Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தஞ்சாவூர் களிமேடு தேர்த் திருவிழா விபத்து: 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சாவூர் தேர்த் திருவிழாவில் திடீர் விபத்து

தஞ்சாவூர் அருகேயுள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தஞ்சாவூர் அருகேயுள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் தேரின் மேல் பகுதி உயர் மின்அழுத்தக் கம்பியில் உரசி விழுந்ததால் ஏற்பட்ட மின் விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்துக்கான கோயில் உள்ளது. ஆண்டுதோறும் அப்பர் பிறந்த நட்சத்திரமான சதய நட்சத்திர தினத்தில் இங்கே விமர்சையாக சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை திருவிழா தொடங்கியிருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இரவு 10 மணிக்கு ஆரம்பமாகியிருக்கிறது.

உயர் மின்னழுத்த கம்பியில் மோதி தீப்பிடித்த தேர்
 
உயர் மின்னழுத்த கம்பியில் மோதி தீப்பிடித்த தேர்

சுமார் 15 அடி உயரம்கொண்ட பல்லக்கு எனப்படும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அப்பர் உற்சவர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். அலங்கார மின் விளக்குகள் எரிவதற்காகத் தேரின் பின்புறம் பெரிய ஜெனரேட்டர் வசதியும் செய்திருந்தனர். ஊர்ப் பெரியவர்கள், சிறுவர்கள் எனப் பலரும் தேரை வடம் பிடித்து ஊர் முழுக்க இழுத்துச் சென்றனர். ஒவ்வொரு வீட்டிலும் தேங்காய் உடைத்து வழிபட்டுள்ளனர்.

ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் இதை மகிழ்ச்சியாகக் கொண்டாடிவந்துள்ளனர். தேர் ஊர்வலம் கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்திருக்கிறது.

விபத்துக்குள்ளான தேர்
 
விபத்துக்குள்ளான தேர்

இந்நிலையில் அப்பர் மடத்துக்குச் செல்வதற்காகச் சாலையின் வளைவில் தேரை இழுத்துள்ளனர். அப்போது அருகே இருந்த பள்ளத்தில் தேரின் சக்கரம் இறங்கியுள்ளது. தேர் நின்ற இடத்துக்கு மேற் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பி சென்றுள்ளது. தேர் சாய்ந்த நிலையில் அதன் மேல் பகுதி உயர் மின் அழுத்த மின் கம்பியில் உரசியது.

மருத்துவமனையில் அதிகாரிகள் பார்வையிட்டனர்
 
மருத்துவமனையில் அதிகாரிகள் பார்வையிட்டனர்

இதில் தேரில் மின்சாரம் பாய்ந்ததில் தேர் தீப்பிடித்து எரிந்துள்ளது. ஆண்கள் சிறுவர்கள் எனப் பலரும் அலறியடித்துக்கொண்டு ஓடினர். மின்சாரம் பாய்ந்த பலர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தனர்.

தேர் வருவதற்காகச் சாலையில் தண்ணீர் ஊற்றியுள்ளனர் அதிலும் மின்சாரம் பாய்ந்திருக்கிறது. இரவு சுமார் 3 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், அந்த இடத்திலேயே 10 பேர் வரை உயிரிழந்தனர். மின் விபத்தில் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர், எஸ்.பி ரவளி பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் மருத்துவக் கல்லூரிக்கு வந்து பார்வையிட்டனர்.

மூன்று சிறுவர்கள்  உட்பட 11 பேர் உயிரிழந்த சோகம்
 
மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சோகம்

இந்த விபத்தில் மூன்று சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பத்துக்கும் மேற்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஊர் மக்கள் அனைவரும் மருத்துவமனை முன்பு திரண்டு கதறி அழுதது பார்ப்பவர்கள் மனதை உலுக்குவதாக இருந்தது. உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் உடலைப் பார்த்துக் கதறினர். `ஒரு நிமிஷம்கூட என் மகனை விட்டுட்டு இருக்க மாட்டேனே... என் புள்ளை என்கூட இல்லையே’ என்று மார்பில் அடித்துக்கொண்டார் ஒரு தாய். 94-வது ஆண்டாக இந்தத் தேர்த் திருவிழா நடைபெற்றுவருகிறது. இதுவரை ஒரு சிறு அசம்பாவிதம்கூட ஏற்பட்டதில்லை. இந்த முறை ஆறாத வடுவை ஏற்படுத்தும் அளவு விபத்து ஏற்பட்டுவிட்டதாக ஊர்ப் பெரியவர்கள் கண்கலங்கியபடி பேசிக்கொண்டனர்.

தஞ்சாவூர் களிமேடு தேர்த் திருவிழா விபத்து: 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி - நடந்தது எப்படி?| In Thanjavur, including 3 children, 11 people dead by Electrical accident during village festival (vikatan.com)

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியாக… முடிந்து இருக்க வேண்டிய விழா,
11 பேரின் உயிரை பறித்துக் கொண்டு முடிந்து விட்டது.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதே விபத்துக்கள் எமது பகுதிகளிலும் தொடர வாய்புள்ளது..கவன்யீனம் மிகையாகவுள்ளது...பக்திப் பரவசமும் கூடவாகவுள்ளது...மின்சரா இணைப்புக்களுக்கு...இரும்ப்புப் பைப்புகள்..பாவிப்பது..அதனை கனயீனமாக உயர்த்துவது..அபாயகரமானது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.