Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோட்டா கமவை, தாக்குவதற்காக... கைதிகளும் அழைத்து வரப்பட்டனர்? 58 கைதிகள்... தற்போது, காணாமல் போயுள்ளர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

UPDATE -தாக்குதலைக் கண்டித்து கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் போராட்டம்!

கோட்டா கமவை, தாக்குவதற்காக... கைதிகளும் அழைத்து வரப்பட்டனர்?

கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தாக்குவதற்காக கைதிகளும் அழைத்து வரப்பட்டதாக  சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கமவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களை தாக்குவதற்காக அரசாங்கத்துடன் இணைந்த குழுக்கள் பல்வேறு சிறைகளில் இருந்து சிறைக் கைதிகளையும் அழைத்து வந்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட பின்னர் பல கைதிகள் சிறைபிடிக்கப்பட்ட காணொளிகள் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1281011

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

UPDATE -தாக்குதலைக் கண்டித்து கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் போராட்டம்!

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களில்... கைதிகளின் பங்கேற்பு குறித்து, சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!

கொழும்பில் நேற்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களில் கைதிகளின் பங்கேற்பு குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

வட்டரெக்க திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் உள்ள கைதிகளும் தாக்குதல் நடத்தியவர்களில் ஒரு பகுதியினர் என்று கூறப்படும் செய்திகளை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க மறுத்துள்ளார்.

சிறைச்சாலை திணைக்களத்தின் வழமையான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தின் கீழ் 3 கட்டுமான தளங்களில் புனர்வாழ்வு பணிகளுக்காக வட்டரெக்க சிறைச்சாலையில் இருந்து 181 கைதிகள் சிவில் உடையில் கொண்டுசெல்லப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த கைதிகள் நேற்று கொள்ளுப்பிட்டி, ராஜகிரிய மற்றும் பத்தரமுல்லை ஆகிய இடங்களில் உள்ள இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பும்போது பொதுமக்களால் தாக்கப்பட்டதாக சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

நேற்று மாலை தலஹேன பகுதியில் கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்தில் இருந்து பொதுமக்கள் அப்புறப்படுத்தியதாகவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறினார்.

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) தலைமையிலான கொழும்பில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களில் கைதிகள் அங்கம் வகித்தவர்கள் என நினைத்து பொதுமக்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுமானப் பணிகளுக்கு அனுப்பப்பட்ட 181 கைதிகளில் 58 கைதிகள் தற்போது காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கைதிகள் யாரேனும் உதவிக்காக தம்மை அணுகினால் அவர்களுக்கு உதவுமாறும் அவர்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் சந்தன ஏக்கநாயக்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

https://athavannews.com/2022/1281157

Edited by தமிழ் சிறி

  • தமிழ் சிறி changed the title to கோட்டா கமவை, தாக்குவதற்காக... கைதிகளும் அழைத்து வரப்பட்டனர்? 58 கைதிகள்... தற்போது, காணாமல் போயுள்ளர்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுமானப் பணிகளுக்குச் சென்ற 58 கைதிகள் காணாமல்போயுள்ளனர் – சிறைச்சாலைகள் ஆணையாளர்

கட்டுமானப் பணிகளுக்குச் சென்ற... 58 கைதிகள், காணாமல் போயுள்ளனர் – சிறைச்சாலைகள் ஆணையாளர்

புனர்வாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுமானப் பணிகளுக்குச் சென்ற 58 கைதிகள் காணாமல் போயுள்ளனர்.

சிறைச்சாலைக்கு மீண்டும் திரும்பும் வழியில் அவர்கள் காணாமல்போனதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஆர்ப்பாட்டக்காரர்களால் சிறைச்சாலை பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டபோதே இவர்கள் காணாமல்போனதாக அவர் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1281130

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தமிழ் சிறி said:

புனர்வாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுமானப் பணிகளுக்கு அனுப்பப்பட்ட 181 கைதிகளில் 58 கைதிகள் தற்போது காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்

எங்கே? கோத்தா கோகமவில் கட்டுமானப்பணியா? பொய்க்கும் ஒரு அளவு வேணும். அது நாடி நரம்பெல்லாம் ஊறிப்போச்சு. பழக்க தோஷத்தில வந்துடுது.

  • கருத்துக்கள உறவுகள்

கைதிகள் காணாமல் போனார்கள் என கதை விடுகிறார்கள். அதுவும் இந்த கலவர நேரம் காணாமல் போயுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

கைதிகள் காணாமல் போனார்கள் என கதை விடுகிறார்கள். அதுவும் இந்த கலவர நேரம் காணாமல் போயுள்ளார்கள்.

உண்மை வெளிவந்திடுமென கதை சுத்துறாங்கள். இவர்களே முடித்து விட்டு சொல்லுவார்கள். காணாமற்போன இராணுவம் என்று கதை கட்டி ஏமாத்தலையே? அப்பிடித்தான் இதுவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, outdoors and text that says '58 சிறைக்கைதிகளை காணவில்லை! தகலறிந்தால் அறிவிக்குமாறு கோரிக்கை สวลගර බලස්තත්ය ச்சாணிடக இங்கதான் சார் இருக்கம் சீக்கிரமா வந்து கூட்டிட்டு போங்க சார்'

58 பேரும்... இங்கைதான் இருக்கிறம். சீக்கிரம் வந்து... கூட்டிக்கிட்டு போங்க சார். 🤣

அடிச்சுக்  கூட கேப்பாக... அப்பயும் சொல்லிடாதீக.... 😂

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கும் கேக்காது. கேட்டாலும் யாரும் உதுக்குள்ள விழ விரும்ப மாட்டார். உங்கள் மேல் வழக்கு தொடர வாய்ப்புள்ளது! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.