Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய ஊடகத்திற்கு வழங்கியுள்ள பேட்டியில் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஊடகத்திற்கு வழங்கியுள்ள பேட்டியில் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளது என்ன?

 

 

 
1
உங்கள் செய்தியை தெரிவித்துவிட்டீர்கள் – இனி அமைதியாகயிருங்கள் – தொடர்ந்து போராடுவதால் பிரயோசனமில்லை
murali11.jpg
இலங்கை மாத்திரமல்ல- பாக்கிஸ்தானை பாருங்கள் அனேகமான நாடுகள் நிதிநெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

கொவிட் பாதித்தது-

சுற்றுலாப்பயணிகள் வரவில்லை

இலங்கையில் தற்போது காணப்படுவது எரிபொருள் நெருக்கடியே

தவறான நிர்வாகமும் காரணம்

மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட உரிமையுள்ளது

இந்தியாவின் நியுஸ் எக்சிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளீதரன் பின்வரும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கை மாத்திரமல்ல- பாக்கிஸ்தானை பாருங்கள் அனேகமான நாடுகள் நிதிநெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
நான் நிபுணர் இல்லை நான் பொருளாதார நிபுணண் இல்லை- பொது அறிவு அடிப்படையிலும் – ஒரு வர்த்தகர் என்ற அடிப்படையிலும் -ஒரு கிரிக்கெட் வீரர் விளையாட்டு வீரர் என்ற அடிப்படையில் எனக்கு இந்த விடயங்கள் குறித்து ஓரளவு தெரிந்திருக்கின்றது – எனது அறிவிற்குட்பட்ட வகையில் இரண்டு காரணங்கள் உள்ளன-
என்னால் உங்களிற்கு தெளிவுபடுத்த முடியும் இது இரண்டு வருட கொவிட்- எங்கள் நாட்டை முழுமையாக பாதித்தது- இலங்கை சுற்றுலாபயணிகள் செல்லும் நாடு – இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளை அடிப்படையாக வைத்தே நாங்கள் அதிக வெளிநாட்டு வருமானத்தை பெறுகின்றோம்.
கடந்த இரண்டு வருடங்களில் சுற்றுலாப்பயணிகள் வருகையே இல்லாத நிலை காணப்பட்டதுஇ மேலும் நாங்கள் கொவிட்டிற்காக அதிக நிதியை செலவிடநேர்ந்தது-நோயாளிகளின் மாதிரிகளை எடுப்பது தடுப்பூசிகள் போன்றவற்றிற்கு – பெருமளவு பணம் அதற்கு செலவானது.
ஏற்றுமதிகள் போதியளவு இடம்பெறவில்லை-இறக்குமதிகள் கூட குறைக்கப்பட்டுள்ளன-அவ்வேளை எண்ணெய் விலை பத்து டொலருக்கு சென்றதால் நாங்கள் தப்பினோம்.
Muttiah-Muralitharan-300x156.jpg
இலங்கையில் தற்போது காணப்படுவது முக்கியமாக எண்ணெய் நெருக்கடி – உணவு நெருக்கடியில்லை-எரிசக்தி நெருக்கடியே அங்கு காணப்படுகின்றது-உக்ரைன் மீதான ரஸ்யாவின் யுத்தத்தின் பின்னர் எண்ணெய் விலைகள் 130 டொலராக அதிகரித்தன-நாங்கள் இறக்குமதி செய்யப்படும் எண்ணையை நம்பியுள்ளோம் எதனையும் உற்பத்தி செய்வதில்லை-
ஆகவே எரிபொருள் உற்பத்திக்கு அதனை நம்பியிருக்கவேண்டியுள்ளது.
தவறான நிர்வாகமும் காரணம் என நான் தெரிவிக்கவேண்டும்இஇவை அனைத்துக்கும் கொவிட் எரிபொருள் போன்றவை தான் காரணம் என நான் தெரிவிக்கவில்லை.
அரசாங்கத்தின் தவறான நிர்வாகமும் உள்ளதுஇஅவர்கள் வளங்களை உரிய முறையில் நிர்வகிக்கவில்லை. இரண்டு வருடங்களாக. இதன் காரணமாகவே இந்த நிலை – நிபுணர்கள் இதனை தெரிவிக்கின்றனர்.
எனது அறிவிற்கு உட்பட்ட விதத்தில் சிலநேரங்களில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு மாதாந்தம் 100 மில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றது-தீடிரென அது ஐந்து மடங்காக அதிகரிக்கின்றது – 500 மில்லியன் டொலர்கள் -தீடிரென அவ்வாறன பணத்தை செலவிடுவதற்கு எங்களிடம் ஏற்றுமதி எதுவும் இருக்கவில்லைஇஅதன் பின்னர் அது நெருக்கடியான நிலையாக மாறியது – பெட்ரோல் இருந்ததுஇஆனால் டீசல் கிடைக்காது பொதுப்போக்குவரத்து வர்த்தகம் உட்பட அனைத்தும் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்ததுஇ
