர்களுக்கு நிச்சயம் முன்னுரிமை வழங்கப்படும். மக்களின் பாதுகாப்புக்கும் நலனுக்குமாகவே அரசு இந்த நடவடிக்கைகளை எடுக்கிறது.'' என்றார் அரசுத் தரப்பு வாதி.

அதை மனுதாரர் தரப்பு சட்டத்தரணி மறுத்துரைத்தார்.

""அங்கு கண்ணிவெடிகள், மிதிவெடிகள் புதைக்கப்படவில்லை. இராணுவ நடவடிக்கைகளையொட்டி மேற்கொள்ளப்பட்ட அகோர பீரங்கி, மோட்டார், ஷெல் தாக்குதல்கள் காரணமாகவே மக்கள் அங்கிருந்து இடம்பெயர வேண்டியதாயிற்று. தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ள வெளியேற்றப்பட்டுள்ள சூழலில் அங்கு மாற்று இனத்தவரைப் பெரும் எடுப்பில் குடியேற்றும் திட்டடங்கள் நடைமுறைப்படுத்தப்படலாம் என மனுதாரர்கள் அஞ்சுகின்றனர். கிழக்கில் அதிகாரமளிக்கப்பட்ட கட்டளைத் தளபதிக்குப் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்கள் திரும்பி விட்டன. அவர் எங்கிருக்கின்றார்? அவருடன் தொடர்புகொள்ள அவரின் விலாசம் என்ன?'' என்று வாதிட்டுக் கேள்வி எழுப்பினார் சட்டத்தரணி கனக ஈஸ்வரன்.

""படை அதிகாரியின் விலாசம் உணர்வு பூர்வமான சிக்கலுக்குரிய விவகாரம். அதைத் தரமுடியாது. '' என்றார் அரச சட்டத்தரணி.

""அப்படியானால் இந்த அதிகாரி கண்ணால் பார்க்க முடியாத, அரூபமானவரா? அவருக்கான கடிதங்களை இனிமேல் "யஸந்த கோத்தாகொட, பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மேல் பார்த்து' என்ற விலாசத்துக்குத்தானா தமிழ் மக்கள் அனுப்ப வேண்டும்?'' என வினாவெழுப்பினார் மனுதாரர் சட்டத்தரணி.

இரு தரப்பு வாதங்களைச் செவிமடுத்த பிரதம நீதியரசர், மேற்படி மனுவை விசாரிப்பதில் அர்த்தமில்லை என்று தெரிவித்து அதை நிராகரித்தார்.

இதே விவகாரத்துக்காக இது போன்ற வழக்கெதனையும் தாக்கல் செய்யவேண்டாம் என்று கடிந்து கொண்ட பிரதம நீதியரசர், இவ்விடயம் இத்துடன் முடிவுறுத்தப்பட்டு விட்டதால், எதிர்காலத்தில் இது போன்ற இதே அடிப்படையில் அமைந்த மனுக்களை ஏற்க வேண்டாம் என உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் கே. கனக ஈஸ்வரன், எம்.ஏ. சுமத்திரன் ஆகியோர் சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அனுசரணையுடன் ஆஜரானார்கள்.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.