Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும்... கோட்டா கோ கமவில், தொடரும்... போராட்டம் – இன்றுடன் 21 நாட்கள் நிறைவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கோட்டா கோ கமவில் தொடரும் போராட்டம் – இன்றுடன் 21 நாட்கள் நிறைவு!

கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும்... கோட்டா கோ கமவில், தொடரும்... போராட்டம் – இன்றுடன் 21 நாட்கள் நிறைவு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலிலும், அலரி மாளிகை வளாகத்திலும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் இன்றைய தினமும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, காலி முகத்திடலில் இன்று(வெள்ளிக்கிழமை) 21 ஆவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு அப்பால் இந்த போராட்டத்தில் மேலும் பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய கடந்த காலங்களில் காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாதைகளும் இந்தப் போராட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கோட்டா கோ கம எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் தொடர்ச்சியாக கலந்து கொண்டு இரவு – பகலாக அரசாங்கத்திற்கு எதிராக கோஷமெழுப்பி வருகின்றனர்.

தேசியக் கொடிகளை ஏந்தியும், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிராக பதாதைகளை ஏந்தியும் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தப் போராட்டத்தின் காரணமாக, ஜனாதிபதி செயலக வளாகம் மற்றும் அதனை அண்டியப் பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

WhatsApp-Image-2022-04-29-at-9.56.37-AM-1.jpeg

WhatsApp-Image-2022-04-29-at-9.56.39-AM.jpeg

WhatsApp-Image-2022-04-29-at-9.56.40-AM.jpeg

WhatsApp-Image-2022-04-29-at-9.56.43-AM.jpeg

WhatsApp-Image-2022-04-29-at-9.56.45-AM.jpeg

அதேநேரம், பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு முன்பாகவும் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மைனா கோ கம என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இடத்தில், பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டக்காரர்களின் கோஷங்களை முடக்கும் வகையில், அலரிமாளிகையில் ஒலிப்பெருக்கி ஊடாக மிகவும் சத்தமாக பிரித் ஓதப்பட்டு இடையூறு விளைவிக்கப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.

அதேநேரம், இங்குள்ள போராட்டக்கார்களுக்கு எதிராக, குறித்த பகுதியின் நடைப்பாதைகளில் பொலிஸார் பஸ்கள் உள்ளிட்ட பொலிஸ் வாகனங்களையும் நிறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த வாகனங்கள் மீது போராட்டத்தில் ஈடுபடுவோர் அரசாங்கத்திற்கு எதிரான பதாதைகளைக் காட்சிப் படுத்தியமையால், இன்று காலை போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலைமையொன்றும் ஏற்பட்டது.

குறித்த பதாதைகளை பொலிஸ் வாகனங்களிலிருந்து அப்புறப்படுத்துமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை போராட்டக்காரர்கள் ஏற்காதமையினாலேயே இந்த சலசலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, பொலிஸார் குறித்த பதாதைகளை அப்புறப்படுத்தியதோடு, போராட்டக்காரர்களை அங்கிருந்து செல்லுமாறும் அறிவித்தனர்.

எவ்வாறாயினும், குறித்த பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp-Image-2022-04-29-at-9.55.57-AM.jpeg

WhatsApp-Image-2022-04-29-at-9.55.58-AM-1.jpeg

 

WhatsApp-Image-2022-04-29-at-9.55.58-AM-2.jpeg

WhatsApp-Image-2022-04-29-at-9.55.59-AM-1.jpeg

WhatsApp-Image-2022-04-29-at-9.55.59-AM-2.jpeg

WhatsApp-Image-2022-04-29-at-9.56.00-AM-1.jpeg

 

WhatsApp-Image-2022-04-29-at-9.56.00-AM.jpeg

WhatsApp-Image-2022-04-29-at-9.56.01-AM.jpeg

https://athavannews.com/2022/1279086

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

கடந்த காலங்களில் காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாதைகளும் இந்தப் போராட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இது உக்ரேயின், ரஷ்ய போர்போல தொடர்ந்தால் அடுத்து முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட கொடூர புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டு இராணுவத்தினரின் முகத்திரைகள் கிழிக்கப்படலாம். ஒருவேளை அதற்காத்தான் இவ்வளவு காலம் இந்த ஆர்ப்பாட்டம் இழுப்படுகிறதோ? அந்த அவலம் இங்கும் நடந்தேறியிருக்கும் மாட்டுப்பட்டு போய்விடுவோம் என்று கையை கஷ்ரப்பட்டு கட்டிக்கொண்டு இருக்கினம். காலம் நினைத்தால் அந்த நிலைக்கு வலிந்து இழுத்து செல்லும்  இவர்களை.

சந்தடி சாக்கில, கோத்தாவின் ஆதரவாளர்கள் எவராவது இந்த திடலில் புலிக் கொடி ஒன்றை ஏற்றிவிட்டால் அவ்வளவுதான். காலிமுகத் திடல் போராட்டமும் முடிவுக்கு வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

சந்தடி சாக்கில, கோத்தாவின் ஆதரவாளர்கள் எவராவது இந்த திடலில் புலிக் கொடி ஒன்றை ஏற்றிவிட்டால் அவ்வளவுதான். காலிமுகத் திடல் போராட்டமும் முடிவுக்கு வரும்.

கோத்தாவின்... கடைசி ஆயுதம், அதுதானோ தெரியாது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் கடைசி மட்டுமல்ல, முழுமுதல் ஆயுதமே அதுதான். ஆனால் அது எடுபடுவதாக இல்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் மிகவும் நிதானமாக, இவர்களின் தந்திரமெல்லாம் தெரிந்தவர்களாக     செயற்படுகிறார்கள்.  வடக்கு  மக்கள்  தங்களுக்கு  ஆதரவாக  போராட்டம்  செய்வதை பாராட்டியிருக்கிறார்கள், இன்னொரு இடத்தில கடந்த காலத்தில்   தமிழர் பற்றிய தமது தவறான கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார் ஒருவர். சிங்கள்மக்கள் மத்தியில் வாழ்வது பாக்கியம் என்று சொல்லி புகழாமல், போக்கிடமத்து  அடிவாங்கி களைத்து, வெறுத்து போக்கிடமத்து கொழும்பையே பூர்வீகமாக கொண்ட தமிழர் உணர்ச்சிவசப்பட்டு இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கி எமது உண்மை நிலைமையை சிங்களத்துக்கு உணரவைக்க முயற்சிப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.  உண்மையிலேயே சிங்களவர் மனம் மாறினால் அது நல்ல சமிக்ஞையே. ஆனால் அப்படியான மாற்றம் சிங்கள பவுத்தத்துக்கு உவப்பானதாக இருக்காது.

அவசரத்தில் கோத்தா கோமாவில், தொடரும் போராட்டம் என்று விளங்கிபோட்டேன்.                            

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே  சிங்கள மக்கள் மனம் வருந்துபவர்களாக இருந்தால்; இந்தமுறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து  நம் மாவீர செல்வங்களின் கல்லறைகளில் கண்ணீர் விடவேண்டாம், தமது வருத்தத்தை தெரிவித்து காட்டட்டும்! அதுவே உண்மையான மனமாற்றம்.

                            

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.