பெரும் பிரச்சினை என்னவென்றால் மின்வெட்டு- 3 அல்லது 4 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டவேளை மக்கள் அதனை சமாளித்தார்கள் ஆனால் – 12-13 மணிநேரம் என்பது தாங்க முடியாதது ஏனென்றால் உங்களால் எதனையும் செய்ய முடியாது- ஏனென்றால் நீங்கள் ஒரு நாளின் பெரும்பகுதி நேரம் இருளிலேயே இருக்கின்றீர்கள்-
இந்த நிலை எப்படி உருவானது – நிறைய தவறான நிர்வாகம் – நிதிவிடயங்கள் குறித்து அவர்கள் திட்டமிடவில்லை
மக்கள் சர்வதேசநாணயநிதியம்குறித்து பேசுகின்றார்கள் – நாங்கள் சர்வதேச நாணயநிதியத்திடம் செல்லவில்லை-
இந்தியா எங்களிற்கு உதவ வந்துள்ளது இதனை நான் மனதார பாராட்டுவேன்- ஏனென்றால் வரலாற்றில் எப்போதும் இந்தியா வே எங்களிற்கு உதவியுள்ளது ஆகவே நான் இந்திய பிரதமருக்கும் மக்களிற்கும் அனைத்து வர்த்தகர்களுக்கும் எங்களிற்கு ஆதரவளித்தமைக்காக தனிப்பட்டi முறையில் நன்றியை தெரிவிப்பேன்.இதன் காரணமாகவே நாங்கள் சிறிதளவு தப்பியிருக்கின்றோம்.
நாங்கள் இந்த பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டும் மக்கள் நம்பி;க்கையற்ற நிலையில் உள்ளனர்இஅவர்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து போராடினார்கள்.
கடந்த ஐந்து ஆறு நாட்களாக நிலைமை மோசமாக உள்ளது-அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதுஇ அரசியல் ரீதியாக பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன.
இது ஆர்ப்பாட்டங்களி;ல ஈடுபடுவதற்கா உரிமை என நான் தெரிவிப்பேன்
அவர்கள் செய்தது சரி ஆனால் இது தொடரக்கூடாது இதற்கான தீர்வுகளை காணவேண்டும்.
எரிசக்திக்கு நெருக்கடிக்கு உடனடிதீர்வை காணவேண்டும் என நான் தனிப்பட்ட முறையில் கருதுகின்றேன்.
FP0g2Y-VgAUsUp7-225x300.jpg
மக்கள் முற்றாக நம்பிக்கையற்ற நிலையில் உள்ளனர் கடந்த சில வாரங்களாக அவர்கள் அதனை வெளிப்படுத்தியுள்ளனர்.
அரசாங்கம் அதனை நன்கு புரிந்துகொண்டுள்ளது – விளங்கிக்கொண்டுள்ளது- தாங்கள் இதற்கு தீர்வை காணவேண்டும் என்பது அரசாங்கத்திற்கு தெரியும்.
இந்த செய்தியை தெரிவித்தாகிவிட்டது தற்போது நீங்கள் தொடர்ந்தும் வீதியி;ல் இறங்கினால் நாட்டின் ஒரு விடயத்தை அது பாதிக்கும். சுற்றுலாத்துறை.
அரசியல் ரீதியாக சிந்திக்காதீர்கள் – அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் சிந்தியுங்கள் -ஒரு தேசம் – உதவுவதற்கு இந்த தருணத்தில் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றால் நாங்கள் அமைதியாக இருக்கவேண்டும் – நாங்கள் செய்தியை அரசாங்கத்திற்கு தெரிவித்துவிட்டோம்.
அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் – சரியான விடயங்களை செய்யவேண்டும்இகுறுகிய காலத்தில் செய்யவேண்டும் – குறுகிய காலநீண்டகால திட்டங்களை அவர்கள் முன்னெடுக்கவேண்டும்.
பொதுமக்களை அமைதியாக இருக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்-
அதன் பின்னர் சுற்றுலாத்துறை மீண்டும் வளர்ச்சியடையும் அந்த பணம் பொருளாதாரத்திற்கும் இந்த பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் உதவும்.
தொடர்ந்து போராடுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை-ஏனென்றால் அனைத்து செய்திகளும்உரிய இடத்தை சென்றடைந்துவிட்டன-அமைச்சரவை கலைக்கப்பட்டுவிட்டது – அரசாங்கம்என்ன செய்யப்போகின்றது அமைச்சரவை என்ன செய்யப்போகின்றது என்பது எனக்கு தெரியாது- நிச்சயமற்ற தன்மை நிலவுகின்றது – ஆனால் அரசாங்கத்தை யார்அமைத்தாலும் ( அரசாங்கம் அல்லது எதிர்கட்சி) நாங்கள் அவர்களிற்கு உதவவேண்டும்:இ அதன் பின்னரே நாங்கள் சர்வதேச நாணநிதியத்திற்கு செல்ல முடியும்இ நாங்கள் அரசியல்ரீதியாக வலுவாக இருக்கவேண்டும் – ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இடம்பெறக்கூடாது அப்படியான நிலை காணப்பட்டால் மாத்திரமே அவர்கள் எங்களிற்கு நிதி வழங்குவார்கள்
ஆகவே நாங்கள் செய்தியை தெரிவித்துவிட்டோம் – அமைதியாகயிருங்கள் அவர்கள் எப்படி பதிலளிக்கின்றார்கள் என பார்ப்போம்.

தமிழில் தினக்குரல் இணையம்

Thinakkural.lk

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, nunavilan said:

இலங்கையில் தற்போது காணப்படுவது முக்கியமாக எண்ணெய் நெருக்கடி – உணவு நெருக்கடியில்லை-எரிசக்தி நெருக்கடியே அங்கு காணப்படுகின்றது

இவரது அறிக்கையை காணவில்லை என்று தேடியவர்களுக்கான பதிலை தந்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தன்னை வியாபாரி என்று ஏற்றுக்கொண்டபின்னர் வேறு பதிலை எதிர்பார்க்க முடியாதல்லவா ?

ஆனால் அரசிற்கு எதிரான போராட்டத்தில் எத்தனையோ முன்னாள் இன்னாள் வீரர்கள் ஈடுபடும்போது இவருக்கு மட்டும் BBC முக்கியத்துவம் கொடுப்பதன் நோக்கம் என்ன ? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2008 ல் என நினைக்கிறேன். சி என் என் பேட்டி கண்டது ஒரு  ஈ பி டி பின் உறுப்பினரை. எத்தனையோ மக்கள் போரினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் பேட்டி எடுத்தது யாரையோ?
இதற்குள் ஊடக தர்மம் என்று வகுப்பு எடுப்பு (CNN)வேறு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.